(நாகேந்திரம் கருணாநிதி)
சைவ சித்தாந்த சாத்திரங்கள் - 5. இருபா இருபஃது
இருபா இருபஃது கி.பி.14 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த திருக்கயிலாய பரம்பரையில் வந்த புறச்சந்தான குரவரில் (2 ஆவது) ஒருவரும், சகலாகம பண்டிதரும், மெய்கண்ட தேவநாயனாரின் மாணவருமான திருத்துறையூர் அருணந்தி சிவாச்சாரியார் அவர்களால் அருளப்பட்டது. அருணந்தி சிவாச்சாரியார் மெய்கண்ட தேவநாயனாரால் சிவஞானம் கைவரப்பெற்று அவரால் அருணந்தி சிவாச்சாரியார் என்ற திருநாமம் பெற்றவர். அருணந்தி சிவாச்சாரியாரால் எழுதப்பட்ட “சிவஞான சித்தியார்” இற்கு முன் அவரால் இந்நூல் பாடப் பெற்றதாகக் கூறப்படுகின்றது. நூலாசிரியர் தமக்கு ஏற்பட்ட ஐயங்களைத் தன் ஞானாசிரியராகிய மெய்கண்ட தேவரிடம் வினாவாகக் கேட்டு அறிவதுபோல் பாடல்கள் அமைந்துள்ளன. பாடல்களிலுள்ள வினாக்களுக்கு நேரடியான விடை கூறாமல் குறிப்பாகக் கூறப்பட்டுள்ளது. சில பாடல்கள் நீண்ட பாடல்களாகவும் அமைந்துள்ளன. இந்நூல் 10 வெண்பாக்களையும், 10 ஆசிரியப்பாக்களையும் கொண்டது. இந்நூலில் உள்ள சில பாடல்களைப் பார்ப்போம்.