மயிலிட்டி மக்கள் ஒன்றியம் பிரான்ஸ்
  • நல்வரவு 2023
    • நல்வரவு 2022
    • நல்வரவு 2021
    • நல்வரவு 2020
    • நல்வரவு 2019
    • நல்வரவு 2018
    • நல்வரவு 2017
    • நல்வரவு 2016
    • நல்வரவு 2015
    • நல்வரவு 2014
    • நல்வரவு! 2013, 12, 11
  • ஆலயங்கள்
    • மருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் >
      • ஆலய வரலாறு
      • பரிபாலன சபையினர்
    • காணிக்கை மாதா தேவாலயம்
    • ஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்
    • முனையன் வளவு முருகையன் ஆலயம்
  • கவிதைகள் / ஆக்கங்கள்
    • நாகேந்திரம் கருணாநிதி
    • அருண்குமார் குணபாலசிங்கம்
    • அஞ்சலி வசீகரன்
    • மகிபாலன் மதீஸ்
    • மயிலையூர் தனு
    • அகஸ்ரின் இரவீந்திரன்
    • Image Gautham
    • தயாநிதி தம்பையா
    • மயிலை துரை
    • ஐங்கரன் படைப்புக்கள்
    • "மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்"
    • சுதா நவம் படைப்புக்கள்
    • வசந்த் சகாதேவன் படைப்புக்கள்
    • ஜெயராணி படைப்புக்கள் >
      • தொலைந்த ஏக்கங்கள்
      • வாழ்வின் பயம்
      • நானும் என் தேவதையும்
    • Dr. ஜேர்மன் பக்கம் >
      • "உலக மங்கையர் தினம்!"
      • சிந்தனை வரிகள் Dr. Jerman
    • அன்ரன் றாஜ் படைப்புக்கள்
    • சாந்தன் படைப்புக்கள் >
      • "சாந்தன் படைப்புக்கள்"
      • "சிந்தனை வரிகள் நமக்கு"
      • "ரோஜா மலரே"
      • "பெண்"
      • "பணம்"
      • "ரிசானா"
      • "புத்தாண்டே வருக! 2013"
      • "சுனாமி"
      • "உறவுகள்"
      • "கடல் அன்னை"
      • "சிந்தனை உலகம்"
      • "மயிலையின் பெருமை"
      • "மனம் கவர்ந்தவளே"
      • "சொர்க்கபூமி"
      • "கருவில் சுமந்தவளே"
      • "போராட்டம்!"
      • "சிந்தனை வரிகள்"
      • "என் கவிதை"
      • "சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே!"
      • "பசுமை மலரும் நிச்சயம்"
      • "தென்றல்"
      • "காதலியே"
      • "அப்பா"
      • "ஏக்கம்"
      • "இறைவனின் சாபம்!"
      • "புத்தாண்டே வருக! 2012"
      • "அம்மா!"
      • "தவிப்பு"
      • "ஆசை"
      • "மயிலை மண்ணே"
      • "அழகு"
      • "நிம்மதி"
    • அருண்குமார் படைப்புக்கள் >
      • இருண்டுபோன நாளின் நினைவுகள்!
      • "சமர்ப்பணம்"
      • "மீண்டும் வாழ வழி செய்வோம்"
      • "நினைவுகள் 2" "மடம்"
      • "நினைவுகள் 1" "மண்சோறு"
      • "நான் பிறந்த மண்ணே !"
    • சண் கஜா (மயிலைக் கவி) படைப்புக்கள் >
      • சண் கஜா (மயிலைக் கவி) படைப்புக்கள்
      • கிளாலி பயணம்
      • முறிகண்டி பிள்ளையார்
      • "காலங்கடந்த ஞானமிது"
      • "கோரத் தாண்டவம்"
      • "காலப் பெருவெளியில்"
    • அல்விற் வின்சன் படைப்புக்கள் >
      • "சிவராத்திரியும் கத்தோலிக்கமும்"
      • "முதல்பிரிவு"
      • "பாட்டன் வழி நிலம் வேண்டும்"
      • "வசந்தம்"
      • "உலக பெண்கள் தினம்!"
      • "தனித்திருப்பாய்!"
      • "என் தாய்"
      • வாழ்த்து Myliddy.fr
      • "ஊறணி" மண்ணின் நினைவு
    • ஜீவா உதயன் படைப்புக்கள் >
      • "அம்மா"
      • "தேடல்"
      • "அழகிய நாட்கள்"
      • "கவிஞர்களே"
      • "தாயே என்றும் எனக்கு நீயே!"
    • ஜீவா உதயன் படைப்புக்கள்
    • கௌதமன் படைப்புக்கள்
    • சங்கீதா தேன்கிளி படைப்புக்கள் >
      • சங்கீதா தேன்கிளி
      • "புலம்பெயர்ந்தோர் கவனத்திற்கு.."
      • "எங்கள் மயிலை மண்"
      • "பனங்கள்ளு"
      • "மின்னல்களால் இழைக்கப்பட்ட பூமி"
    • குமரேஸ்வரன் படைப்புக்கள் >
      • "என்ன வாழ்க்கை இது"
      • "தாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்"
      • "பனங்கள்ளு"
      • "தேன் கூடு"
      • "வீச்சுவலை"
    • கவின்மொழி படைப்புக்கள் >
      • "கட்டுமரம்"
      • யுகமாய் போன கணங்கள்!
    • கௌசிகனின் படைப்புக்கள்! >
      • "பூமிக்கு வந்த புது மலரே"
      • "மயிலை மண்ணில்"
      • "இயற்கைக் காவலன்"
      • "வீச்சுவலை"
      • "தேன்கூடே.... தேன்கூடே...."
      • "என் இனிய கருமரமே..."
      • "எங்கள் மயிலை மண்"
    • படம் என்ன சொல்கின்றது... >
      • "பனங்கள்ளு"
      • "வீச்சுவலை"
      • "தேன் கூடு"
      • "பனைமரம்"
      • "கட்டுமரம்"
  • சிறப்புத் தினங்கள்
    • Womens day 2015
    • மகளிர் தினம் 2014 >
      • மகளிர் தினம் 2013 >
        • "பெண்"
        • "உலக மங்கையர் தினம்!"
        • "உலக பெண்கள் தினம்!"
      • மகளிர் தினம் 2012
    • NELSON MANDELA
    • தந்தையர் தினம்
    • அன்னையர் தினம் >
      • அன்னையர் தினம்
    • மே தினம்
    • சுனாமி 2013 >
      • சுனாமி 2012
  • வாழ்த்துக்கள்
    • திருமணம் >
      • திருமண நாள் வாழ்த்து
      • வசந்தன் றஞ்சனா
    • பூப்புனித நீராட்டுவிழா
    • பிறந்தநாள் >
      • பிறந்தநாள்
      • "செல்லப்பா சண்முகநாதன்"
      • தேவி குணபாலசிங்கம்
      • திரு. வரதராஜா
      • சாரா சதானந்தம்
    • பொங்கல்
    • பொங்கல்
    • HAPPY NEW YEAR >
      • New year
    • Christmas
  • மயிலிட்டி தளங்கள்:
    • நோர்வே >
      • நோர்வே மயிலிட்டி மக்கள் ஒன்றியம்
    • பிரித்தானியா >
      • MYLIDDY MAKKAL ONRIYAM UK
      • MYLIDDY SPORTS CLUB UK
    • அமெரிக்கா
    • கனடா >
      • கனடா மயிலிட்டி மக்கள் ஒன்றியம்
    • ourmyliddy.com
  • புகைப்படங்கள்
    • அருண்குமார்
  • பாடசாலைகள்
    • மயிலிட்டி இலவச முன்பள்ளி
    • றோமன் கத்தோலிக்க வித்தியாலயம் >
      • பாடசாலை நிகழ்வுகள்
      • "ஜெயராணி நிர்மலதாசன்"
      • பிரகாசிக்கட்டும் வாழ்வு
      • ஒளி விழா 2012
  • ஒன்றுகூடல்
    • ஒன்றுகூடல் 2014
    • ஒன்றுகூடல் 2012
    • ஒன்றுகூடல் 2011
  • எம்மைப்பற்றி:
    • தொடர்புகளுக்கு:
  • மயிலை மண்ணில்
  • ஒளியும் ஒலியும்
    • ஒளியும் ஒலியும் >
      • "அண்ணை றைற்"
  • மரண அறிவித்தல் 2017
    • மரண அறிவித்தல் 2016
    • மரண அறிவித்தல் 2015
    • மரண அறிவித்தல் 2014
    • 2013 டிசம்பர் வரை
    • 2012 டிசம்பர் வரை
    • 2011 டிசம்பர் வரை
  • நினைவஞ்சலி
    • நினைவஞ்சலி
    • உருக்குமணி தர்மலிங்கம்
  • ஆறாவது அகவை
    • ஐந்தாவது அகவை
    • நான்காவது அகவை
    • மூன்றாவது அகவை
    • இரண்டாவது அகவை
    • முதலாவது அகவை >
      • DR. JERMAN MYLIDDY
      • KOWSIKAN KARUNANITHI
      • SATHANANTHAN SADACHARALINGAM
      • SANGEETHA THENKILI
      • SELVIE MANO
      • JUSTIN THEVATHASAN
      • KUMARESWARAN TAMILAN
      • ANTON GNAPRAGASHAM
      • SHAN GAJA
      • ALVIT VINCENT
      • NAVARATNARANI CHIVALINGAM
  • தந்தை தேவராஜன்
  • சாதனை
  • .
Nagenthiram Karunanithy

பஞ்சாங்கம் (சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி)

15/5/2016

0 Comments

 
Picture
இலண்டனில் கடந்த காலங்களில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் தவறுகளை அடுத்தவருடமும் தொடராமல் இருப்பதற்காக இக்கட்டுரையை சமர்ப்பிக்கின்றேன்.

எமது முன்னோர்களால் எம்மிடம் தரப்பட்ட  எமது சைவசமயக் கொள்கைகளையும், வழிபாட்டு முறைகளையும் வரும்காலத்தில் எவ்வித ஐயப்பாடுமின்றி இன்றைய இளம் சந்ததியினர் கொண்டு செல்வதற்கான வழிமுறைகளை நாம் ஏற்படுத்திக் கொடுப்பது எமது முக்கி கடமையாகும். இவ்விடையத்தில் அண்மைக்காலத்தில் எமது சமய விழாக்கள், கொண்டாட்டங்கள் இரு வேறு வேறு  நாட்களில் நடப்பது எமது கடமையை நாம் சரிவரச் செய்கிறோமா என்ற கேள்வியை ஏற்படுத்தியுள்ளது.​

Picture
1.எமது பஞ்சாங்கக் கணிப்புகள் யாவும் சூரியன் உதயமாகும், அஸ்த்தமனமாகும் நேரங்களை அடிப்படையாகக் கொண்டுதான் கணிக்கப்படுகின்றன.

2.நாம் காலம் காலமாகப் பாவிப்பது “வாக்கிய பஞ்சாங்கம்” ஆகும்  இது பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பு ரிசிகளால் அருளப்பட்ட சுலோகங்களின் அடிப்படையில் எவ்வித மாற்றமும் செய்யாமல் அவர்களின் பழய கணித முறைப்படி கணிக்கப்படுவதாகும்.

3.சூரிய உதயம், அஸ்த்தமனம் இடத்திற்கிடம் மாறுபடுவதாலும், தற்கால விஞ்ஞான வளர்ச்சியின் காரணமாக (சந்திரனின் வட்டப்பாதையில் ஏற்படும் மாற்றங்களை கணக்கில் எடுத்து) பல வருடங்களுக்கு முன்பு “திருக்கணித பஞ்சாங்கம்” உருவாகியது.

4.இலங்கையிலும், தமிழ்நாட்டிலும் பலகாலாக இரண்டு பஞ்சாங்கங்களும் பாவனையில் இருக்கின்றன. இரண்டு கணிப்புகளுக்கும் இடையில் சில வேறுபாடுகள் உள்ளன. இவ்வேறுபாடு பௌர்ணமி, அமாவாசையில் குறைவாகவும், அஸ்டமி, நவமியில் கூடுதலாகவும் (அதிகபட்சம் 6 மணி 48 நிமிடம்) இருக்கின்றன. ஒரே நாட்டு நேரத்திற்குக் கணிக்கப்பட்டாலும் இவ் வேறுபாடுகள் நிச்சயமாக இருக்கும்.

5.தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தனித்தனிப் பஞ்சாங்கங்கள் உள்ளன.

6.இந்தியாவில் திரு ஜவகர்லால் நேரு இந்தியாவின் பிரதம மந்திரியாக இருந்தகாலத்தில் அவரால் இப்பிரச்சனைக்குத் தீர்வு காண்பதற்காக அமைக்கப்பட்ட பல அறிஞர்கள் கொண்ட குழு “திருக்கணிதம்” தான் தற்காலத்திற்குப் பொருத்தமானது என முடிவு செய்தது.

7.இலண்டனில் சூரியன் உதயமாகும், அஸ்த்தமனமாகும் நேரங்கள் இலங்கையிலும், தமிழ்நாட்டிலும் போன்றதல்ல. அங்கு சூரிய உதயம் சராசரி காலை 6.00 மணி. இலண்டனில் காலை 4.45 (கோடைகாலத்தில்) இலிருந்து, 8.00 (குளிர்காலத்தில்) மணிவரைக்கும் நடைபெறும். சூரிய அஸ்தமனமும் இவ்வாறுதான். அதுமட்டுமல்ல சராசரி 4.5 அல்லது 5.5 மணி நேர வித்தியாசமும் உள்ளது. இதனால் இலண்டனில் சூரிய உதய, அஸ்த்தமன நேரங்களை எடுத்துக் கணிக்கப்பட்ட பஞ்சாங்கம், கலண்டர்தான் இலண்டனில் பாவிப்பதற்கு ஏற்றதாகும். இலங்கை, இந்திய  சூரிய உதய, அஸ்த்தமன நேரங்களுடன் 4.5 , 5.5 மணி நேரங்களை கூட்டி அல்லது கழித்து கணிக்கப்பட்ட இலங்கை, இந்தியப் பஞ்சாங்கம், கலண்டர்களை இலண்டனில் பாவிப்பது பொருத்தமற்றதாகும். இதை “தமிழ்நாட்டில் மழைபெய்தால் லண்டனில் குடைபிடிக்கலாமா?” என கேலியாகக் கூறுவார்கள்.

8.தைப்பொங்கலை எடுத்துக் கொண்டால் சூரியன் மகரராசிக்குள் (மகரசங்கிராந்தி) பிரவேசிக்கும் நாள் (நேரம்) தைப்பொங்கலாகும். 2015 ஆண்டு 14 – 01 – 2015 அன்று இலண்டன் நேரத்திற்குப் பி.ப. 01.58 மணிக்கு இந்நிகழ்வு நடைபெற்றது. இது இலங்கை, இந்திய நேரப்படி இரவு 7.28 ஆகும். சூரியஅஸ்த்தமனத்திற்குப் பின்பாகையால்  அங்கு மறுநாள் 15 – 01 – 2015 இல் தைப்பொங்கல் கொண்டாடப்பட்டது. உதாரணமாக லண்டனில் காலை 11.00 க்கு இந்நிகழ்வு நடைபெற்றிருந்தால் இலங்கை, இந்தியாவில் மாலை 5.30 மணியாகையால் அங்கும் 14 – 01 – 2015 இல் கொண்டாடப்பட்டிருக்கும். சூரிய அஸ்த்தமனத்திற்கு பின்பு நடைபெறும் நிகழ்வுகளை மறு நாள் எடுப்பது மரபாகும். 14 ஆம் திகதி இலண்டன் நேரத்திற்குப் பி.ப. 01.58 மணிக்கு சூரியன் மகரராசிக்குள்  பிரவேசிக்கும் போது 15 ஆம் திகதி இலண்டனில் பொங்கல் கொண்டாடுவது தவறாகும்,
​
9. இலண்டனில் ஈழத்தமிழர்களால் நடாத்தப்படும் 1998 இல் ஆரம்பித்த பிரித்தானிய சைவத் திருக்கோயில் ஒன்றியம் அதன் முதலாவது கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்ட முக்கியமான தீர்மானங்களில் ஒன்று “இலண்டனில் இலண்டன் நேரத்திற்குக் கணிக்கப்பட்ட ஒரே கலண்டரை எல்லோரும் பாவிப்பது” என்பதாகும். 2015 ஆம் ஆண்டு  பிரித்தானியச் சைவத் திருக்கோயில் ஒன்றியத்தில் அங்கம்வகிக்கும், அங்கம்வகிக்காத 30 இற்கு மேற்பட்ட ஆலயங்கள் இலண்டன் நேரத்திற்குத் திருக்கணித முறைப்படி கணிக்கப்பட்ட கலண்டரைப் பாவித்தபடியால் 14 – 01 – 2015 இல் தைப்பொங்கலைக் கொண்டாடினார்கள். ஆனால் ஒன்றியத்தில் அங்கம்வகிக்கும்  ஈலிங் கனகதுர்க்கை அம்மன் கோயில் மட்டும் வாக்கிய முறைப்படி  கணிக்கப்பட்ட கலண்டரைப் பாவித்ததால் 15 – 01 – 2015 இலும், இந்திய தமிழ் மக்களால் நடாத்தப்படும் ஈஸ்ற் காமில் உள்ள இலண்டன் ஸ்ரீ முருகன் ஆலயமும், இலண்டன் ஸ்ரீ மஹலக்சுமி ஆலயமும் தமிழ் நாட்டில் கணிக்கப்பட்ட ஒரு குறிப்பிட்ட கலண்டரைப் பாவிப்பதால் 15 – 01 – 2015 இலும் கொண்டாடினார்கள். சில வர்த்தகர்களும் தைப்பொங்கல் 15 - 01 - 2015 என அச்சிட்ட மாதக்கலண்டர்களை இலவசமாக வாடிக்கையாளர்களுக்கு வினியோகித்ததாலும், இந்தியத் தொலைக்காட்சிகள் இந்தியாவில் 15 – 01 – 2015 இல் நடக்க இருக்கும் பொங்கல் நிகழ்ச்சிகள் பற்றி முன்கூட்டியே லண்டனில் தொடர்ந்து அறிவித்துக் கொண்டிருந்ததாலும் மக்களிடையே தடுமாற்றம் ஏற்பட்டது. பிரதோஷம் உட்பட பல சமய நிகழ்வுகள் இவ்வருடமும் இரு வேறு வேறு  நாட்களில் நடந்துகொண்டிருக்கின்றன.

10. அந்தந்த நாட்டு நேரப்படி கணித்த கலண்டரைப் பாவிக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்காது என நினைக்கின்றேன். எமது முன்னோர் சமயக் கோட்பாடுகளுக்கூடாக வாழ்க்கை நெறியை மட்டுமல்ல நாளாந்த வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகளை எப்படித் தீர்ப்பது என்ற வழிமுறைகளை  வேதங்களில் கூறப்பட்டுள்ள ஆத்ம வாக்கியங்கள் போன்று கூறிவைத்துள்ளார்கள். அவ்வாறு கூறப்பட்ட “மருத்துவம் பிழைத்தால் வாகடத்தைப் பார், சாத்திரம் பிழைத்தால் கிரகணத்தைப் பார்” என்னும் வாக்கியம், வாக்கிய பஞ்சாங்கத்தைப் பாவிப்பதா  அல்லது திருக்கணித பஞ்சாங்கத்தைப் பாவிப்பதா  என்ற கேள்விக்கு விடைகாணும் வழியை  கூறியுள்ளது. 2015ஆம் ஆண்டு  லண்டனில் ஏற்பட்ட சூரியகிரகணம்  மேற்படி கேள்விகளுக்கு விடை தந்துள்ளது.
11. 2015 இல் இலண்டனில் காலை 9.30 இற்கு முழுமையான சூரியகிரகணம் நடைபெற்றதை நாம் காணக்கூடியதாக இருந்தது.

12. இலண்டனில் வினியோகிக்கப்பட்ட 2015 ஆம் ஆண்டிற்கான இலண்டன் நேரத்திற்குக் கணிக்கப்பட்டதாக எழுதியுள்ள மெய்கண்டான் கலண்டரிலோ, இலண்டன் நேரத்திற்குக் கணிக்கப்பட்டதாக எழுதியுள்ள லீலாபஞ்சாங்கக் கலண்டரிலோ, இலண்டன் நேரத்திற்குக் கணிக்கப்பட்டதாக எழுதியுள்ள தமிழ்த்தாய் நாட்காட்டியிலோ, வாக்கிய பஞ்சாங்க முறைப்படி இலண்டன் நேரத்திற்குக் கணித்த ஈலிங் கனகதுர்க்கை அம்மன் ஆலயத்தால் வெளியிடப்பட்ட கலண்டரிலோ, வியாபார ஸ்தாபனங்களால் இலவசமாகக் கொடுக்கப்பட்ட மாதக் கலண்டரிலோ இச்சூரியகிரகணம் நடக்கப் போவதாகக் கூறப்படவில்லை.
13. 2015 ஆம் ஆண்டிற்கான திருக்கணித பஞ்சாங்க முறைப்படி லண்டன் நேரத்திற்குக் கணித்த ஸ்ரீ சிவசக்தி திருக்கணித கலண்டரில் “ - - -  மதியம் மு.ப. 09.31 - - - “ இல் சூரியகிரகணம் நடைபெற இருப்பதாகப் போடப்பட்டிருந்தது.

14.லண்டனில் சூரியகிரகணம் தோன்றியபோது இலங்கை, இந்தியாவில் கிரகணம் தோன்றாத படியால்  இலங்கை, இந்தியாவில் கணித்த கலண்டரை லண்டனில்  பாவிக்கமுடியாது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இந்திய கலண்டரைப் பின்பற்றும் ஈஸ்ற்காம் முருகன் ஆலயமும், லஷ்சுமி நாராயணன் (மகாலஷ்சுமி கோவில்) ஆலயமும் கிரகணத்தின் போது பூட்டப்பட்டிருந்தன. ஆகவே இவ்விடையத்தில் மட்டும் இந்தியாவில் கணித்த கலண்டரை இவ் ஆலயங்கள் பின்பற்றவில்லை எனத்தெரிகிறது.

15. இவற்றிலிருந்து பார்க்கும் போது திருக்கணித பஞ்சாங்க முறைப்படி லண்டன் நேரத்திற்குக் கணித்த ஸ்ரீ சிவசக்தி திருக்கணித கலண்டர் தான் லண்டனுக்குப் பொருத்தமானது என்னும் முடிவுக்கு வரவேண்டியுள்ளது..

16.அந்தந்த நாட்டிற்கான அடுத்த வருடத்திற்கான ( 2017 ) சூரிய உதய அஸ்தமன நேரங்களை sunrisesunsetmap.comஎன்னும் இணையத்தளத்தில் இருந்து பெற்றுக் கொள்ளலாம். இவற்றை வைத்து இலண்டனில் மட்டுமல்லாமல் மற்ற நாடுகளில் உள்ளவர்களும் தங்கள் தங்கள்  நாட்டிற்கான பஞ்சாங்கம், கலண்டரை கணித்து மக்களிடம் கொடுக்கும் போது எதுவித குழப்பமும் இல்லாமல் அந்தந்த நாட்டில் உள்ள எல்லோரும் பண்டிகைகள், விழாக்களை ஒரே நாளில் கொண்டாடலாம். முக்கியமாக குழந்தை பிறந்த நேரத்தை வைத்து கணிக்கப்படும் குழந்தையின் ஜாதகத்தையும் சரியாகக் கணித்து எழுதலாம். இதற்காக அந்தந்த நாடுகளில் உள்ள ஆலயங்களின் நிர்வாகிகள், குருமார்கள், கலண்டர்களை இறக்குமதி செய்பவர்கள், விற்கும் வர்த்தகர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து வரும் காலச் சந்ததியினர்  நம்பிக்கையுடன் எமது சைவசமயக் கொள்கைகளையும், வழிபாட்டு முறைகளையும் எவ்வித ஐயப்பாடுமின்றிக்  கொண்டு செல்வதற்கான வழிமுறைகளை வகுக்கவேண்டியது  சம்பந்தப்பட்ட எல்லோரினதும் கடமையாகும்.
இந்தப் பக்கம் Hit Counter by Digits தடவை பார்வையிடப்பட்டுள்ளது.
0 Comments



Leave a Reply.

    Photo

    என்னைப்பற்றி

    நாகேந்திரம் கருணாநிதி
    மயிலிட்டி

    பதிவுகள்

    August 2017
    July 2017
    May 2017
    April 2017
    March 2017
    January 2017
    December 2016
    November 2016
    October 2016
    September 2016
    August 2016
    July 2016
    June 2016
    May 2016
    April 2016
    February 2016
    January 2016
    November 2015
    October 2015
    September 2015
    August 2015
    July 2015
    June 2015
    May 2015
    April 2015
    March 2015
    February 2015
    January 2015

    முழுப்பதிவுகள்

    All

      தொடர்புகளுக்கு:

    Submit
நன்றி மீண்டும் வருக!

நன்றி மீண்டும் வருக!

நன்றி மீண்டும் வருக!
Hit Counter by Digits
© 2011-22 myliddy.fr