மயிலிட்டி மக்கள் ஒன்றியம் பிரான்ஸ்
  • நல்வரவு 2025
    • நல்வரவு 2024
    • நல்வரவு 2023
    • நல்வரவு 2022
    • நல்வரவு 2021
    • நல்வரவு 2020
    • நல்வரவு 2019
    • நல்வரவு 2018
    • நல்வரவு 2017
    • நல்வரவு 2016
    • நல்வரவு 2015
    • நல்வரவு 2014
    • நல்வரவு! 2013, 12, 11
  • ஆலயங்கள்
    • மருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் >
      • ஆலய வரலாறு
      • பரிபாலன சபையினர்
    • காணிக்கை மாதா தேவாலயம்
    • காணிக்கை மாதா தேவாலயம்
    • ஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்
    • முனையன் வளவு முருகையன் ஆலயம்
  • மயிலிட்டி செய்திகள்
    • மயிலிட்டி கோவில் பாடல்
  • கவிதைகள் / ஆக்கங்கள்
    • சண் கஜா (மயிலைக் கவி) படைப்புக்கள் >
      • சண் கஜா (மயிலைக் கவி) படைப்புக்கள் >
        • கிளாலி பயணம்
        • முறிகண்டி பிள்ளையார்
        • "காலங்கடந்த ஞானமிது"
        • "கோரத் தாண்டவம்"
        • "காலப் பெருவெளியில்"
    • நாகேந்திரம் கருணாநிதி
    • அருண்குமார் குணபாலசிங்கம்
    • அஞ்சலி வசீகரன்
    • மகிபாலன் மதீஸ்
    • மயிலையூர் தனு
    • அகஸ்ரின் இரவீந்திரன்
    • Image Gautham
    • தயாநிதி தம்பையா
    • மயிலை துரை
    • ஐங்கரன் படைப்புக்கள்
    • "மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்"
    • சுதா நவம் படைப்புக்கள்
    • வசந்த் சகாதேவன் படைப்புக்கள்
    • ஜெயராணி படைப்புக்கள் >
      • தொலைந்த ஏக்கங்கள்
      • வாழ்வின் பயம்
      • நானும் என் தேவதையும்
    • Dr. ஜேர்மன் பக்கம் >
      • "உலக மங்கையர் தினம்!"
      • சிந்தனை வரிகள் Dr. Jerman
    • அன்ரன் றாஜ் படைப்புக்கள்
    • சாந்தன் படைப்புக்கள் >
      • "சாந்தன் படைப்புக்கள்"
      • "சிந்தனை வரிகள் நமக்கு"
      • "ரோஜா மலரே"
      • "பெண்"
      • "பணம்"
      • "ரிசானா"
      • "புத்தாண்டே வருக! 2013"
      • "சுனாமி"
      • "உறவுகள்"
      • "கடல் அன்னை"
      • "சிந்தனை உலகம்"
      • "மயிலையின் பெருமை"
      • "மனம் கவர்ந்தவளே"
      • "சொர்க்கபூமி"
      • "கருவில் சுமந்தவளே"
      • "போராட்டம்!"
      • "சிந்தனை வரிகள்"
      • "என் கவிதை"
      • "சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே!"
      • "பசுமை மலரும் நிச்சயம்"
      • "தென்றல்"
      • "காதலியே"
      • "அப்பா"
      • "ஏக்கம்"
      • "இறைவனின் சாபம்!"
      • "புத்தாண்டே வருக! 2012"
      • "அம்மா!"
      • "தவிப்பு"
      • "ஆசை"
      • "மயிலை மண்ணே"
      • "அழகு"
      • "நிம்மதி"
    • அருண்குமார் படைப்புக்கள் >
      • இருண்டுபோன நாளின் நினைவுகள்!
      • "சமர்ப்பணம்"
      • "மீண்டும் வாழ வழி செய்வோம்"
      • "நினைவுகள் 2" "மடம்"
      • "நினைவுகள் 1" "மண்சோறு"
      • "நான் பிறந்த மண்ணே !"
    • அல்விற் வின்சன் படைப்புக்கள் >
      • "சிவராத்திரியும் கத்தோலிக்கமும்"
      • "முதல்பிரிவு"
      • "பாட்டன் வழி நிலம் வேண்டும்"
      • "வசந்தம்"
      • "உலக பெண்கள் தினம்!"
      • "தனித்திருப்பாய்!"
      • "என் தாய்"
      • வாழ்த்து Myliddy.fr
      • "ஊறணி" மண்ணின் நினைவு
    • ஜீவா உதயன் படைப்புக்கள் >
      • "அம்மா"
      • "தேடல்"
      • "அழகிய நாட்கள்"
      • "கவிஞர்களே"
      • "தாயே என்றும் எனக்கு நீயே!"
    • ஜீவா உதயன் படைப்புக்கள்
    • கௌதமன் படைப்புக்கள்
    • சங்கீதா தேன்கிளி படைப்புக்கள் >
      • சங்கீதா தேன்கிளி
      • "புலம்பெயர்ந்தோர் கவனத்திற்கு.."
      • "எங்கள் மயிலை மண்"
      • "பனங்கள்ளு"
      • "மின்னல்களால் இழைக்கப்பட்ட பூமி"
    • குமரேஸ்வரன் படைப்புக்கள் >
      • "என்ன வாழ்க்கை இது"
      • "தாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்"
      • "பனங்கள்ளு"
      • "தேன் கூடு"
      • "வீச்சுவலை"
    • கவின்மொழி படைப்புக்கள் >
      • "கட்டுமரம்"
      • யுகமாய் போன கணங்கள்!
    • கௌசிகனின் படைப்புக்கள்! >
      • "பூமிக்கு வந்த புது மலரே"
      • "மயிலை மண்ணில்"
      • "இயற்கைக் காவலன்"
      • "வீச்சுவலை"
      • "தேன்கூடே.... தேன்கூடே...."
      • "என் இனிய கருமரமே..."
      • "எங்கள் மயிலை மண்"
    • படம் என்ன சொல்கின்றது... >
      • "பனங்கள்ளு"
      • "வீச்சுவலை"
      • "தேன் கூடு"
      • "பனைமரம்"
      • "கட்டுமரம்"
  • துயர் பகிர்வுகள்
    • மரண அறிவித்தல்கள் 2025
    • மரண அறிவித்தல்கள் 2024
    • மரண அறிவித்தல்கள் 2023
  • வாழ்த்துக்கள்
    • திருமணம் >
      • திருமண நாள் வாழ்த்து
      • வசந்தன் றஞ்சனா
    • பூப்புனித நீராட்டுவிழா
    • பிறந்தநாள் >
      • பிறந்தநாள்
      • "செல்லப்பா சண்முகநாதன்"
      • தேவி குணபாலசிங்கம்
      • திரு. வரதராஜா
      • சாரா சதானந்தம்
    • பொங்கல்
    • பொங்கல்
    • HAPPY NEW YEAR >
      • New year
    • Christmas
  • கலைமகள் மகா வித்தியாலயம்
  • மயிலிட்டி தளங்கள்:
    • நோர்வே >
      • நோர்வே மயிலிட்டி மக்கள் ஒன்றியம்
    • பிரித்தானியா >
      • MYLIDDY MAKKAL ONRIYAM UK
      • MYLIDDY SPORTS CLUB UK
    • கனடா >
      • கனடா மயிலிட்டி மக்கள் ஒன்றியம்
    • ourmyliddy.com
  • புகைப்படங்கள்
    • அருண்குமார்
  • பாடசாலைகள்
    • மயிலிட்டி இலவச முன்பள்ளி
    • றோமன் கத்தோலிக்க வித்தியாலயம் >
      • பாடசாலை நிகழ்வுகள்
      • "ஜெயராணி நிர்மலதாசன்"
      • பிரகாசிக்கட்டும் வாழ்வு
      • ஒளி விழா 2012
  • ஒன்றுகூடல்
    • ஒன்றுகூடல் 2014
    • ஒன்றுகூடல் 2012
    • ஒன்றுகூடல் 2011
  • எம்மைப்பற்றி:
    • தொடர்புகளுக்கு:
  • மயிலை மண்ணில்
  • ஒளியும் ஒலியும்
    • ஒளியும் ஒலியும் >
      • "அண்ணை றைற்"
  • மரண அறிவித்தல் 2017
    • மரண அறிவித்தல் 2016
    • மரண அறிவித்தல் 2015
    • மரண அறிவித்தல் 2014
    • 2013 டிசம்பர் வரை
    • 2012 டிசம்பர் வரை
    • 2011 டிசம்பர் வரை
  • நினைவஞ்சலி
    • நினைவஞ்சலி
    • உருக்குமணி தர்மலிங்கம்
  • ஆறாவது அகவை
    • ஐந்தாவது அகவை
    • நான்காவது அகவை
    • மூன்றாவது அகவை
    • இரண்டாவது அகவை
    • முதலாவது அகவை >
      • DR. JERMAN MYLIDDY
      • KOWSIKAN KARUNANITHI
      • SATHANANTHAN SADACHARALINGAM
      • SANGEETHA THENKILI
      • SELVIE MANO
      • JUSTIN THEVATHASAN
      • KUMARESWARAN TAMILAN
      • ANTON GNAPRAGASHAM
      • SHAN GAJA
      • ALVIT VINCENT
      • NAVARATNARANI CHIVALINGAM
  • தந்தை தேவராஜன்
  • சாதனை
  • சிறப்புத் தினங்கள்
    • Womens day 2015
    • மகளிர் தினம் 2014 >
      • மகளிர் தினம் 2013 >
        • "பெண்"
        • "உலக மங்கையர் தினம்!"
        • "உலக பெண்கள் தினம்!"
      • மகளிர் தினம் 2012
    • NELSON MANDELA
    • தந்தையர் தினம்
    • அன்னையர் தினம் >
      • அன்னையர் தினம்
    • மே தினம்
    • சுனாமி 2013 >
      • சுனாமி 2012
  • .

சைவ சித்தாந்தம் - பகுதி 28 "நாகேந்திரம் கருணாநிதி"

15/7/2016

0 Comments

 
Picture
சைவ சித்தாந்தம் – ( பகுதி – 28 ) 
(நாகேந்திரம் கருணாநிதி)
சைவ சித்தாந்த சாத்திரங்கள் 
3. சிவஞான போதம்
சிவஞான போதம். கி.பி.13 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த திருக்கயிலாய பரம்பரையில் வந்த புறச்சந்தான குரவர் நால்வரில் (1 முதலாவது) ஒருவரான பெண்ணாகடம் மெய்கண்ட தேவநாயனார் (மெய்கண்ட தேவர்) அவர்களால் அருளப்பட்டது. இவர் பரஞ்சோதி முனிவரால் ஞான உபதேசம் பெற்று, அவரால் மெய்கண்ட தேவர்  என்ற திருநாமமும் இடப்பெற்று குழந்தைப் பருவத்திலேயே இறையருள் ஞானம் பெற்றவராவார். இந்நூல் சைவ சித்தாந்த சாத்திரங்களில் மணி முடியாய் அதாவது முதல் நிலையில் விளங்கும் நூலாகும். இந்நூலுக்குப் பின் வந்த பல நூல்களுக்கு இந்நூல் அடிப்படைக் கருவூலமாக அமைந்தது.  இந்நூல் தட்சணாமூர்த்தியின் திருக்கரத்தில் இருக்கும் பாக்கியம் பெற்ற நூலாகும். இந்நூல் பன்னிரெண்டு சூத்திரங்களைக் கொண்டது. ஒவ்வொரு சூத்திரத்துடனும் அச்சூத்திரத்தில்க் கூறப்பட்ட விடையத்தை விரிவாகக் கூறுவதற்காக அதிகரணங்கள் கூறப்பட்டு, அதற்கு உதாரணங்களும் கூறப்பட்டுள்ளன.

Picture
முதல் சூத்திரம். பொதுவதிகாரம் – பிரமாண இயல்
“அவன் அவள் அதுவெனும் அவைமூ வினைமையில்
தோற்றிய திதியே ஒடுங்கிமலத்து உளதாம்
அந்தம் ஆதி என்மனார் புலவர்.”
இச்சூத்திரத்தின் பொருள், அவன், அவள், அது என்று சுட்டிக் கூறப்படுகின்ற உலகம் தோன்றல், இருத்தல், மறைதல் என்ற மூன்று தொழில்களைக் கொண்டமையால் ஒருவனால் தோற்றுவிக்கப் பெற்ற உள் பொருளே ஆகும். அவ்வுலகம் கன்ம மலத்தினால் தான் ஒடுங்குவதற்கு இடமாகிய கடவுளிடத்தினின்று ஆணவ மலத்தினால் மீண்டும் தோன்றும். ஆதலால் அந்தமாகிய அழித்தல்த் தொழிலைச் செய்கின்ற கடவுளே உலகிற்கு முதற்கடவுள் என்று அளவை நூல் உணர்ந்தோர் கூறுவர்.
மேற்படி முதலாவது சூத்திரம் மூன்று அதிகரணங்கள் மற்றும் ஐந்து உதாரணங்கள் மூலம் கூறுவதாவது
1.உள்பொருளாகிய உலகம் தோன்றி, நிலைத்து, ஒடுங்குவதால் அம்முத்தொழிலைச் செய்யக் கருத்தா ஒருவர் வேண்டும். 2.அக்கருத்தா சங்காரகாரணன் ஆவான். 3.அவனே முழுமுதற்கடவுள். 4.உலகம் இறை சத்தியிலிருந்து மாயையால். தோற்றுவிக்கப்படுகின்றது. 5.மாயை தானே தோன்றி ஒடுங்காது. அதனைத் தோற்றுவிப்பவர் பிரமனும், திருமாலும் அல்லாத சங்காரகாரணன் ஆகிய சிவனே ஆவான்.
இரண்டாம் சூத்திரம்.
“அவையே தானேயாய் இருவினையில்
போக்கு வரவு புரிய ஆணையின்
நீக்கம் இன்றி நிற்கும் அன்றே.”
இச்சூத்திரத்தின் பொருள், இறைவன் உயிர்களோடு உயிரேயாய் கலப்பினால் ஒன்றாயும், பொருள் தன்மையால் உயிர்களினின்று வேறாயும், உயிருக்கு உயிராய தன்மையால் அவ்வுயிர்களோடு உடனாகியும், தனது சிற்சத்தியாகிய ஆணையால் நல்வினை தீவினை என்னும் இரண்டு வினைகளால் உயிர்கள் இறப்பு, பிறப்புக்களைப் புரியும்படி செய்து, செய்கின்ற சிற்சத்தியினின்று நீக்கமின்றித் தொன்று தொட்டு நிற்பான்.
மேற்படி இரண்டாவது சூத்திரம் நான்கு அதிகரணங்கள் மற்றும் பத்து உதாரணங்கள் மூலம் கூறுவதாவது
இறைவன் உயிர்களோடு ஒன்றாகவும் வேறாகவும் உடனாகவும் நின்று உயிர்கள் செய்த வினைகளுக்கு ஏற்பத் தனது திருவருளாகிய சத்தியினால் பிறப்பு இறப்புக்களை ஊட்டுவான் என்றும், சத்தியோடு பிரிவின்றி எல்லாப் பொருள்களிலும் சகல வியாபியாய் இருப்பான்.
மூன்றாம் சூத்திரம்.
“உளதுஇலது என்றலின், எனதுடல் என்றலின்,
ஐம்புலன் ஒடுக்கம் அறிதலின், கண்படில்
உண்டிவினை இன்மையின், உணர்த்த உணர்தலின்,
மாயா இயந்திர தனுவினுள் ஆன்மா.”
இச்சூத்திரம் பசு உண்மையாகிய உயிர் உள்ளது என்பதை விளக்குவதாகும். இச்சூத்திரத்தில் சூனிய ஆன்மவாதி, தேக ஆன்மவாதி, இந்திரிய ஆன்மவாதி, சூக்கும தேக ஆன்மவாதி, பிராண ஆன்மவாதி, பிரம்ம ஆன்மவாதி, சமூக ஆன்மவாதி என்னும் எழுவரை மறுத்து உடலுக்கு வேறான உயிரானது உடலில் உள்ளது என்பதை நிலை நாட்டுகிறது.
மேற்படி மூன்றாவது சூத்திரம் ஏழு அதிகரணங்கள் மற்றும் ஏழு உதாரணங்கள் மூலம் கூறுவதாவது
உயிர் பற்றிய ஏழு மதத்தாரின் கூற்றுக்களை மறுத்து ஆன்மா என்பது தனி ஒன்றாகும். அது மாயையின் காரியமாகிய உடம்பில் உள்ளது என்னும் உயிரின் உண்மையைப் புலப்படுத்துகின்றது.
நான்காம் சூத்திரம். இலக்கண இயல்
“அந்தக்கரணம் அவற்றின் ஒன்றுஅன்று அவை
சந்தித்தது ஆன்மாச் சகசமலத்து உணராது
அமைச்சரசு ஏய்ப்பநின்ற அஞ்சவத் தைத்தே.”
இச்சூத்திரத்தின் பொருள், உயிரானது மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என்னும் நான்கு அகக் கருவிகளுள் ஒன்று ஆகாது. இருப்பினும் அவ்வுயிர் ஆணவமலத்தினால் தனக்கென ஓர் அறிவு இல்லாமையினால், அமைச்சரோடு கூடிய அரசனைப் போல அந்த அந்தக்கரணங்களைக் கூடி அறிகிறது. மேலும் நனவு, கனவு, உறக்கம், பேருறக்கம், உயிர்ப்படக்கம் என்னும் ஐந்து அவத்தைகளை உடையதாகும்.
மேற்படி நான்காவது சூத்திரம் மூன்று அதிகரணங்கள் மற்றும் ஏழு உதாரணங்கள் மூலம் கூறுவதாவது
உயிர் அந்தக்கரணங்களில் ஒன்றன்று. ஆணவமலத்தோடு கூடியதால் அறிவு மறைக்கப்பட்ட உயிர் அது நீங்குதற் பொருட்டு அந்தக்கரணங்களைக் கூடுகிறது. அவ்வாறு கூடுகின்ற பொழுது ஐந்தவத்தைகளைப் பெறுகின்றது. இதுவே உயிருக்குரிய பொது இலக்கணமாகும். அந்தக்கரணங்கள் இந்திரியங்களை நோக்க அறிவுடையதாகவும், உயிரை நோக்க அறிவற்றதாகவும் விளங்கும்.
ஐந்தாம் சூத்திரம்
“விளம்பிய உள்ளத்து மெய்வாய் கண்மூக்கு
அளந்தறிந் தறியா ஆங்கவை போலத்
தாம்தம் உணர்வின் தமிஅருள்
காந்தம் கண்ட பசாசத் தவையே.”
இச்சூத்திரத்தின் பொருள், உயிரால் மெய், வாய், கண், மூக்கு, செவி என்பன தத்தமக்குரிய விஷயங்களை அளவிட்டு அறியும். ஆனால் அறியும் தன்மையும் தம்மை அறிய வைக்கின்ற உயிரையும் அறியமாட்டாது. அந்த ஐம்பொறிகளைப் போல உயிர்கள் தமது உணர்விற்கு முதன்மையாக அமைந்த இறைவனின் திரோதான சத்தியால் தத்தம் வினைப் பயன்களை அறிந்து நுகர்ந்தும் தம்மையும் தம்மைச் செலுத்துகின்ற திருவருளையும் அறியமாட்டாது. காந்தத்தைக் கண்டு எதிர்ப்பட்ட இரும்பு போல இறைவனின் முன்னிலையில் உயிர் தொழிற்படும். ​
இந்தப் பக்கம் Hit Counter by Digits தடவை பார்வையிடப்பட்டுள்ளது.
0 Comments



Leave a Reply.

    Photo

    என்னைப்பற்றி

    நாகேந்திரம் கருணாநிதி
    மயிலிட்டி

    பதிவுகள்

    April 2025
    March 2025
    January 2025
    June 2024
    April 2024
    August 2023
    November 2022
    July 2022
    March 2022
    February 2022
    December 2020
    November 2020
    February 2020
    September 2019
    June 2019
    March 2019
    February 2019
    January 2019
    December 2018
    October 2018
    September 2018
    August 2018
    July 2018
    June 2018
    May 2018
    April 2018
    February 2018
    January 2018
    December 2017
    November 2017
    October 2017
    August 2017
    July 2017
    May 2017
    April 2017
    March 2017
    January 2017
    December 2016
    November 2016
    October 2016
    September 2016
    August 2016
    July 2016
    June 2016
    May 2016
    April 2016
    February 2016
    January 2016
    November 2015
    October 2015
    September 2015
    August 2015
    July 2015
    June 2015
    May 2015
    April 2015
    March 2015
    February 2015
    January 2015

    முழுப்பதிவுகள்

    All
    திருமந்திரம் தொடர்கள்

      தொடர்புகளுக்கு:

    Submit
Powered by Create your own unique website with customizable templates.