மயிலிட்டி மக்கள் ஒன்றியம் பிரான்ஸ்
  • நல்வரவு 2023
    • நல்வரவு 2022
    • நல்வரவு 2021
    • நல்வரவு 2020
    • நல்வரவு 2019
    • நல்வரவு 2018
    • நல்வரவு 2017
    • நல்வரவு 2016
    • நல்வரவு 2015
    • நல்வரவு 2014
    • நல்வரவு! 2013, 12, 11
  • ஆலயங்கள்
    • மருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் >
      • ஆலய வரலாறு
      • பரிபாலன சபையினர்
    • காணிக்கை மாதா தேவாலயம்
    • ஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்
    • முனையன் வளவு முருகையன் ஆலயம்
  • கவிதைகள் / ஆக்கங்கள்
    • சண் கஜா (மயிலைக் கவி) படைப்புக்கள் >
      • சண் கஜா (மயிலைக் கவி) படைப்புக்கள் >
        • கிளாலி பயணம்
        • முறிகண்டி பிள்ளையார்
        • "காலங்கடந்த ஞானமிது"
        • "கோரத் தாண்டவம்"
        • "காலப் பெருவெளியில்"
    • நாகேந்திரம் கருணாநிதி
    • அருண்குமார் குணபாலசிங்கம்
    • அஞ்சலி வசீகரன்
    • மகிபாலன் மதீஸ்
    • மயிலையூர் தனு
    • அகஸ்ரின் இரவீந்திரன்
    • Image Gautham
    • தயாநிதி தம்பையா
    • மயிலை துரை
    • ஐங்கரன் படைப்புக்கள்
    • "மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்"
    • சுதா நவம் படைப்புக்கள்
    • வசந்த் சகாதேவன் படைப்புக்கள்
    • ஜெயராணி படைப்புக்கள் >
      • தொலைந்த ஏக்கங்கள்
      • வாழ்வின் பயம்
      • நானும் என் தேவதையும்
    • Dr. ஜேர்மன் பக்கம் >
      • "உலக மங்கையர் தினம்!"
      • சிந்தனை வரிகள் Dr. Jerman
    • அன்ரன் றாஜ் படைப்புக்கள்
    • சாந்தன் படைப்புக்கள் >
      • "சாந்தன் படைப்புக்கள்"
      • "சிந்தனை வரிகள் நமக்கு"
      • "ரோஜா மலரே"
      • "பெண்"
      • "பணம்"
      • "ரிசானா"
      • "புத்தாண்டே வருக! 2013"
      • "சுனாமி"
      • "உறவுகள்"
      • "கடல் அன்னை"
      • "சிந்தனை உலகம்"
      • "மயிலையின் பெருமை"
      • "மனம் கவர்ந்தவளே"
      • "சொர்க்கபூமி"
      • "கருவில் சுமந்தவளே"
      • "போராட்டம்!"
      • "சிந்தனை வரிகள்"
      • "என் கவிதை"
      • "சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே!"
      • "பசுமை மலரும் நிச்சயம்"
      • "தென்றல்"
      • "காதலியே"
      • "அப்பா"
      • "ஏக்கம்"
      • "இறைவனின் சாபம்!"
      • "புத்தாண்டே வருக! 2012"
      • "அம்மா!"
      • "தவிப்பு"
      • "ஆசை"
      • "மயிலை மண்ணே"
      • "அழகு"
      • "நிம்மதி"
    • அருண்குமார் படைப்புக்கள் >
      • இருண்டுபோன நாளின் நினைவுகள்!
      • "சமர்ப்பணம்"
      • "மீண்டும் வாழ வழி செய்வோம்"
      • "நினைவுகள் 2" "மடம்"
      • "நினைவுகள் 1" "மண்சோறு"
      • "நான் பிறந்த மண்ணே !"
    • அல்விற் வின்சன் படைப்புக்கள் >
      • "சிவராத்திரியும் கத்தோலிக்கமும்"
      • "முதல்பிரிவு"
      • "பாட்டன் வழி நிலம் வேண்டும்"
      • "வசந்தம்"
      • "உலக பெண்கள் தினம்!"
      • "தனித்திருப்பாய்!"
      • "என் தாய்"
      • வாழ்த்து Myliddy.fr
      • "ஊறணி" மண்ணின் நினைவு
    • ஜீவா உதயன் படைப்புக்கள் >
      • "அம்மா"
      • "தேடல்"
      • "அழகிய நாட்கள்"
      • "கவிஞர்களே"
      • "தாயே என்றும் எனக்கு நீயே!"
    • ஜீவா உதயன் படைப்புக்கள்
    • கௌதமன் படைப்புக்கள்
    • சங்கீதா தேன்கிளி படைப்புக்கள் >
      • சங்கீதா தேன்கிளி
      • "புலம்பெயர்ந்தோர் கவனத்திற்கு.."
      • "எங்கள் மயிலை மண்"
      • "பனங்கள்ளு"
      • "மின்னல்களால் இழைக்கப்பட்ட பூமி"
    • குமரேஸ்வரன் படைப்புக்கள் >
      • "என்ன வாழ்க்கை இது"
      • "தாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்"
      • "பனங்கள்ளு"
      • "தேன் கூடு"
      • "வீச்சுவலை"
    • கவின்மொழி படைப்புக்கள் >
      • "கட்டுமரம்"
      • யுகமாய் போன கணங்கள்!
    • கௌசிகனின் படைப்புக்கள்! >
      • "பூமிக்கு வந்த புது மலரே"
      • "மயிலை மண்ணில்"
      • "இயற்கைக் காவலன்"
      • "வீச்சுவலை"
      • "தேன்கூடே.... தேன்கூடே...."
      • "என் இனிய கருமரமே..."
      • "எங்கள் மயிலை மண்"
    • படம் என்ன சொல்கின்றது... >
      • "பனங்கள்ளு"
      • "வீச்சுவலை"
      • "தேன் கூடு"
      • "பனைமரம்"
      • "கட்டுமரம்"
  • சிறப்புத் தினங்கள்
    • Womens day 2015
    • மகளிர் தினம் 2014 >
      • மகளிர் தினம் 2013 >
        • "பெண்"
        • "உலக மங்கையர் தினம்!"
        • "உலக பெண்கள் தினம்!"
      • மகளிர் தினம் 2012
    • NELSON MANDELA
    • தந்தையர் தினம்
    • அன்னையர் தினம் >
      • அன்னையர் தினம்
    • மே தினம்
    • சுனாமி 2013 >
      • சுனாமி 2012
  • மரண அறிவித்தல்கள் 2023
  • வாழ்த்துக்கள்
    • திருமணம் >
      • திருமண நாள் வாழ்த்து
      • வசந்தன் றஞ்சனா
    • பூப்புனித நீராட்டுவிழா
    • பிறந்தநாள் >
      • பிறந்தநாள்
      • "செல்லப்பா சண்முகநாதன்"
      • தேவி குணபாலசிங்கம்
      • திரு. வரதராஜா
      • சாரா சதானந்தம்
    • பொங்கல்
    • பொங்கல்
    • HAPPY NEW YEAR >
      • New year
    • Christmas
  • மயிலிட்டி தளங்கள்:
    • நோர்வே >
      • நோர்வே மயிலிட்டி மக்கள் ஒன்றியம்
    • பிரித்தானியா >
      • MYLIDDY MAKKAL ONRIYAM UK
      • MYLIDDY SPORTS CLUB UK
    • அமெரிக்கா
    • கனடா >
      • கனடா மயிலிட்டி மக்கள் ஒன்றியம்
    • ourmyliddy.com
  • புகைப்படங்கள்
    • அருண்குமார்
  • பாடசாலைகள்
    • மயிலிட்டி இலவச முன்பள்ளி
    • றோமன் கத்தோலிக்க வித்தியாலயம் >
      • பாடசாலை நிகழ்வுகள்
      • "ஜெயராணி நிர்மலதாசன்"
      • பிரகாசிக்கட்டும் வாழ்வு
      • ஒளி விழா 2012
  • ஒன்றுகூடல்
    • ஒன்றுகூடல் 2014
    • ஒன்றுகூடல் 2012
    • ஒன்றுகூடல் 2011
  • எம்மைப்பற்றி:
    • தொடர்புகளுக்கு:
  • மயிலை மண்ணில்
  • ஒளியும் ஒலியும்
    • ஒளியும் ஒலியும் >
      • "அண்ணை றைற்"
  • மரண அறிவித்தல் 2017
    • மரண அறிவித்தல் 2016
    • மரண அறிவித்தல் 2015
    • மரண அறிவித்தல் 2014
    • 2013 டிசம்பர் வரை
    • 2012 டிசம்பர் வரை
    • 2011 டிசம்பர் வரை
  • நினைவஞ்சலி
    • நினைவஞ்சலி
    • உருக்குமணி தர்மலிங்கம்
  • ஆறாவது அகவை
    • ஐந்தாவது அகவை
    • நான்காவது அகவை
    • மூன்றாவது அகவை
    • இரண்டாவது அகவை
    • முதலாவது அகவை >
      • DR. JERMAN MYLIDDY
      • KOWSIKAN KARUNANITHI
      • SATHANANTHAN SADACHARALINGAM
      • SANGEETHA THENKILI
      • SELVIE MANO
      • JUSTIN THEVATHASAN
      • KUMARESWARAN TAMILAN
      • ANTON GNAPRAGASHAM
      • SHAN GAJA
      • ALVIT VINCENT
      • NAVARATNARANI CHIVALINGAM
  • தந்தை தேவராஜன்
  • சாதனை
  • .

திருமந்திரம் - பாகம் 10 "சைவ சித்தாந்த ரத்தினம் - நாகேந்திரம் கருணாநிதி"

23/2/2018

0 Comments

 
Picture
​திருமந்திரம் ( பாகம் 10 )
(சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி)
                                                அறுசமயச் சாத்திரப் பொருளானவன்
”ஆறங்கமாய் வரும் மாமறை ஓதியைக்
கூறங்கம் ஆகக் குணம்பயில்வார் இல்லை
வேறங்கம் ஆக விளைவுசெய்து அப்புறம்
பேறங்கம் ஆகப் பெருக்கு கின்றாரே”                                   பாடல் 55
சைவம், வைணவம், சாக்தம், காணாபத்யம், சௌரம், கௌமாரம் ஆகிய ஆறு சமயத்திற்கு ஒப்பற்ற வேதத்தை ஓதி அருளிய சிவபெருமானை, உமை அம்மைக்குத் தன் உடலின் இடப்பாகத்தை தந்த சிவப்பரம்பொருளின் அருளாற்றலைப் போற்றிப் புகழ்பவர் இல்லை. இப்படிப் புகழாதவர்கள் வேறு சமய சாத்திரங்களைப் பயின்று கடைப்பிடித்து அந்த வேறானவற்றையே பெரிதாகப் போற்றி செய்து வாழ் நாளை வீண் நாளாக்குகின்றார்களே! திருமூலரின் இக்கருத்தை அருணகிரிநாதரும் “அறு சமயச் சாத்திரப் பொருளோனே” எனக் கூறியுள்ளார்.



Picture
​ ஆடிப் பாடி அவனடி பணிக
“பாட்டும் ஒலியும் பரக்கும் கணிகையர்
ஆட்டும் அறாத அவனியின் மாட்டாதார்
வேட்டு விருப்பார் விரதம் இல்லாதவர்
ஈட்டும் இடம்சென்று இகலல் உற்றாரே”                               பாடல் 56

யாழ், முழவு என்னும் இசைக் கருவிகள் கொண்டு இசை கூட்டிப் பாடும் இன்னிசையும், ஆடல் மகளிர் நாடெங்கும் சென்று நடத்தும் நாட்டியமும், இடைவிடாது தொடர்ந்து நடந்தபடியிருக்கும் இந்தப் பூமியில், இந்த ஆடல் பாடல் நெறிமூலம் ஆண்டவன் அருள் பெற நினையாமல், இதை ஏற்க மாட்டாதவராய் வேள்வி செய்தும், கொல்லாமை விரதம் இல்லாதவராக வழி தவறிச் சென்று ஒருவரோடொருவர் மோதி, முரணிச் சண்டை இடுபவர்களாயிருக்கிறார்கள்.

                      ஆகமப் பெருமை
“அஞ்சன மேனி அரிவைஓர் பாகத்தன்
அஞ்சோடு இருபத்து மூன்றுள ஆகமம்
அஞ்சலி கூப்பி அறுபத்து அறுவரும்
அஞ்சா முகத்தில் அரும்பொருள் கேட்டதே.”                                               பாடல் 57

நீல நிறத்தவளான பார்வதியை தன் இடப்பாகமாகக் கொண்ட சிவபெருமான் இருபத்தெட்டு (5+23) ஆகமங்களையும் கைகூப்பி வணங்கி, அறுபத்தாறு யோக புருடர்களும் கேட்கத் தனது கீழ் மேல் நோக்கிய அஞ்சா ஈசான முகத்தால் அருளிச் செய்தான்.

                                                 போற்றி ஆகமம் புகழுவேன் நானே
“அண்ணல் அருளால் அருளும் சிவாகமம்
எண்ணில் இருபத்து எண்கோடி நூறாயிரம்
விண்ணவர் ஈசன் விழுப்பம் உரைத்தனர்
எண்ணிநின்று அப்பொருள் ஏத்துவன் யானே”                           பாடல் 58

அருள் வழங்கும் பெரியோன் சிவபிரான் அருளிய சிவாகமத்தை ஏற்றிப் போற்றியவர்கள் விண்ணவர் முதலான எட்டுக் கோடி நூறாயிரம் என்று எண்ணிலடங்காதவர் ஆவர். அவர்கள் வழி நின்று நானும் சிவாகமச் சிறப்பை எண்ணிப் புகழ்ந்து பாடிப் பரவுவேன்.

                  அரன் அருளியது அனைத்து மொழிகளும்
“பண்டிதர் ஆவார் பதினெட்டுப் பாடையும்
கண்டவர் கூறும் கருத்தறிவார் என்க
பண்டிதர் தங்கள் பதினெட்டுப் பாடையும்
அண்ட முதலான் அறஞ்சொன்ன வாறே”                               பாடல் 59

பண்டிதர் எனப்பட்டவர்கள் பதினெட்டு மொழியும் கற்றுத் தேர்ந்த விற்பனர் ஆவார். இவர்கள் உலகியலும், அறமும் உணர்ந்த மேலோர் ஆவார். இந்தப் பண்டிதப் பெருமக்கள் கற்றுத் தேர்ந்த பதினெட்டு மொழிகளும் அண்ட கோளங்கள் அனைத்திற்கும் மூல முதல்வனான வேத நாயகன் சொன்ன அறநெறியே ஆகும்.

               பொருளறிந்து போற்றுதலே புண்ணியம்
“அண்ணல் அருளால் அருளியது இவ்வாகமம்
விண்ணில் அமரர் தமக்கும் விளங்கரிது
எண்ணில் எழுபது கோடி நூறாயிரம்
எண்ணிலும் நீர்மேல் எழுத்தது ஆகுமே”                               பாடல் 60

ஆன்மாக்களுக்கெல்லாம் தலைவனான சிவபெருமான் அருளியது இந்த ஆகமம். இது வானவர் முதலான தேவர்களாலும் எளிதில் புரிந்து கொள்ள முடியாத அரும் பொருளுடையது. எண்ணிப் பார்த்தால் எழுபது கோடி நூறாயிரம் எண்று இருக்கும் எண்ண முடியாத சிறப்புடையது. இதன் பொருள் உணராது, சிறப்பறியாது ஓத நினைப்பவர்களுக்கு நீர் மேல் எழுத்துப் போல் அது மனம் கொள்ள முடியாது போகும். அதாவது நீர் மேல் எழுத முடியாது, எழுதினாலும் உடனே மறைந்து விடும். அதுபோல அருமை உணராது ஆகமம் ஓதுதல் பயனற்றது என்பது பொருள்.

                      வானவர்க்குத் துணை ஆகமம்
“பரனாய்ப் பராபரம் காட்டி உலகின்
தரனாய்ச் சிவதன்மம் தானேசொல் காலத்து
அரனாய் அமரர்கள் அர்ச்சிக்கும் நந்தி
உரனாய் ஆகமம் ஓங்கி நின்றானே”                                   பாடல் 61
​
பரம் பொருளாகிய சிவபெருமான் சின் முத்திரை காட்டி உலகைக் காத்தருளுகிறான். சனகன், சனாதனன், சனந்தனன், சனற்குமாரன் ஆகிய நான்கு முனிவருக்கும் வாக்கிறந்த பூரணமாய் நான்மறைப் பொருளைச் சொல்லியவன். தேவர்கள் தலைவனாய், அவர்களால் தொழப்படுபவர்களான நந்தியெம் பெருமானே அவர்களுக்குக் காவலரனாக ஆகமம் அருளிச் செய்தான்.
​


இந்தப் பக்கம் Free Web Hit Counter தடவை பார்வையிடப்பட்டுள்ளது.
0 Comments



Leave a Reply.

    Photo

    என்னைப்பற்றி

    நாகேந்திரம் கருணாநிதி
    மயிலிட்டி

    பதிவுகள்

    August 2023
    November 2022
    July 2022
    March 2022
    February 2022
    December 2020
    November 2020
    February 2020
    September 2019
    June 2019
    March 2019
    February 2019
    January 2019
    December 2018
    October 2018
    September 2018
    August 2018
    July 2018
    June 2018
    May 2018
    April 2018
    February 2018
    January 2018
    December 2017
    November 2017
    October 2017
    August 2017
    July 2017
    May 2017
    April 2017
    March 2017
    January 2017
    December 2016
    November 2016
    October 2016
    September 2016
    August 2016
    July 2016
    June 2016
    May 2016
    April 2016
    February 2016
    January 2016
    November 2015
    October 2015
    September 2015
    August 2015
    July 2015
    June 2015
    May 2015
    April 2015
    March 2015
    February 2015
    January 2015

    முழுப்பதிவுகள்

    All
    திருமந்திரம் தொடர்கள்

      தொடர்புகளுக்கு:

    Submit
நன்றி மீண்டும் வருக!

நன்றி மீண்டும் வருக!

நன்றி மீண்டும் வருக!
Hit Counter by Digits
© 2011-23 myliddy.fr