(நாகேந்திரம் கருணாநிதி)
3. பாசம் (மலம், தளை)
பாசம் காரியரூபமாய் நிற்றல் பொதுஇயல்பாகவும், காரணரூபமாய் நிற்றல் சிறப்பியல்பாகவும் காணப்படுகின்றது. பாசம் ஆணவம், கன்மம், மாயை என மூன்றாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
திருஞானசம்பந்தப் பெருமான்
“விளையாததோர் பரிசில் வரு பசு பாச வேதனை ஒண் தளையாயின தவிரவ்வருள் தலைவனது சார்பாம்” எனவும்
மாணிக்கவாசகப் பெருமான் திருவாசகத்தில்
“பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கும் ஆரியனே” எனவும்
பாசம் உயிரைப் பொருந்தி நிற்கும் பற்று எனக் கூறுகின்றனர்.