(சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி)
அழியும் உடம்பிது அறிக
“அத்திப் பழமும் அரைக்கீரை நல்வித்தும்
கொத்தி உலைப்பெய்து கூழ்அட்டு வைத்தனர்
அத்திப் பழத்தை அரைக்கீரை வித்துண்ணக்
கத்தி எடுத்தவர் காடு புக்காரே” பாடல் 160
உடலும் உயிரும் கருப்பையில் உயிர்ப்படைந்து வளர்ந்து உடலெடுத்துப் பிறந்து உயிர் வாழத் தொடங்கியது. காலப்போக்கில் ஒரு நாள் உயிர் உடலை விட்டுப் போய் விட்டது. உடனே அழுது புலம்பி மற்றவர்கள் அந்த உடலைச் சுடுகாட்டுக்குக் கொண்டு சென்றார்கள்.