
தைப்பூசம் சைவசமயத்தவர்களால் சைவக்கோயில்களில் முக்கியமாக முருகன் ஆலயங்களில் தை மாதம் பூச நட்சத்திரத்தில் (பெரும்பாலும் பௌர்ணமி திதி கூடி வரும் நாளில்) கொண்டாடப்படுகின்றது. தைப்பூசத்தில் அன்றுதான் உலகம் உருவாகியதாக ஐதீகம். தைபூசம் முருகப்பெருமான் அவதரித்த நாளாகவும் கூறப்படுகின்றது. தைப்பூசத்தில் அன்றுதான் முருகப்பெருமான் அசுரர்களை அழிக்க பார்வதி தேவியிடம் ஞானவேலைப் பெற்றுக்கொண்டார் எனவும் இந்த நிகழ்ச்சி பழனியில் நடந்ததாகவும் கூறப்படுவதால் தென் இந்தியாவில் உள்ள எல்லா முருகன் ஆலயங்களிலும் சிறப்பாக ஆறுபடை வீடுகளில் மிகவும் சிறப்பாகப் பழனியில் தைப்பூசத் திருவிழா கொண்டாடப்படுகின்றது. இந்த ஆலயங்களில் எல்லாம் தைப்பூசத்தில் அடியார்கள் வேல்குத்திக் காவடி எடுத்தும், பால்குடம் எடுத்தும் தங்கள் நேர்த்திக்கடன்களை நிறைவேற்றுவர். இந்தியா, இலங்கையில் மட்டுமல்லாமல் மலேசியா, சிங்கப்பூர், மொரீசியஸ், மியன்மார், தென்ஆபிரிக்கா, தாய்லாந்து, இந்தோனேசியா, அமெரிக்கா, ஐரோப்பியநாடுகள், அவுஸ்திரேலியா உட்பட உலகிலுள்ள பல நாடுகளிலும் முருகன் ஆலயங்களில் தைப்பூசத்திருவிழா மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது.
சிதம்பரத்தில் சிவபெருமான் உமாதேவியாருடன் ஆனந்த நடனம் ஆடிப் பதஞ்சலி, வியாக்கிரபாதர், தேவர்கள், முனிவர்களுக்குக் காட்சி அளித்த நாள் தைப்பூசம் ஆகும். இரணியவர்மன் என்னும் மன்னன் சிதம்பரத்திற்கு வந்து திருப்பணிகள் செய்துகொண்டிருந்த காலத்தில் ஒரு தைப்பூசத்தில் அன்று நடராஜரை நேரில் தரிசித்ததாகக் கூறப்படுகின்றது. இதனாலேயே சிவன் கோவில்களில் தைப்பூசத்தன்று சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன.
தைப்பூசத்தன்று சிவன் முப்புரங்களையும் எரித்ததாகக் கூறப்படுகின்றது.
தைப்பூசத் திருநாளன்று பிள்ளைகளுக்கு ஏடுதொடக்குதல், காதுகுத்துதல் போன்ற சுபகாரியங்கள் செய்யப்படுகின்றது. இலங்கையில் தமிழர்கள் தைப்பூசத்தில் அன்று புதிரெடுத்து (அறுவடைக்குத் தயாராகவுள்ள தங்கள் வயல்களிலிருந்து முதலில் சிறிது நெற்கதிர்களை எடுத்தல்) அரிசியாக்கிப் பொங்கி இறைவனுக்குப் படைப்பார்கள்.
வள்ளலார் இராமலிங்க சிவாமிகள் ஒரு தைப்பூசத்தன்று ஒளியானார் எனக் கூறப்படுகின்றது. இதனால் தைப்பூசத்தன்று வள்ளலார் விழாவைக் கொண்டாடுகின்றனர்.
தைப்பூசத்தன்று சிவன் முப்புரங்களையும் எரித்ததாகக் கூறப்படுகின்றது.
தைப்பூசத் திருநாளன்று பிள்ளைகளுக்கு ஏடுதொடக்குதல், காதுகுத்துதல் போன்ற சுபகாரியங்கள் செய்யப்படுகின்றது. இலங்கையில் தமிழர்கள் தைப்பூசத்தில் அன்று புதிரெடுத்து (அறுவடைக்குத் தயாராகவுள்ள தங்கள் வயல்களிலிருந்து முதலில் சிறிது நெற்கதிர்களை எடுத்தல்) அரிசியாக்கிப் பொங்கி இறைவனுக்குப் படைப்பார்கள்.
வள்ளலார் இராமலிங்க சிவாமிகள் ஒரு தைப்பூசத்தன்று ஒளியானார் எனக் கூறப்படுகின்றது. இதனால் தைப்பூசத்தன்று வள்ளலார் விழாவைக் கொண்டாடுகின்றனர்.
இந்தப் பக்கம்
தடவை பார்வையிடப்பட்டுள்ளது.