மயிலிட்டி மக்கள் ஒன்றியம் பிரான்ஸ்
  • நல்வரவு 2022
    • நல்வரவு 2021
    • நல்வரவு 2020
    • நல்வரவு 2019
    • நல்வரவு 2018
    • நல்வரவு 2017
    • நல்வரவு 2016
    • நல்வரவு 2015
    • நல்வரவு 2014
    • நல்வரவு! 2013, 12, 11
  • ஆலயங்கள்
    • மருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் >
      • ஆலய வரலாறு
      • பரிபாலன சபையினர்
    • காணிக்கை மாதா தேவாலயம்
    • ஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்
    • முனையன் வளவு முருகையன் ஆலயம்
  • கவிதைகள் / ஆக்கங்கள்
    • நாகேந்திரம் கருணாநிதி
    • அருண்குமார் குணபாலசிங்கம்
    • அஞ்சலி வசீகரன்
    • மகிபாலன் மதீஸ்
    • மயிலையூர் தனு
    • அகஸ்ரின் இரவீந்திரன்
    • Image Gautham
    • தயாநிதி தம்பையா
    • மயிலை துரை
    • ஐங்கரன் படைப்புக்கள்
    • "மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்"
    • சுதா நவம் படைப்புக்கள்
    • வசந்த் சகாதேவன் படைப்புக்கள்
    • ஜெயராணி படைப்புக்கள் >
      • தொலைந்த ஏக்கங்கள்
      • வாழ்வின் பயம்
      • நானும் என் தேவதையும்
    • Dr. ஜேர்மன் பக்கம் >
      • "உலக மங்கையர் தினம்!"
      • சிந்தனை வரிகள் Dr. Jerman
    • அன்ரன் றாஜ் படைப்புக்கள்
    • சாந்தன் படைப்புக்கள் >
      • "சாந்தன் படைப்புக்கள்"
      • "சிந்தனை வரிகள் நமக்கு"
      • "ரோஜா மலரே"
      • "பெண்"
      • "பணம்"
      • "ரிசானா"
      • "புத்தாண்டே வருக! 2013"
      • "சுனாமி"
      • "உறவுகள்"
      • "கடல் அன்னை"
      • "சிந்தனை உலகம்"
      • "மயிலையின் பெருமை"
      • "மனம் கவர்ந்தவளே"
      • "சொர்க்கபூமி"
      • "கருவில் சுமந்தவளே"
      • "போராட்டம்!"
      • "சிந்தனை வரிகள்"
      • "என் கவிதை"
      • "சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே!"
      • "பசுமை மலரும் நிச்சயம்"
      • "தென்றல்"
      • "காதலியே"
      • "அப்பா"
      • "ஏக்கம்"
      • "இறைவனின் சாபம்!"
      • "புத்தாண்டே வருக! 2012"
      • "அம்மா!"
      • "தவிப்பு"
      • "ஆசை"
      • "மயிலை மண்ணே"
      • "அழகு"
      • "நிம்மதி"
    • அருண்குமார் படைப்புக்கள் >
      • இருண்டுபோன நாளின் நினைவுகள்!
      • "சமர்ப்பணம்"
      • "மீண்டும் வாழ வழி செய்வோம்"
      • "நினைவுகள் 2" "மடம்"
      • "நினைவுகள் 1" "மண்சோறு"
      • "நான் பிறந்த மண்ணே !"
    • சண் கஜா (மயிலைக் கவி) படைப்புக்கள் >
      • சண் கஜா (மயிலைக் கவி) படைப்புக்கள்
      • கிளாலி பயணம்
      • முறிகண்டி பிள்ளையார்
      • "காலங்கடந்த ஞானமிது"
      • "கோரத் தாண்டவம்"
      • "காலப் பெருவெளியில்"
    • அல்விற் வின்சன் படைப்புக்கள் >
      • "சிவராத்திரியும் கத்தோலிக்கமும்"
      • "முதல்பிரிவு"
      • "பாட்டன் வழி நிலம் வேண்டும்"
      • "வசந்தம்"
      • "உலக பெண்கள் தினம்!"
      • "தனித்திருப்பாய்!"
      • "என் தாய்"
      • வாழ்த்து Myliddy.fr
      • "ஊறணி" மண்ணின் நினைவு
    • ஜீவா உதயன் படைப்புக்கள் >
      • "அம்மா"
      • "தேடல்"
      • "அழகிய நாட்கள்"
      • "கவிஞர்களே"
      • "தாயே என்றும் எனக்கு நீயே!"
    • ஜீவா உதயன் படைப்புக்கள்
    • கௌதமன் படைப்புக்கள்
    • சங்கீதா தேன்கிளி படைப்புக்கள் >
      • சங்கீதா தேன்கிளி
      • "புலம்பெயர்ந்தோர் கவனத்திற்கு.."
      • "எங்கள் மயிலை மண்"
      • "பனங்கள்ளு"
      • "மின்னல்களால் இழைக்கப்பட்ட பூமி"
    • குமரேஸ்வரன் படைப்புக்கள் >
      • "என்ன வாழ்க்கை இது"
      • "தாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்"
      • "பனங்கள்ளு"
      • "தேன் கூடு"
      • "வீச்சுவலை"
    • கவின்மொழி படைப்புக்கள் >
      • "கட்டுமரம்"
      • யுகமாய் போன கணங்கள்!
    • கௌசிகனின் படைப்புக்கள்! >
      • "பூமிக்கு வந்த புது மலரே"
      • "மயிலை மண்ணில்"
      • "இயற்கைக் காவலன்"
      • "வீச்சுவலை"
      • "தேன்கூடே.... தேன்கூடே...."
      • "என் இனிய கருமரமே..."
      • "எங்கள் மயிலை மண்"
    • படம் என்ன சொல்கின்றது... >
      • "பனங்கள்ளு"
      • "வீச்சுவலை"
      • "தேன் கூடு"
      • "பனைமரம்"
      • "கட்டுமரம்"
  • சிறப்புத் தினங்கள்
    • Womens day 2015
    • மகளிர் தினம் 2014 >
      • மகளிர் தினம் 2013 >
        • "பெண்"
        • "உலக மங்கையர் தினம்!"
        • "உலக பெண்கள் தினம்!"
      • மகளிர் தினம் 2012
    • NELSON MANDELA
    • தந்தையர் தினம்
    • அன்னையர் தினம் >
      • அன்னையர் தினம்
    • மே தினம்
    • சுனாமி 2013 >
      • சுனாமி 2012
  • வாழ்த்துக்கள்
    • திருமணம் >
      • திருமண நாள் வாழ்த்து
      • வசந்தன் றஞ்சனா
    • பூப்புனித நீராட்டுவிழா
    • பிறந்தநாள் >
      • பிறந்தநாள்
      • "செல்லப்பா சண்முகநாதன்"
      • தேவி குணபாலசிங்கம்
      • திரு. வரதராஜா
      • சாரா சதானந்தம்
    • பொங்கல்
    • பொங்கல்
    • HAPPY NEW YEAR >
      • New year
    • Christmas
  • மயிலிட்டி தளங்கள்:
    • நோர்வே >
      • நோர்வே மயிலிட்டி மக்கள் ஒன்றியம்
    • பிரித்தானியா >
      • MYLIDDY MAKKAL ONRIYAM UK
      • MYLIDDY SPORTS CLUB UK
    • அமெரிக்கா
    • கனடா >
      • கனடா மயிலிட்டி மக்கள் ஒன்றியம்
    • ourmyliddy.com
  • புகைப்படங்கள்
    • அருண்குமார்
  • பாடசாலைகள்
    • மயிலிட்டி இலவச முன்பள்ளி
    • றோமன் கத்தோலிக்க வித்தியாலயம் >
      • பாடசாலை நிகழ்வுகள்
      • "ஜெயராணி நிர்மலதாசன்"
      • பிரகாசிக்கட்டும் வாழ்வு
      • ஒளி விழா 2012
  • ஒன்றுகூடல்
    • ஒன்றுகூடல் 2014
    • ஒன்றுகூடல் 2012
    • ஒன்றுகூடல் 2011
  • எம்மைப்பற்றி:
    • தொடர்புகளுக்கு:
  • மயிலை மண்ணில்
  • ஒளியும் ஒலியும்
    • ஒளியும் ஒலியும் >
      • "அண்ணை றைற்"
  • மரண அறிவித்தல் 2017
    • மரண அறிவித்தல் 2016
    • மரண அறிவித்தல் 2015
    • மரண அறிவித்தல் 2014
    • 2013 டிசம்பர் வரை
    • 2012 டிசம்பர் வரை
    • 2011 டிசம்பர் வரை
  • நினைவஞ்சலி
    • நினைவஞ்சலி
    • உருக்குமணி தர்மலிங்கம்
  • ஆறாவது அகவை
    • ஐந்தாவது அகவை
    • நான்காவது அகவை
    • மூன்றாவது அகவை
    • இரண்டாவது அகவை
    • முதலாவது அகவை >
      • DR. JERMAN MYLIDDY
      • KOWSIKAN KARUNANITHI
      • SATHANANTHAN SADACHARALINGAM
      • SANGEETHA THENKILI
      • SELVIE MANO
      • JUSTIN THEVATHASAN
      • KUMARESWARAN TAMILAN
      • ANTON GNAPRAGASHAM
      • SHAN GAJA
      • ALVIT VINCENT
      • NAVARATNARANI CHIVALINGAM
  • தந்தை தேவராஜன்
  • சாதனை
  • .
Nagenthiram Karunanithy

சைவ சித்தாந்தம் - பகுதி 22 "நாகேந்திரம் கருணாநிதி"

6/2/2016

0 Comments

 
Photo
சைவ சித்தாந்தம் – ( பகுதி – 22 )
(நாகேந்திரம் கருணாநிதி)
2. பசு ( உயிர், ஆன்மா )
ஆன்மா கருவிகரணங்களோடு நிற்றல் பொது இயல்பாகும். கருவிகரணங்களிலிருந்து நீங்கி உடனாய் நிற்கும் சிவமாக நிற்றல்சிறப்பியல்பாகும். உயிர்கள் அநாதி, என்றும் உள்ளவை. இறைவனால் உண்டாக்கப்படாதவை எனச் சைவசித்தாந்தம் கூறுகிறது. கிறீஸ்துவ, ஸ்லாம் தவிர்ந்த இந்தியாவிலுள்ள மற்ற எல்லா மதங்களும் இதை ஏற்றுக்கொள்கின்றன. உயிர் ஒரு தனிப்பொருள் என சைவசித்தாந்தம் பின் வரும் காரணங்களைக் காட்டி விளக்குகிறது.

Photo
1. உயிர் என்று ஒரு பொருள் இல்லை என எந்த அறிவைக்கொண்டு கூறுகிறாயோ அந்த அறிவே உயிர்.
2. உடல் அறிவற்றதாலும் உயிர் அறிவுள்ளதாலும் இரண்டும் வேறு வேறே.
3. உயிர் ஐம்பொறிகளையும் ஒருங்கே அறிவதால் அதிலிருந்தும் வேறாக உள்ளது.
இவ்வுண்மையைச் சிவஞானபோதம் 3 ஆம் சூத்திரம் பாடல் எண் 1 இல்
“உளதுஇலது என்றலின், எனதுடல் என்றலின்,
ஐம்புலன் ஒடுக்கம் அறிதலின், கண்படில்
உண்டிவினை இன்மையின், உணர்த்த உணர்தலின்,
மாயா இயந்திர தனுவினுள் ஆன்மா.”
உயிர் என்ற ஒன்று இல்லை என்று கூறும்பொழுது அவ்வாறு கூறுவதற்கு அறிவு இருப்பதால் அந்த அறிவே உயிராக உள்ளது என்று அறியப்படும். எனது உடல் என்று கூறும்பொழுது எனது என்பது உடம்பிற்கு வேறாதலால் உடம்பு உயிர் ஆகாது. அதற்கு வேறாகிய உயிர் என்ற ஒன்று உள்ளது என்பது பெறப்படும். பொறிகள் அவற்றிற்கு உரிய ஒன்றையே அறிதலால் ஐந்து புலன்களையும் அறிகின்ற பொருளாக உயிர் என்ற ஒன்று உள்ளது அறியப்படும். அவத்தைகளில் ஒடுங்கி சூக்கும தேகத்தில் கண்ட கனவை தூல தேகத்தில் (நனவில்) அறிகின்ற பொருள் ஒன்று இருத்தலால் சூக்கும தேகம் உயிர் ஆகாது. அதற்கு வேறாகிய உயிர் என்ற ஒன்று உள்ளது என்பது அறியப்படும். உறக்க நிலையில் பிராணவாயு இருந்தும் இன்ப துன்ப நுகர்வு உடலுக்கு இல்லை. ஆனால் நனவு நிலையில் பிராணவாயு இருக்கும் பொழுது உடலுக்கு இன்ப துன்ப நுகர்வு உண்டு என்பதால் பிராணவாயுவிற்கு வேறான உயிர் என்ற ஒன்று உள்ளது என்பது பெறப்படும். உயிர் சிற்றறிவு உடையது. பிரமமோ பேரறிவு உடையது. எனவே, பிரமத்திற்கு வேறான உயிர் என்ற ஒன்று உள்ளது என்பது பெறப்படும். மாயையின் காரியமான உடம்பு தத்துவங்களின் கூட்டமாக அதாவது சமுதாயமாக இருந்தாலும் ஒவ்வொரு தத்துவமும் தனித்தனிப் பெயர் பெறுகிறதே தவிர உயிர் என்ற ஒட்டுமொத்தப் பெயரைப் பெறுவதில்லை. எனவே, அவற்றிற்கெல்லாம் வேறாகிய உயிர் என்ற ஒன்று உள்ளது என்பது பெறப்படும். அத்தகைய உயிர் மாயையால் உண்டாகிய தனுவாகிய உடம்பில் உள்ளது என்பது பெறப்படுகிறது.
உயிரின் பொது இயல்பானது உயிர் தனித்து நிற்காது ஏதேனும் ஒரு பொருளைப் பற்றி நிற்கும்.  இறைவனைத் தவிர வேறு பொருளைப் பற்றி நிற்பதும், கருவி கரணங்களுடன் நின்று ஐந்தவத்தைப்படுவதும், அறிவித்தால் இன்றி அறியமாட்டாததாயும் இருக்கும். உயிர்கள் ஆணவ மல மறைப்புக்கு உட்பட்டு ஆணவம் (தூலமாக), கன்மம், மாயை ஆகிய மும் மலக் கட்டுடையவர்கள் சகலர் எனவும், ஆணவம் (தூலமாக), கன்மம் ஆகிய இரு மலக் கட்டுடையவர்கள்பிரளயாகலர் எனவும், ஆணவ மலக்கட்டு மட்டும் (சூக்குமமாக) உள்ளவர்கள் விஞ்ஞானகலர் எனவும் மூன்று வகைப்படும். இவ்வுண்மையை
திருவருட்பயன் பாடல் எண் 12 இல்
“திரிமலத்தார் ஒன்றதனில் சென்றார்கள் அன்றி
ஒருமலத்தா ராயு முளர்.”
ஆணவம், கன்மம், மாயை எனும் மும்மலத்தை உடையவர் என்றும், மும்மலங்களில் ஒன்றாகிய மாயை நீங்கி மற்ற இரு மலங்களை உடையவர் என்றும், இவர்கள் தவிர ஆணவமலம் மட்டும் உடையவர் என்றும் மூவகையான ஆன்மாக்கள் உளர்.
சகல நிலையில் உயிர் உடலைப் பெற்று போகப் பொருட்களை அனுபவிக்கின்றது. மனம், வாக்கு, காரியங்களினால் செய்யப்படும் வினைகளுக்கேற்ப பல பிறவிகளை எடுத்து பல உடல்களைப் பெறுகின்றது. இதனை
சிவஞானசித்தியார் சுபபக்கம் பாடல் எண் 229 இல்
“உருவினைக் கொண்டு போக போக்கியத்து உன்னல் செப்பல்
வரு செயல் மருவிச் சத்தம் ஆதியாம் விடையம் தன்னில்
புரிவதும் செய்து இங்கு எல்லா யோனியும் புக்கு உழன்று
திரிதரும் சகலமான அவத்தையில் சீவன் சென்றே.”
கேவல அவத்தையில் நின்ற உயிர் சகல அவத்தையை அடையும். அச்சகலத்தில் உடம்பைப் பெற்றுப் போகத்திற்கு உரிய பொருள்களை மனம், வாக்கு, காயங்களால் நினைத்தல், உரைத்தல், இயற்றல் ஆகிய வினைகளைப் பொருத்தி, சத்தாதி விஷயங்களை விரும்பி நுகர்ந்து, எண்பத்து நான்கு நூறாயிரம் யோனி (உடம்பு) களை எடுத்துச் சுழன்று திரியும்.
உயிர் சகல நிலை மாறி அனாதி கேவல நிலையில் (பிறப்பிற்கு உட்படாத நிலை) உடலற்று ஆணவ மலம் ஒன்றையன்றி வேறு ஒன்றையும் பற்றாமல் எதனையும் செய்யவோ, அறியவோ இயலாமல், ஆணவத்தை விட்டு நீங்கும் வழி அறியாமல் நிற்கும் உயிருக்கு நல்வினை, தீவினைகளில் சம புத்தி ஏற்பட்டு இறை அருளில் அழுந்தி ஞானகுருவின் அருளைப் பெற்று மும்மலம் நீங்கப் பெற்று ஆன்ம போதம் நீங்கி நிறைவான அறிவைப் பெற்று இறைவன் திருவடியை அடைவதை சுத்த நிலை எனக் கூறுவர்.
உயிர்கள் தம்மிடமுள்ள சஞ்சித வினையின் ஒரு பகுதியை (பிராரப்த வினை) அனுபவிப்பதற்காக இறைவனால் தோற்றுவிக்கப்பட்டு, அவ்வினை அனுபவித்து முடிந்த பின் அப்பிறப்பில்ச் செய்த வினையையும் (ஆகாமிய வினை) இறைவனால் சஞ்சித வினையுடன் சேர்த்து பின் இறைவனால் மறைக்கப்படுகின்றது. பசுவைப்பற்றிய மேலும் பல விளக்கங்களைப் பின் வரும் பாடல்கள் கூறுகின்றன.
திருவருட்பயன் பாடல் எண் 11 இல்
“பிறந்தநாள் மேலும் பிறக்குநாள் போலுந்
துறந்தோர் துறப்போர் தொகை.”
ஆன்மாக்களுள் முத்தி அடைந்தோர் தொகை ஆன்மாக்கள் வாழ்ந்த நாட்களுக்குச் சமமாகும். முத்தி அடையாமல் வாழ்ந்து கொண்டிருக்கும் ஆன்மாக்களின் தொகை இனிப் பிறந்து வாழும் நாட்களுக்குச் சமமாகும்.
திருவுந்தியார் பாடல் எண் 3 இல் கண்ணாலே காணப்பெற்ற திருவருளாகிய ஆசாரியரைக் கொண்டு தங்களுடைய வினைத் தொடர்பை அறுத்துக் கொண்டவர்கள் பிறப்பிற்கு உட்படாதவர்கள் எனக் கூறப்பட்டுள்ளது.
                                                                தொடரும் . . .
இந்தப் பக்கம் Hit Counter by Digits தடவை பார்வையிடப்பட்டுள்ளது.
0 Comments



Leave a Reply.

    Photo

    என்னைப்பற்றி

    நாகேந்திரம் கருணாநிதி
    மயிலிட்டி

    பதிவுகள்

    August 2017
    July 2017
    May 2017
    April 2017
    March 2017
    January 2017
    December 2016
    November 2016
    October 2016
    September 2016
    August 2016
    July 2016
    June 2016
    May 2016
    April 2016
    February 2016
    January 2016
    November 2015
    October 2015
    September 2015
    August 2015
    July 2015
    June 2015
    May 2015
    April 2015
    March 2015
    February 2015
    January 2015

    முழுப்பதிவுகள்

    All

      தொடர்புகளுக்கு:

    Submit
நன்றி மீண்டும் வருக!

நன்றி மீண்டும் வருக!

நன்றி மீண்டும் வருக!
Hit Counter by Digits
© 2011-22 myliddy.fr