பனங்கள்ளு....

நன்றி புகைப்படம்: திரு. குணபாலசிங்கம்
பனங்காற்று கொஞ்சம் களைப்பாற்றும்
பனங்கள்ளு கொஞ்சம் உரமேற்றும்
கற்பகவிருட்சம் இப்பனை
தமிழனின் சொத்து இப்பனை
தனிப்பனைக் கள்ளு
தனி ருசி
பழங் கள்ளும் கருவாடும்
படு ருசி
இடுப்புபட்டி இறுகக் கட்டி
கத்தியும் முட்டியும் சொருகி
பாளைக்கயிற்றின் துணையோடு
பனையேறுவாய் நீ
பசுவின் மடியில் காம்பெடுத்து
பால் கறப்பது போல்
பனையின் முடியில் வட்டெடுத்து
பனம்பால் கறப்பாய் நீ..
அப்பம் சுட ஆச்சிமாரும்
அலுப்பு தீர்க்க அப்புமாரும்
குதூகலிக்க குமரர்களும்
கள்ளுக்காக காத்திருப்பார்
அந்தக்காலம் இனிவருமா...
பனைமரமே நீ சொல்லு...
----- சங்கீதா தேன்கிளி
|
You've just received a new submission to your "பனங்கள்ளு".
Submitted Information:பெயர்: Justin Thevathasan மின்னஞ்சல்: @ கருத்துக்கள்: Wow superrrrrr............. |