மயிலிட்டி மக்கள் ஒன்றியம் பிரான்ஸ்
  • நல்வரவு 2023
    • நல்வரவு 2022
    • நல்வரவு 2021
    • நல்வரவு 2020
    • நல்வரவு 2019
    • நல்வரவு 2018
    • நல்வரவு 2017
    • நல்வரவு 2016
    • நல்வரவு 2015
    • நல்வரவு 2014
    • நல்வரவு! 2013, 12, 11
  • ஆலயங்கள்
    • மருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் >
      • ஆலய வரலாறு
      • பரிபாலன சபையினர்
    • காணிக்கை மாதா தேவாலயம்
    • ஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்
    • முனையன் வளவு முருகையன் ஆலயம்
  • கவிதைகள் / ஆக்கங்கள்
    • நாகேந்திரம் கருணாநிதி
    • அருண்குமார் குணபாலசிங்கம்
    • அஞ்சலி வசீகரன்
    • மகிபாலன் மதீஸ்
    • மயிலையூர் தனு
    • அகஸ்ரின் இரவீந்திரன்
    • Image Gautham
    • தயாநிதி தம்பையா
    • மயிலை துரை
    • ஐங்கரன் படைப்புக்கள்
    • "மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்"
    • சுதா நவம் படைப்புக்கள்
    • வசந்த் சகாதேவன் படைப்புக்கள்
    • ஜெயராணி படைப்புக்கள் >
      • தொலைந்த ஏக்கங்கள்
      • வாழ்வின் பயம்
      • நானும் என் தேவதையும்
    • Dr. ஜேர்மன் பக்கம் >
      • "உலக மங்கையர் தினம்!"
      • சிந்தனை வரிகள் Dr. Jerman
    • அன்ரன் றாஜ் படைப்புக்கள்
    • சாந்தன் படைப்புக்கள் >
      • "சாந்தன் படைப்புக்கள்"
      • "சிந்தனை வரிகள் நமக்கு"
      • "ரோஜா மலரே"
      • "பெண்"
      • "பணம்"
      • "ரிசானா"
      • "புத்தாண்டே வருக! 2013"
      • "சுனாமி"
      • "உறவுகள்"
      • "கடல் அன்னை"
      • "சிந்தனை உலகம்"
      • "மயிலையின் பெருமை"
      • "மனம் கவர்ந்தவளே"
      • "சொர்க்கபூமி"
      • "கருவில் சுமந்தவளே"
      • "போராட்டம்!"
      • "சிந்தனை வரிகள்"
      • "என் கவிதை"
      • "சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே!"
      • "பசுமை மலரும் நிச்சயம்"
      • "தென்றல்"
      • "காதலியே"
      • "அப்பா"
      • "ஏக்கம்"
      • "இறைவனின் சாபம்!"
      • "புத்தாண்டே வருக! 2012"
      • "அம்மா!"
      • "தவிப்பு"
      • "ஆசை"
      • "மயிலை மண்ணே"
      • "அழகு"
      • "நிம்மதி"
    • அருண்குமார் படைப்புக்கள் >
      • இருண்டுபோன நாளின் நினைவுகள்!
      • "சமர்ப்பணம்"
      • "மீண்டும் வாழ வழி செய்வோம்"
      • "நினைவுகள் 2" "மடம்"
      • "நினைவுகள் 1" "மண்சோறு"
      • "நான் பிறந்த மண்ணே !"
    • சண் கஜா (மயிலைக் கவி) படைப்புக்கள் >
      • சண் கஜா (மயிலைக் கவி) படைப்புக்கள்
      • கிளாலி பயணம்
      • முறிகண்டி பிள்ளையார்
      • "காலங்கடந்த ஞானமிது"
      • "கோரத் தாண்டவம்"
      • "காலப் பெருவெளியில்"
    • அல்விற் வின்சன் படைப்புக்கள் >
      • "சிவராத்திரியும் கத்தோலிக்கமும்"
      • "முதல்பிரிவு"
      • "பாட்டன் வழி நிலம் வேண்டும்"
      • "வசந்தம்"
      • "உலக பெண்கள் தினம்!"
      • "தனித்திருப்பாய்!"
      • "என் தாய்"
      • வாழ்த்து Myliddy.fr
      • "ஊறணி" மண்ணின் நினைவு
    • ஜீவா உதயன் படைப்புக்கள் >
      • "அம்மா"
      • "தேடல்"
      • "அழகிய நாட்கள்"
      • "கவிஞர்களே"
      • "தாயே என்றும் எனக்கு நீயே!"
    • ஜீவா உதயன் படைப்புக்கள்
    • கௌதமன் படைப்புக்கள்
    • சங்கீதா தேன்கிளி படைப்புக்கள் >
      • சங்கீதா தேன்கிளி
      • "புலம்பெயர்ந்தோர் கவனத்திற்கு.."
      • "எங்கள் மயிலை மண்"
      • "பனங்கள்ளு"
      • "மின்னல்களால் இழைக்கப்பட்ட பூமி"
    • குமரேஸ்வரன் படைப்புக்கள் >
      • "என்ன வாழ்க்கை இது"
      • "தாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்"
      • "பனங்கள்ளு"
      • "தேன் கூடு"
      • "வீச்சுவலை"
    • கவின்மொழி படைப்புக்கள் >
      • "கட்டுமரம்"
      • யுகமாய் போன கணங்கள்!
    • கௌசிகனின் படைப்புக்கள்! >
      • "பூமிக்கு வந்த புது மலரே"
      • "மயிலை மண்ணில்"
      • "இயற்கைக் காவலன்"
      • "வீச்சுவலை"
      • "தேன்கூடே.... தேன்கூடே...."
      • "என் இனிய கருமரமே..."
      • "எங்கள் மயிலை மண்"
    • படம் என்ன சொல்கின்றது... >
      • "பனங்கள்ளு"
      • "வீச்சுவலை"
      • "தேன் கூடு"
      • "பனைமரம்"
      • "கட்டுமரம்"
  • சிறப்புத் தினங்கள்
    • Womens day 2015
    • மகளிர் தினம் 2014 >
      • மகளிர் தினம் 2013 >
        • "பெண்"
        • "உலக மங்கையர் தினம்!"
        • "உலக பெண்கள் தினம்!"
      • மகளிர் தினம் 2012
    • NELSON MANDELA
    • தந்தையர் தினம்
    • அன்னையர் தினம் >
      • அன்னையர் தினம்
    • மே தினம்
    • சுனாமி 2013 >
      • சுனாமி 2012
  • வாழ்த்துக்கள்
    • திருமணம் >
      • திருமண நாள் வாழ்த்து
      • வசந்தன் றஞ்சனா
    • பூப்புனித நீராட்டுவிழா
    • பிறந்தநாள் >
      • பிறந்தநாள்
      • "செல்லப்பா சண்முகநாதன்"
      • தேவி குணபாலசிங்கம்
      • திரு. வரதராஜா
      • சாரா சதானந்தம்
    • பொங்கல்
    • பொங்கல்
    • HAPPY NEW YEAR >
      • New year
    • Christmas
  • மயிலிட்டி தளங்கள்:
    • நோர்வே >
      • நோர்வே மயிலிட்டி மக்கள் ஒன்றியம்
    • பிரித்தானியா >
      • MYLIDDY MAKKAL ONRIYAM UK
      • MYLIDDY SPORTS CLUB UK
    • அமெரிக்கா
    • கனடா >
      • கனடா மயிலிட்டி மக்கள் ஒன்றியம்
    • ourmyliddy.com
  • புகைப்படங்கள்
    • அருண்குமார்
  • பாடசாலைகள்
    • மயிலிட்டி இலவச முன்பள்ளி
    • றோமன் கத்தோலிக்க வித்தியாலயம் >
      • பாடசாலை நிகழ்வுகள்
      • "ஜெயராணி நிர்மலதாசன்"
      • பிரகாசிக்கட்டும் வாழ்வு
      • ஒளி விழா 2012
  • ஒன்றுகூடல்
    • ஒன்றுகூடல் 2014
    • ஒன்றுகூடல் 2012
    • ஒன்றுகூடல் 2011
  • எம்மைப்பற்றி:
    • தொடர்புகளுக்கு:
  • மயிலை மண்ணில்
  • ஒளியும் ஒலியும்
    • ஒளியும் ஒலியும் >
      • "அண்ணை றைற்"
  • மரண அறிவித்தல் 2017
    • மரண அறிவித்தல் 2016
    • மரண அறிவித்தல் 2015
    • மரண அறிவித்தல் 2014
    • 2013 டிசம்பர் வரை
    • 2012 டிசம்பர் வரை
    • 2011 டிசம்பர் வரை
  • நினைவஞ்சலி
    • நினைவஞ்சலி
    • உருக்குமணி தர்மலிங்கம்
  • ஆறாவது அகவை
    • ஐந்தாவது அகவை
    • நான்காவது அகவை
    • மூன்றாவது அகவை
    • இரண்டாவது அகவை
    • முதலாவது அகவை >
      • DR. JERMAN MYLIDDY
      • KOWSIKAN KARUNANITHI
      • SATHANANTHAN SADACHARALINGAM
      • SANGEETHA THENKILI
      • SELVIE MANO
      • JUSTIN THEVATHASAN
      • KUMARESWARAN TAMILAN
      • ANTON GNAPRAGASHAM
      • SHAN GAJA
      • ALVIT VINCENT
      • NAVARATNARANI CHIVALINGAM
  • தந்தை தேவராஜன்
  • சாதனை
  • .
Nagenthiram Karunanithy

சைவ சித்தாந்தம் (நிறைவு) - பகுதி 40 "நாகேந்திரம் கருணாநிதி"

13/8/2017

0 Comments

 
Picture
சைவ சித்தாந்தம் – ( பகுதி – 40 )
 (நாகேந்திரம் கருணாநிதி)
தத்துவமசி – அது (இறைவன்) நீ (ஆன்மா) ஆகிறாய்
நான்கு வேதங்களிலும் பல மகா வாக்கியங்கள் கூறப்பட்டிருந்தாலும் ஒவ்வொரு வேதத்திலும் ஒவ்வொரு மகாவாக்கியம் முதன்மையானதாகக் கொள்ளப்படுகின்றது. ரிக் வேதத்தில் ஐதரேய உபநிடதத்தில் “ப்ரக்ஞானம் பிரம்மம்” (உணர்வே பரம்பொருள்) என்ற மகாவாக்கியமும், யசுர் வேதத்தில் பிரகதாரண்யக உபநிடதத்தில் “அஹம் பிரம்மாஸ்மி” (நான் பிரம்மமாயிருக்கின்றேன்) என்ற மகாவாக்கியமும், சாம   வேதத்தில் சாந்தோக்கிய உபநிடதத்தில்   “தத் த்வம் அஸி” (அது நீ ஆகிறாய்)  என்ற மகாவாக்கியமும், அதர்வண   வேதத்தில் மாண்டூக்ய உபநிடதத்தில்  “அயம் ஆத்மா பிரம்ம” (ஆத்மாதான் பரம்பொருள்) என்ற மகாவாக்கியமும் முதன்மையானதாகக் கொள்ளப்படுகின்றது.  ​

Picture
தத்துவமசி - தத் த்வம் அஸி, தத்-அது, துவம்-நீ, அசி-ஆகுறாய். இம் மகா வாக்கியம் உண்மையைப் புரியவைக்கும் வாக்கியமாகும். சாந்தோக்கிய உபநிடதத்தில் ஆறாவது அத்தியாயத்தில் உத்தாலக ஆருணி என்ற மகரிசி தனது மகன் சுவேதகேதுவை பன்னிரண்டு வயசில் வேதசாத்திரங்களை கற்பதற்காக குருகுலத்திற்கு அனுப்புகின்றார். பன்னிரண்டு வருடங்களின் பின் படிப்பு முடிந்து வந்த வாலிபனிடம் மகரிசி கேட்ட கேள்விக்கு (எதனால் கேள்விக்கெட்டாதது கேட்கப்பட்டதாயும், நினைவுக்கெட்டாதது நினைக்கப்பட்டதாயும், அறிவுக்கு எட்டாதது அறியப்பட்டதாயும் ஆகும் என்ற கேள்விக்கு) மகனிடம் பதில் கிடைக்காததால் தானே பரம்பொருளை ஒன்பது எடுத்துக் காட்டுகளால் விளக்கி, முடிந்த முடிவாக இம் மகாவாக்கியத்தை ஒன்பதுமுறை உபதேசிக்கின்றார்.

சைவ சித்தாந்த சாத்திர நூல்களில் பல இடங்களில் இவ்வுண்மை வலியுறுத்தப்படுகின்றது. உதாரணமாக  பின் வரும் அருணந்தி தேவநாயனாரால் அருளப்பட்ட சிவஞானசித்தியார் நூலின் இரண்டாம் சூத்திரம் சுபக்கம் பாடல் எண் 91 இல் இறைவன் உயிர்களிடத்தில் அத்துவிதமாய் கலந்து பிரிவின்றி நிற்பான் எனக் கூறப்பட்டுள்ளது.

“உலகெலாம் ஆகி வேறாய் உடனுமாய் ஒளியாய் ஓங்கி
அலகிலா உயிர்கள் கன்மத்து ஆனையின் அமர்ந்து செல்லத்
தலைவனாய் இவற்றின் தன்மை தனக்கு எய்தல் இன்றித் தானே
நிலவுசீர் அமலனாகி நின்றனன் நீங்காது எங்கும்.”
திருமூலநாயனார் அருளிய திருமந்திரம் எட்டாம் தந்திரத்தில் பாடல் எண் 2568,  2569,2570,2571,2577, என்பனவற்றில் தத்துவமசி பற்றிய விளக்கம் கூறப்பட்டுள்ளது.

பாடல் 2568
“சிவ துரியத்துத் தொம்பதம் சீவனார்
தாவு பர துரியத்தினில் தற்பதம்
மேவு சிவதுரியத்து அசி மெய்ப்பதம்
ஓவி விடும் தத்துவமசி உண்மையே.”

பாடல் எண் 2569
“ஆறாறு அகன்ற அணுத்தொம்பதம் சுத்தம்
ஈறான தற்பதம் எய்து உபசாந்தத்துப்
பேறாகிய சீவன் நீங்கிப் பிரசாதத்து
ஈறான தொந்தத்தசி தத்வ மசியே.”

சீவன் சிவனே எனக்கூறும் பாடல் எண் 2570
“ஆகிய அச்சோயம் தேவதத்தன் இடத்து
ஆகிய விட்டு விடாத இலக்கணைத்
தார் உபசாந்தமே தொந்தத் தசிஎன்ப
ஆகிய சீவன் பரன் சிவனாமே.”

பாடல் எண் 2571
“துவந்தத் தசியே தொந்தத் தசியும்
அவை மன்னா அந்துவயத்து ஏகமான
தவமுறு தத்துவ மசி வேதாந்த
சிவமாம் அது சித்தாந்த வேதாந்தமே.”

பாடல் எண் 2577
“நீஅது ஆனாய் எனநின்ற பேருரை
ஆயது நான்ஆனேன் என்னச் சமைந்துஅறச்
சேயசிவமாக்கும் சீர்நந்தி பேரருள்
ஆயதுவாய் அனந்த ஆனந்தி ஆகுமே.”

இம்மகா வாக்கியத்தின் உட்கருத்துப்பற்றி வெவ்வேறு வேதாந்தப் பிரிவினரின் கொள்கைகள் மாறுபடுகின்றது. இம்மகாவாக்கியத்தை விளங்குவதற்கு முன்பு முக்கியமான சில விடையங்களை நாம் அறியவேண்டியுள்ளது. முதலாவதாக இறைவன் எங்கும் நிறைந்தவனாக இருப்பதை நாம் உணரவேண்டும். இரண்டாவதாக நாம் யார் என்பது எமக்குத் தெரியவேண்டும்.

நான் இருக்கின்றேன் என்ற தனது இருப்பைப் பற்றிய அறிவு மனிதனுக்குமட்டுமே உள்ளது. மற்ற எந்த ஜீவராசிகளுக்கும் அவைகளின் இருப்பைப் பற்றிய அறிவு கிடையாது. இவ்அறிவு இருப்பதால் எது சரி எது தவறு என்னும் விடையம் மனிதனால் மட்டும் தான் உணரக்கூடியதாக உள்ளது. மற்ற ஜீவராசிகளுக்குக் கிடையாது. இதனால் ஒரு செயலைத் தேர்ந்து செய்வதோ செய்யாமல் இருக்கவோ மனிதனால் மட்டும் தான் முடியும் மற்ற ஜீவராசிகளால் முடியாது. இவ்வாறே மனிதனுக்கு வாழ்க்கையில் குறிக்கோள் என்று ஒன்று உண்டு. இக்குறிக்கோளை நான்கு பகுதியாகச் சாஸ்திரங்கள் பிரித்துக் கூறுகின்றன. அவையாவன
1. பொருள் (பாதுகாப்பைத் தேடி அதன் மூலம் மன நிறைவை பெறுவது.),
2. இன்பம் (மன மகிழ்ச்சி மூலம் மன நிறைவை பெறுவது.),
3. அறம் (தர்மம்) (அறவழியில் வாழ்வதன் மூலம் மன நிறைவை பெறுவது),
​4. வீடுபேறு (நிறைவு). நிறைவை அறிதலே நிறைவை அடைதலாகும். நிறைவு என்பது பரம்பொருளின் சொரூபம். சூடாயிருப்பதே நெருப்பின் சொரூபம் போல நிறைவாயிருப்பதே பரம்பொருளின் சொரூபம். சூரியனும் ஒளியும், நெருப்பும் சூடும் இருவேறு பொருட்களல்ல. அவ்வாறே பரம்பொருளும் நிறைவும் இரு வேறு பொருட்கள் அல்ல. நெருப்பை அறிந்தால் சூட்டைப் புரிந்து கொள்வதுபோல, சூரியனை அறிந்தால் ஒளியைப் புரிந்து கொள்வதுபோல பரம் பொருளை அறிதலே நிறைவை புரிந்துகொள்வதாகும். எனவே நிறைவை அறிதலே பரம்பொருளை தெரிந்துகொள்வதாகும். எந்த ஒரு பொருள் அண்டசராசரங்களுமாக விளங்குகின்றதோ அதுவே பரம்பொருளாகும். கடலின் இருப்பாக இருப்பது நீராகும். அவ்வாறு அலைகளின் இருப்பும் நீராகும், நீர் இல்லாவிடில் கடலோ, அலையோ இருக்கமாட்டாது. அவ்வாறே பரம்பொருள் (மெய்ப்பொருள்) இல்லாவிடில் அண்டசராசரங்களும் இருக்காது. கடலாகிய காரணப் பொருளுக்கு நீர் காரியமாக இருப்பது போல, தங்கமான  காரணப் பொருளுக்கு ஆபரணம் காரியமாக இருப்பது போல, (மரம் காரணம் தளபாடம் காரியம்) காரணம் இல்லாமல் காரியம் இருக்கமுடியாது ஆனால் காரியம் இல்லாமல் காரணம் இருக்கமுடியும். கடல் இருக்கிறது என்றால் நீர் இருக்கின்றது என்பதைப்போல பிரபஞ்சம் இருக்கின்றது என்றால் பரம்பொருள் இருக்கின்றது என்பது நிரூபணமாகிறது. எனவே எல்லாம் சிவமயம் (பரம்பொருள்) நீ யார் என்று உனக்குத் தெரியாது. தெரிந்தால் பரம்பொருளை அறிவாய். தத்துவமசி என்னும் மகாவாக்கியத்தின் பொருளை புரிந்து கொள்வதற்கு பரம்பொருளை தெளிவாகப் புரிந்து கொள்ளவேண்டும். எனவே பரம்பொருளைப் புரிந்துகொண்டால் மகாவாக்கியத்தைப் புரிந்து கொள்ளலாம். மகாவாக்கியத்தை அதாவது நீயே பரம்பொருள் என்பதைப் புரிந்துகொண்டால் நிறைவு கிடைக்கும்.

நிறைவுபெறுகிறது.

அன்புடையீர்,
             சைவசித்தாந்தத்தில் எனக்குக் கிடைத்த அனுபவத்தை இதுவரை காலமும் என்னுடன் பகிர்ந்துகொண்ட உங்கள் அனைவருக்கும் முதலில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். இத்துடன் இணைத்துள்ள கட்டுரையுடன் சைவ சித்தாந்தத் தொடர் கட்டுரையை நிறைவிற்குக் கொண்டுவருகின்றேன். மேலும்

“தேவர் குறளும் திருநாள் மறைமுடிவும்
மூவர் தமிழும் முனிமொழியும் – கோவை
திருவாசகமும் திருமூலர் சொல்லும்
ஒருவாசகம் என்று உணர்.”

என ஔவையாரால் புகழாரம் சூட்டப்பட்ட சைவசமயத்திற்குக் கிடைத்த அரிய பொக்கிஷமான திருமந்திரத்தில் இறை அருளால் லண்டன் சைவமுன்னேற்றச் சங்க சைவசித்தாந்தப் பயிற்சி மையத்திற்கூடாக எனது குரு திரு பற்றிமாகரன் அவர்கள் மூலம் நான் பெற்ற அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்துகொள்ள எண்ணியுள்ளேன்.
                                            அன்புடன்
                                           நாகேந்திரம் கருணாநிதி
இந்தப் பக்கம் Hit Counter by Digits தடவை பார்வையிடப்பட்டுள்ளது.
0 Comments



Leave a Reply.

    Photo

    என்னைப்பற்றி

    நாகேந்திரம் கருணாநிதி
    மயிலிட்டி

    பதிவுகள்

    August 2017
    July 2017
    May 2017
    April 2017
    March 2017
    January 2017
    December 2016
    November 2016
    October 2016
    September 2016
    August 2016
    July 2016
    June 2016
    May 2016
    April 2016
    February 2016
    January 2016
    November 2015
    October 2015
    September 2015
    August 2015
    July 2015
    June 2015
    May 2015
    April 2015
    March 2015
    February 2015
    January 2015

    முழுப்பதிவுகள்

    All

      தொடர்புகளுக்கு:

    Submit
நன்றி மீண்டும் வருக!

நன்றி மீண்டும் வருக!

நன்றி மீண்டும் வருக!
Hit Counter by Digits
© 2011-22 myliddy.fr