
சைவ சித்தாந்த சாத்திரங்கள் - 9. வினாவெண்பா
வினாவெண்பா உமாபதி சிவாச்சாரியார் அவர்களால் அருளப்பட்ட சித்தாந்த அட்டகங்களில் ஒன்றாகும். நூலாசிரியர் தனது குருவிடம் சைவசித்தாந்த மெய்ப்பொருளியலில் தனக்கு ஏற்பட்ட ஐயங்களைத் தெளிந்து கொள்ள எழுப்பப்பட்ட வினாக்களாகப் பாடல்களை அமைத்துள்ளார். இவற்றிற்கான விடை இப்புத்தகத்தில் இல்லை. ஆனால் சித்தாந்தப் பயிற்சி உடையோர், அல்லது ஆசிரியரின் மற்ற புத்தகங்களான சிவப்பிரகாசம், திருவருட்பயன் ஆகியவற்றைப் பயின்று இதற்கான விடைகளை உணரமுடியும். இந்நூலில் வெண்பா அமைப்பில் 12 பாடல்கள் வினாக்களாகவும், 13 ஆவது பாடல் நூற்பயனாகவும் அமைக்கப்பட்டுள்ளது. இந்நூலின் முதல் மூன்று வினாக்கள் ஆணவமலத்தைப் பற்றியதாக அமைந்துள்ளன. தொடர்ந்து வரும் வினாக்கள் உயிர் எத்தகைய அறிவுகளைப் பெறுகின்றது, 36 தத்துவங்கள், உயிர் வினைப் பயனை நுகர்தல், சீவான்மா, பரமாத்மா, முத்திநிலை அடைதல் போன்ற விடையங்கள் பற்றிக் கேட்கப்படுகின்றன. இந்நூலில் வரும் சில பாடல்களைப் பார்ப்போம்.
வினாவெண்பா உமாபதி சிவாச்சாரியார் அவர்களால் அருளப்பட்ட சித்தாந்த அட்டகங்களில் ஒன்றாகும். நூலாசிரியர் தனது குருவிடம் சைவசித்தாந்த மெய்ப்பொருளியலில் தனக்கு ஏற்பட்ட ஐயங்களைத் தெளிந்து கொள்ள எழுப்பப்பட்ட வினாக்களாகப் பாடல்களை அமைத்துள்ளார். இவற்றிற்கான விடை இப்புத்தகத்தில் இல்லை. ஆனால் சித்தாந்தப் பயிற்சி உடையோர், அல்லது ஆசிரியரின் மற்ற புத்தகங்களான சிவப்பிரகாசம், திருவருட்பயன் ஆகியவற்றைப் பயின்று இதற்கான விடைகளை உணரமுடியும். இந்நூலில் வெண்பா அமைப்பில் 12 பாடல்கள் வினாக்களாகவும், 13 ஆவது பாடல் நூற்பயனாகவும் அமைக்கப்பட்டுள்ளது. இந்நூலின் முதல் மூன்று வினாக்கள் ஆணவமலத்தைப் பற்றியதாக அமைந்துள்ளன. தொடர்ந்து வரும் வினாக்கள் உயிர் எத்தகைய அறிவுகளைப் பெறுகின்றது, 36 தத்துவங்கள், உயிர் வினைப் பயனை நுகர்தல், சீவான்மா, பரமாத்மா, முத்திநிலை அடைதல் போன்ற விடையங்கள் பற்றிக் கேட்கப்படுகின்றன. இந்நூலில் வரும் சில பாடல்களைப் பார்ப்போம்.