மயிலிட்டி மக்கள் ஒன்றியம் பிரான்ஸ்
  • நல்வரவு 2023
    • நல்வரவு 2022
    • நல்வரவு 2021
    • நல்வரவு 2020
    • நல்வரவு 2019
    • நல்வரவு 2018
    • நல்வரவு 2017
    • நல்வரவு 2016
    • நல்வரவு 2015
    • நல்வரவு 2014
    • நல்வரவு! 2013, 12, 11
  • ஆலயங்கள்
    • மருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் >
      • ஆலய வரலாறு
      • பரிபாலன சபையினர்
    • காணிக்கை மாதா தேவாலயம்
    • ஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்
    • முனையன் வளவு முருகையன் ஆலயம்
  • கவிதைகள் / ஆக்கங்கள்
    • நாகேந்திரம் கருணாநிதி
    • அருண்குமார் குணபாலசிங்கம்
    • அஞ்சலி வசீகரன்
    • மகிபாலன் மதீஸ்
    • மயிலையூர் தனு
    • அகஸ்ரின் இரவீந்திரன்
    • Image Gautham
    • தயாநிதி தம்பையா
    • மயிலை துரை
    • ஐங்கரன் படைப்புக்கள்
    • "மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்"
    • சுதா நவம் படைப்புக்கள்
    • வசந்த் சகாதேவன் படைப்புக்கள்
    • ஜெயராணி படைப்புக்கள் >
      • தொலைந்த ஏக்கங்கள்
      • வாழ்வின் பயம்
      • நானும் என் தேவதையும்
    • Dr. ஜேர்மன் பக்கம் >
      • "உலக மங்கையர் தினம்!"
      • சிந்தனை வரிகள் Dr. Jerman
    • அன்ரன் றாஜ் படைப்புக்கள்
    • சாந்தன் படைப்புக்கள் >
      • "சாந்தன் படைப்புக்கள்"
      • "சிந்தனை வரிகள் நமக்கு"
      • "ரோஜா மலரே"
      • "பெண்"
      • "பணம்"
      • "ரிசானா"
      • "புத்தாண்டே வருக! 2013"
      • "சுனாமி"
      • "உறவுகள்"
      • "கடல் அன்னை"
      • "சிந்தனை உலகம்"
      • "மயிலையின் பெருமை"
      • "மனம் கவர்ந்தவளே"
      • "சொர்க்கபூமி"
      • "கருவில் சுமந்தவளே"
      • "போராட்டம்!"
      • "சிந்தனை வரிகள்"
      • "என் கவிதை"
      • "சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே!"
      • "பசுமை மலரும் நிச்சயம்"
      • "தென்றல்"
      • "காதலியே"
      • "அப்பா"
      • "ஏக்கம்"
      • "இறைவனின் சாபம்!"
      • "புத்தாண்டே வருக! 2012"
      • "அம்மா!"
      • "தவிப்பு"
      • "ஆசை"
      • "மயிலை மண்ணே"
      • "அழகு"
      • "நிம்மதி"
    • அருண்குமார் படைப்புக்கள் >
      • இருண்டுபோன நாளின் நினைவுகள்!
      • "சமர்ப்பணம்"
      • "மீண்டும் வாழ வழி செய்வோம்"
      • "நினைவுகள் 2" "மடம்"
      • "நினைவுகள் 1" "மண்சோறு"
      • "நான் பிறந்த மண்ணே !"
    • சண் கஜா (மயிலைக் கவி) படைப்புக்கள் >
      • சண் கஜா (மயிலைக் கவி) படைப்புக்கள்
      • கிளாலி பயணம்
      • முறிகண்டி பிள்ளையார்
      • "காலங்கடந்த ஞானமிது"
      • "கோரத் தாண்டவம்"
      • "காலப் பெருவெளியில்"
    • அல்விற் வின்சன் படைப்புக்கள் >
      • "சிவராத்திரியும் கத்தோலிக்கமும்"
      • "முதல்பிரிவு"
      • "பாட்டன் வழி நிலம் வேண்டும்"
      • "வசந்தம்"
      • "உலக பெண்கள் தினம்!"
      • "தனித்திருப்பாய்!"
      • "என் தாய்"
      • வாழ்த்து Myliddy.fr
      • "ஊறணி" மண்ணின் நினைவு
    • ஜீவா உதயன் படைப்புக்கள் >
      • "அம்மா"
      • "தேடல்"
      • "அழகிய நாட்கள்"
      • "கவிஞர்களே"
      • "தாயே என்றும் எனக்கு நீயே!"
    • ஜீவா உதயன் படைப்புக்கள்
    • கௌதமன் படைப்புக்கள்
    • சங்கீதா தேன்கிளி படைப்புக்கள் >
      • சங்கீதா தேன்கிளி
      • "புலம்பெயர்ந்தோர் கவனத்திற்கு.."
      • "எங்கள் மயிலை மண்"
      • "பனங்கள்ளு"
      • "மின்னல்களால் இழைக்கப்பட்ட பூமி"
    • குமரேஸ்வரன் படைப்புக்கள் >
      • "என்ன வாழ்க்கை இது"
      • "தாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்"
      • "பனங்கள்ளு"
      • "தேன் கூடு"
      • "வீச்சுவலை"
    • கவின்மொழி படைப்புக்கள் >
      • "கட்டுமரம்"
      • யுகமாய் போன கணங்கள்!
    • கௌசிகனின் படைப்புக்கள்! >
      • "பூமிக்கு வந்த புது மலரே"
      • "மயிலை மண்ணில்"
      • "இயற்கைக் காவலன்"
      • "வீச்சுவலை"
      • "தேன்கூடே.... தேன்கூடே...."
      • "என் இனிய கருமரமே..."
      • "எங்கள் மயிலை மண்"
    • படம் என்ன சொல்கின்றது... >
      • "பனங்கள்ளு"
      • "வீச்சுவலை"
      • "தேன் கூடு"
      • "பனைமரம்"
      • "கட்டுமரம்"
  • சிறப்புத் தினங்கள்
    • Womens day 2015
    • மகளிர் தினம் 2014 >
      • மகளிர் தினம் 2013 >
        • "பெண்"
        • "உலக மங்கையர் தினம்!"
        • "உலக பெண்கள் தினம்!"
      • மகளிர் தினம் 2012
    • NELSON MANDELA
    • தந்தையர் தினம்
    • அன்னையர் தினம் >
      • அன்னையர் தினம்
    • மே தினம்
    • சுனாமி 2013 >
      • சுனாமி 2012
  • வாழ்த்துக்கள்
    • திருமணம் >
      • திருமண நாள் வாழ்த்து
      • வசந்தன் றஞ்சனா
    • பூப்புனித நீராட்டுவிழா
    • பிறந்தநாள் >
      • பிறந்தநாள்
      • "செல்லப்பா சண்முகநாதன்"
      • தேவி குணபாலசிங்கம்
      • திரு. வரதராஜா
      • சாரா சதானந்தம்
    • பொங்கல்
    • பொங்கல்
    • HAPPY NEW YEAR >
      • New year
    • Christmas
  • மயிலிட்டி தளங்கள்:
    • நோர்வே >
      • நோர்வே மயிலிட்டி மக்கள் ஒன்றியம்
    • பிரித்தானியா >
      • MYLIDDY MAKKAL ONRIYAM UK
      • MYLIDDY SPORTS CLUB UK
    • அமெரிக்கா
    • கனடா >
      • கனடா மயிலிட்டி மக்கள் ஒன்றியம்
    • ourmyliddy.com
  • புகைப்படங்கள்
    • அருண்குமார்
  • பாடசாலைகள்
    • மயிலிட்டி இலவச முன்பள்ளி
    • றோமன் கத்தோலிக்க வித்தியாலயம் >
      • பாடசாலை நிகழ்வுகள்
      • "ஜெயராணி நிர்மலதாசன்"
      • பிரகாசிக்கட்டும் வாழ்வு
      • ஒளி விழா 2012
  • ஒன்றுகூடல்
    • ஒன்றுகூடல் 2014
    • ஒன்றுகூடல் 2012
    • ஒன்றுகூடல் 2011
  • எம்மைப்பற்றி:
    • தொடர்புகளுக்கு:
  • மயிலை மண்ணில்
  • ஒளியும் ஒலியும்
    • ஒளியும் ஒலியும் >
      • "அண்ணை றைற்"
  • மரண அறிவித்தல் 2017
    • மரண அறிவித்தல் 2016
    • மரண அறிவித்தல் 2015
    • மரண அறிவித்தல் 2014
    • 2013 டிசம்பர் வரை
    • 2012 டிசம்பர் வரை
    • 2011 டிசம்பர் வரை
  • நினைவஞ்சலி
    • நினைவஞ்சலி
    • உருக்குமணி தர்மலிங்கம்
  • ஆறாவது அகவை
    • ஐந்தாவது அகவை
    • நான்காவது அகவை
    • மூன்றாவது அகவை
    • இரண்டாவது அகவை
    • முதலாவது அகவை >
      • DR. JERMAN MYLIDDY
      • KOWSIKAN KARUNANITHI
      • SATHANANTHAN SADACHARALINGAM
      • SANGEETHA THENKILI
      • SELVIE MANO
      • JUSTIN THEVATHASAN
      • KUMARESWARAN TAMILAN
      • ANTON GNAPRAGASHAM
      • SHAN GAJA
      • ALVIT VINCENT
      • NAVARATNARANI CHIVALINGAM
  • தந்தை தேவராஜன்
  • சாதனை
  • .

"தாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்"

    • பறந்து கொண்டிருந்த இயந்திரப்பறவையின் சிறகுகள் ஓய்வெடுத்து நிலத்தில காலூன்றிய போது திடுக்கிட்டு விழிக்கிறது இழந்த காலங்களை இறந்த காலமாய் மீட்டிப்பார்த்த உயிருள்ள ஜடமொன்று...

      காலத்தின் கட்டாயத்தில் பல ஆண்டுகள் கரைந்து கழிந்த பின்னே தாய் நிலத்தை நோக்கிய திக்கற்ற தமிழனின் ஊமைப்பயணம் நினைவுகளை சல்லடை போட்டுக்கொண்டே ஊர்ந்து செல்கிறது எரிபொருளை உறிஞ்சிக்குடித்து ஓசோனை சல்லடை செய்யும் இன்றைய அடிப்படை தேவையொன்று.. கந்தகம் கலந்த காற்றினால் வந்த மயக்கமோ என்னமோ மீண்டும் விழி சாய்கிறது கண்முன்னே வந்து நிற்கிறாள் என் கற்பிக்கு சொந்தக்காரி.

      தனித்து நிற்கும் பாதை எல்லாம் தவிக்கும் அவள் வருகைக்காய் அவள் பாதம் தொட்ட மண்ணை அள்ளி பூசிக்கொள்ள காத்திருக்கும்அரும்புவிட்ட மீசை எல்லாம் அந்த வரிசையில் நித்தம் ஒரு சட்டை மாற்றி உன் நினைவுகளை கவர்ந்து செல்ல ரெண்டு சில்லு மிதிபலகையின் நெஞ்சில் ஏறிமிதித்து தேடிவந்த அந்த பசுமையான காலங்களை கற்பனையில் புசிக்கும் போது மாற்றான் மொழியில் ஒரு குரல் கேட்டு விழிக்கிறேன் கேட்கிறான் அடையாள அட்டையாம் அடையாளம் தெரியாமல் அழித்துவிட்டதாக மார்தட்டும் ஒரு அறிவிலி...


      மீண்டும் நகருகிறது சாலையோர மரங்கள்..


      ஞாபக சின்னங்களை தேடி வழிமீது விழி தேடல் தொடங்கியதே. குடையாக நிழல் தந்த விருட்சமெல்லாம் சிரமின்றி நிற்கிறது அழியாத பல வடுக்களின் விம்பமாய். பலவர்ணம் கொண்ட பட்டாம் பூச்சியாய் பறந்து திரிந்து பலகதை பேசி நின்ற பசுமையான இடமெல்லாம் பார்க்கும்போதே நெஞ்சுக்குள் முள் தைத்தது பாழடைந்த காட்சிகளால் பாழடைந்த்தது என் நினைவுகளும் அந்த நினைவுகளில் மீண்டும் விழி சாய்கிறது.மார்கழி திங்கள் தந்த மயக்கத்தினால் மீண்டும் நினைவலைகள் உருவாகிறது ...


      கண்முன்னே கனவு தேவதை.. பல நாள் தூண்டலின் பின் அவள் என்மேல் தூவிய புன்னகை பூக்களின் மழையினால் உள்ளத்தால் ஒன்றானோம். நடுவானில் நிலவினை ரசித்து கண்ணாலே புது மொழி பேசி கடற்கரை மணலில் குட்டி வீடிகட்டி பள்ளிக்கூட சுவரெல்லாம் நம் காதல் கதை பேசி சாலையோர மரங்களிலே நம் காதல் கல்வெட்டுகளை பதித்து உறங்கும் போது கனவினில் புலம்பி அம்மா எழும்பி கண்டிக்கும் போது எழுப்புகிறான் மீண்டும் ஒரு சிப்பாய் ...


      எங்கே செல்கிறாய்? எங்கிருந்தோ வந்தவன் இன்று என்னை கேக்கிறான் எங்கே செல்கிறாய்? விதியை நொந்து கொண்டு மீண்டும் நகர்கிறது சிரமின்றிய மரங்கள் ....

      நெஞ்சிலே காயம் பட்ட ஒரு பெயர்பலை சொல்லியது என் ஊர் இதுவென்று. பசுமையான மரங்களுடன் குயில்கள் கானம் பாடும்என் ஊர் எங்கே? தரை உடைந்து உரம் காய்ந்த இந்த பாலைவனம் எங்கே? என் மனம் உறைந்து போக வண்டி மட்டும் செல்கிறது..

      கண்ணிவெடியகற்றும் கன்னிகளின் சைக்கிள் சொல்லியது வறுமையிலும் தமிழின் பெருமை கம்பிகள் இல்லா கம்பங்கள் சொல்லியது ஒளியற்ற வாழ்வை மனதை கல்லாக்கி வேலியில்லா படலை மேல் கைவைக்கும் போது தானாகவே திறக்கின்றது . வாசலிலே வாடிய பூப்போலே உருக்குலைந்த என் அக்கா வரவேற்று என் சுமைகளை அவள் தாங்கினாள்..கொத்துகுண்டு கொலை செய்த என் பெற்றோர்கள் புகைப்படத்தில் கதறியழுது நிலத்தில் விழும்போது மாறாத அன்போடு தாங்கிக்கொண்டாள் அழுதழுது கண்ணில் நீர் வற்றிப்போன அக்கா.. சில மணி நேர மௌனத்திற்குப்பின் மௌனம் கலைத்து ஓரிரு வார்த்தைகள் மட்டும் பேசிக்கொண்டு நிமிர்ந்து பார்த்தபோது மழை பெய்த கண்களுடன் என் அக்கா ஆறுதல் படுத்தும் நிலையில் நானும் இல்லை ஆறுதல் அடையும் நிலையில் அவளும் இல்லை ....

      மனம் மெல்ல ஏங்குகிறது அவளின் நிலை என்னவோ?

      அக்கா தந்த உணவினை உண்டு மெல்ல கிளம்பினேன் சூனியக்காடாய் மாறிப்போயிருக்கும் என் சொர்கபூமியை தேடி.தனிமையை தாங்கி நிற்கும் பாதைகளில் சில மந்திக்குரங்குகள் மட்டும் கண்காணிப்பில் தூரத்தில் ஒரு பொலித்தின் தரப்பாளால் வேயப்பட்ட ஒரு குடிசை.. நெருங்கிச் செல்லும் போது பல ஆண்டுகள் தேடிய அதே குரல் அவள் நிலை பார்த்து தீப்பொறி ஆனது என் மனம்.
      வானவில்லின் வர்ணமாக நான் பார்த்து ரசித்த ஓவியமா இன்று சாயம்போன ஓவியம் போல் ஊறிக்கிடப்பது. என் தனிமைகளை இனிமையாக்கிய அவளா இன்று அலங்கோலமாய் கிடப்பது நெருங்கிச் சென்றேன் என் முகம் பார்த்த அடுத்த நொடி கண்ணிரண்டும் நீர்தாங்கியாய் வீட்டினுள்ளே ஓடிச்சென்றாள் தொடர்ந்து சென்றேன் தொங்கிகொண்டிருந்த பலகையில் அவள் கல்யாண புகைப்படம்என் முகத்திரையை கிழித்தது. ஒருகணம் தடுமாறி மீண்டும் சுயநினைவுக்கு வந்த போது என் கண்கள் தேடின அவன் கணவனை மூலையில் முச்சக்கர நாற்காலியில் தென்பட்ட முகமும் நிழல்படத்தின் முகமும் ஒத்துப்போயின. தடுமாறும் வார்த்தைகளால் சில வரி பேசி இனிமேலும் இங்கிருந்தால் உள்ளக்கதவு திறந்திடுமோ என எண்ணி விடைபெற எழும்பிய போது கண்முன்னே தேநீர் கோப்பையுடன் நின்றவளின் கண்ணை பார்த்தேன் வலிகள் மட்டும் நிறைந்த விழிகளை பார்க்க இயலாமல் விடைசொல்லாது கிளம்பிவிட்டேன் இதற்குமேலும் என்னால் இருக்க முடியாது .உயிர்களை விழுங்கி கொட்டாவி விட்டுகொண்டிருகும் என் தாய்நிலத்தில்...


Picture
Picture
Picture
Picture

    "தாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்-குமரேசன் தமிழன்"
    கருத்துக்களை இங்கே பதிவுசெய்யுங்கள்:

Submit
நன்றி மீண்டும் வருக!

நன்றி மீண்டும் வருக!

நன்றி மீண்டும் வருக!
Hit Counter by Digits
© 2011-22 myliddy.fr