
சித்தாந்தமும் வேதாந்தமும் சைவசமயத்தின் இரு கண்களைப்போன்றவை. வேதாந்தம் என்பது 4 வேதங்களின் ( 108 உபநிடதங்கள் உட்பட ) முடிந்த முடிவு. சித்தாந்தம் என்பது 28 ஆகமங்களின் ( 207 உப ஆகமங்கள் உட்பட ) முடிந்த முடிவு. சைவ சித்தாந்தத்தை ஆகமாந்தம் எனவும் கூறுவர்.இரண்டும் ஆன்மா இறைவனை நாடும், போயடையும் வழி முறைகளைக் கூறுகின்றன.