(நாகேந்திரம் கருணாநிதி)
7. ஆலய விக்கிரகங்களின் தத்துவம்
5. முருகன்,
முருகு என்னும் சொல் அழகு, இளமை எனப் பொருள்படும். இறைவன் (சிவம்) உயிர்களுக்கு அருளும் பொருட்டு அறிவு வடிவாக, ஒளி வடிவாக எடுத்த ஒரு வடிவமே முருகன் ஆகும். இதனால்தான் அருவுருவமாக ஆழ்ந்து, அகன்று, நுண்ணியதாக இருக்கின்ற வேலை முருகனாக வணங்குகின்றோம். இதன் காரணமாகத்தான் சிவாலயத்தைத் தவிர முருகனின் ஆலயகோபுரங்களில் மட்டும்தான் “சிவ சிவ” என்னும் மந்திரம் எழுதப்படுகின்றது. சிவமும் முருகனும் ஒன்றே என்பதை கந்தபுராணம் பின்வரும் பாடல்கள் மூலம் விளக்குகிறது. முருகனே கந்தபுராணம் பாட கச்சியப்ப சிவாச்சாரியாருக்கு காஞ்சி குமரகோட்டத்தில் “திகடச்சக்கர’ என அடிஎடுத்துக் கொடுத்துள்ளார்.