மயிலிட்டி மக்கள் ஒன்றியம் பிரான்ஸ்
  • நல்வரவு 2023
    • நல்வரவு 2022
    • நல்வரவு 2021
    • நல்வரவு 2020
    • நல்வரவு 2019
    • நல்வரவு 2018
    • நல்வரவு 2017
    • நல்வரவு 2016
    • நல்வரவு 2015
    • நல்வரவு 2014
    • நல்வரவு! 2013, 12, 11
  • ஆலயங்கள்
    • மருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் >
      • ஆலய வரலாறு
      • பரிபாலன சபையினர்
    • காணிக்கை மாதா தேவாலயம்
    • ஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்
    • முனையன் வளவு முருகையன் ஆலயம்
  • கவிதைகள் / ஆக்கங்கள்
    • நாகேந்திரம் கருணாநிதி
    • அருண்குமார் குணபாலசிங்கம்
    • அஞ்சலி வசீகரன்
    • மகிபாலன் மதீஸ்
    • மயிலையூர் தனு
    • அகஸ்ரின் இரவீந்திரன்
    • Image Gautham
    • தயாநிதி தம்பையா
    • மயிலை துரை
    • ஐங்கரன் படைப்புக்கள்
    • "மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்"
    • சுதா நவம் படைப்புக்கள்
    • வசந்த் சகாதேவன் படைப்புக்கள்
    • ஜெயராணி படைப்புக்கள் >
      • தொலைந்த ஏக்கங்கள்
      • வாழ்வின் பயம்
      • நானும் என் தேவதையும்
    • Dr. ஜேர்மன் பக்கம் >
      • "உலக மங்கையர் தினம்!"
      • சிந்தனை வரிகள் Dr. Jerman
    • அன்ரன் றாஜ் படைப்புக்கள்
    • சாந்தன் படைப்புக்கள் >
      • "சாந்தன் படைப்புக்கள்"
      • "சிந்தனை வரிகள் நமக்கு"
      • "ரோஜா மலரே"
      • "பெண்"
      • "பணம்"
      • "ரிசானா"
      • "புத்தாண்டே வருக! 2013"
      • "சுனாமி"
      • "உறவுகள்"
      • "கடல் அன்னை"
      • "சிந்தனை உலகம்"
      • "மயிலையின் பெருமை"
      • "மனம் கவர்ந்தவளே"
      • "சொர்க்கபூமி"
      • "கருவில் சுமந்தவளே"
      • "போராட்டம்!"
      • "சிந்தனை வரிகள்"
      • "என் கவிதை"
      • "சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே!"
      • "பசுமை மலரும் நிச்சயம்"
      • "தென்றல்"
      • "காதலியே"
      • "அப்பா"
      • "ஏக்கம்"
      • "இறைவனின் சாபம்!"
      • "புத்தாண்டே வருக! 2012"
      • "அம்மா!"
      • "தவிப்பு"
      • "ஆசை"
      • "மயிலை மண்ணே"
      • "அழகு"
      • "நிம்மதி"
    • அருண்குமார் படைப்புக்கள் >
      • இருண்டுபோன நாளின் நினைவுகள்!
      • "சமர்ப்பணம்"
      • "மீண்டும் வாழ வழி செய்வோம்"
      • "நினைவுகள் 2" "மடம்"
      • "நினைவுகள் 1" "மண்சோறு"
      • "நான் பிறந்த மண்ணே !"
    • சண் கஜா (மயிலைக் கவி) படைப்புக்கள் >
      • சண் கஜா (மயிலைக் கவி) படைப்புக்கள்
      • கிளாலி பயணம்
      • முறிகண்டி பிள்ளையார்
      • "காலங்கடந்த ஞானமிது"
      • "கோரத் தாண்டவம்"
      • "காலப் பெருவெளியில்"
    • அல்விற் வின்சன் படைப்புக்கள் >
      • "சிவராத்திரியும் கத்தோலிக்கமும்"
      • "முதல்பிரிவு"
      • "பாட்டன் வழி நிலம் வேண்டும்"
      • "வசந்தம்"
      • "உலக பெண்கள் தினம்!"
      • "தனித்திருப்பாய்!"
      • "என் தாய்"
      • வாழ்த்து Myliddy.fr
      • "ஊறணி" மண்ணின் நினைவு
    • ஜீவா உதயன் படைப்புக்கள் >
      • "அம்மா"
      • "தேடல்"
      • "அழகிய நாட்கள்"
      • "கவிஞர்களே"
      • "தாயே என்றும் எனக்கு நீயே!"
    • ஜீவா உதயன் படைப்புக்கள்
    • கௌதமன் படைப்புக்கள்
    • சங்கீதா தேன்கிளி படைப்புக்கள் >
      • சங்கீதா தேன்கிளி
      • "புலம்பெயர்ந்தோர் கவனத்திற்கு.."
      • "எங்கள் மயிலை மண்"
      • "பனங்கள்ளு"
      • "மின்னல்களால் இழைக்கப்பட்ட பூமி"
    • குமரேஸ்வரன் படைப்புக்கள் >
      • "என்ன வாழ்க்கை இது"
      • "தாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்"
      • "பனங்கள்ளு"
      • "தேன் கூடு"
      • "வீச்சுவலை"
    • கவின்மொழி படைப்புக்கள் >
      • "கட்டுமரம்"
      • யுகமாய் போன கணங்கள்!
    • கௌசிகனின் படைப்புக்கள்! >
      • "பூமிக்கு வந்த புது மலரே"
      • "மயிலை மண்ணில்"
      • "இயற்கைக் காவலன்"
      • "வீச்சுவலை"
      • "தேன்கூடே.... தேன்கூடே...."
      • "என் இனிய கருமரமே..."
      • "எங்கள் மயிலை மண்"
    • படம் என்ன சொல்கின்றது... >
      • "பனங்கள்ளு"
      • "வீச்சுவலை"
      • "தேன் கூடு"
      • "பனைமரம்"
      • "கட்டுமரம்"
  • சிறப்புத் தினங்கள்
    • Womens day 2015
    • மகளிர் தினம் 2014 >
      • மகளிர் தினம் 2013 >
        • "பெண்"
        • "உலக மங்கையர் தினம்!"
        • "உலக பெண்கள் தினம்!"
      • மகளிர் தினம் 2012
    • NELSON MANDELA
    • தந்தையர் தினம்
    • அன்னையர் தினம் >
      • அன்னையர் தினம்
    • மே தினம்
    • சுனாமி 2013 >
      • சுனாமி 2012
  • வாழ்த்துக்கள்
    • திருமணம் >
      • திருமண நாள் வாழ்த்து
      • வசந்தன் றஞ்சனா
    • பூப்புனித நீராட்டுவிழா
    • பிறந்தநாள் >
      • பிறந்தநாள்
      • "செல்லப்பா சண்முகநாதன்"
      • தேவி குணபாலசிங்கம்
      • திரு. வரதராஜா
      • சாரா சதானந்தம்
    • பொங்கல்
    • பொங்கல்
    • HAPPY NEW YEAR >
      • New year
    • Christmas
  • மயிலிட்டி தளங்கள்:
    • நோர்வே >
      • நோர்வே மயிலிட்டி மக்கள் ஒன்றியம்
    • பிரித்தானியா >
      • MYLIDDY MAKKAL ONRIYAM UK
      • MYLIDDY SPORTS CLUB UK
    • அமெரிக்கா
    • கனடா >
      • கனடா மயிலிட்டி மக்கள் ஒன்றியம்
    • ourmyliddy.com
  • புகைப்படங்கள்
    • அருண்குமார்
  • பாடசாலைகள்
    • மயிலிட்டி இலவச முன்பள்ளி
    • றோமன் கத்தோலிக்க வித்தியாலயம் >
      • பாடசாலை நிகழ்வுகள்
      • "ஜெயராணி நிர்மலதாசன்"
      • பிரகாசிக்கட்டும் வாழ்வு
      • ஒளி விழா 2012
  • ஒன்றுகூடல்
    • ஒன்றுகூடல் 2014
    • ஒன்றுகூடல் 2012
    • ஒன்றுகூடல் 2011
  • எம்மைப்பற்றி:
    • தொடர்புகளுக்கு:
  • மயிலை மண்ணில்
  • ஒளியும் ஒலியும்
    • ஒளியும் ஒலியும் >
      • "அண்ணை றைற்"
  • மரண அறிவித்தல் 2017
    • மரண அறிவித்தல் 2016
    • மரண அறிவித்தல் 2015
    • மரண அறிவித்தல் 2014
    • 2013 டிசம்பர் வரை
    • 2012 டிசம்பர் வரை
    • 2011 டிசம்பர் வரை
  • நினைவஞ்சலி
    • நினைவஞ்சலி
    • உருக்குமணி தர்மலிங்கம்
  • ஆறாவது அகவை
    • ஐந்தாவது அகவை
    • நான்காவது அகவை
    • மூன்றாவது அகவை
    • இரண்டாவது அகவை
    • முதலாவது அகவை >
      • DR. JERMAN MYLIDDY
      • KOWSIKAN KARUNANITHI
      • SATHANANTHAN SADACHARALINGAM
      • SANGEETHA THENKILI
      • SELVIE MANO
      • JUSTIN THEVATHASAN
      • KUMARESWARAN TAMILAN
      • ANTON GNAPRAGASHAM
      • SHAN GAJA
      • ALVIT VINCENT
      • NAVARATNARANI CHIVALINGAM
  • தந்தை தேவராஜன்
  • சாதனை
  • .
Nagenthiram Karunanithy

சைவ சித்தாந்தம் - பகுதி 32 "நாகேந்திரம் கருணாநிதி"

25/11/2016

0 Comments

 
Picture
சைவ சித்தாந்தம் – ( பகுதி – 32 )
(நாகேந்திரம் கருணாநிதி)
சைவ சித்தாந்த சாத்திரங்கள்  -    7. சிவப்பிரகாசம்
சிவப்பிரகாசம். கி.பி.14 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தில்லை வாழ் அந்தணர்களின் பரம்பரையில் (தில்லை நடராஜருக்குப் பூசை செய்பவர்) வந்தவரும், புறச்சந்தான குரவரில் (4 நான்காவது) ஒருவரும், சித்தாந்த சாத்திரங்கள் 14 இல் சித்தாந்த அட்டகம் என்று போற்றப்படும்  8 நூல்களை அருளியவரும், புறச்சந்தான குரவரில் ஒருவரான (3 ஆவது) மறை ஞான சம்பந்தரின் மாணவருமான கொற்றவன் குடி உமாபதி தேவ நாயனார் (உமாபதி சிவாச்சாரியார்) அவர்களால் அருளப்பட்ட சித்தாந்த அட்டகங்களில் ஒன்றாகும். தில்லை மூவாயிரவருள் இவர் ஒருவரே சித்தாந்த ஞானத்தை உலகோர்க்கு விளக்கியவர் ஆவார். இந்நூல் சிவஞானபோதத்தின் சார்பு நூலாகவும்,  சிவஞானசித்தியாரின் வழி நூலாகவும் காணப்படுகின்றது. இந்நூல்  முதல் 50 உம் பொது அதிகாரமாகவும், பின் 50 உம் உண்மையதிகாரமாகவும் கொண்ட 100 விருத்தப்பாடல்களைக் கொண்டு முப்பொருளைப் பற்றிச் சுருக்கமாக விளக்குகிறது. பொது அதிகாரத்தில் பாயிரப் பாடல்கள், பதி இலக்கணம், பசு இலக்கணம், பாச இலக்கணம், அவத்தை இலக்கணம் பற்றியும், உண்மை அதிகாரத்தில் ஆன்ம இலக்கணம், ஐந்து அவத்தை இலக்கணம், ஆன்மா உணரும் தன்மை, ஞான வாய்மை, ஞானத்தால் வரும் பயன், புனிதன் நாமம், அணைந்தோர் தன்மை பற்றியும் கூறப்பட்டுள்ளது. இந்நூலில் வரும் சில பாடல்களைப் பார்ப்போம்.

Picture
பாடல் எண் 7.
“புறச்சமயத் தவர்க்குஇருளாய் அகச்சமயத்து ஒளியாய்ப்
     புகலளவைக்கு அளவாகிப் பொற்பணிபோல் அபேதப்
பிறப்பிலதாய் இருள்வெளிபோல் பேதமுஞ்சொற் பொருள்போல்
     பேதாபே தமும்இன்றிப் பெருநூல் சொன்ன
அறத்திறனால் விளைவதாய் உடல்உயிர்க்கண் அருக்கன்
     அறவொளிபோல் பிறிவருமத் துவித மாகுஞ்
சிறப்பினதாய் வேதாந்தத் தெளிவாம் சைவ
     சித்தாந்த் திறனிங்கு தெரிக்கல் உற்றாம்.”
இப்பாடலின் பொருள், புறச்சமயத்தாரால் அறியப்படாததாய், அகச்சமயத்தாரால் அறியப்படுவதாய், கூறப்பட்ட காட்சி முதலிய பிரமாணங்களால் (அளவைகளால்) அறியப்படுவதாய், தங்கம் பல ஆபரணங்களாய் இருக்கும் தன்மைபோலப் பிரம்மாகிய இறைவனும் பல ஆன்மாக்களாய்த் தோன்றி நிற்கும் என்னும் அபேத வாதிகளின் கொள்கை இல்லாததாய், இருளும் ஒளியும் போல முதல்வனும் ஆன்மாக்களும் வேறாய் இருக்கும் என்னும் பேதவாதிகளின் கொள்கை இல்லாததாய், சொல்லும் பொருளும் போலப் பேதமும் அபேதமுமாய் இருக்கும் என்னும் பேதா பேதவாதிகளின் கொள்கையும் இல்லாததாய், சிறப்பு நூலாகிய ஆகமங்கள் சொன்ன சரியை, கிரியை, யோகங்களைக் கடைப்பிடிப்பதால் – உடலும் உயிரும் போல கலப்பால் ஒன்றாகியும், ஆன்ம போதமும் கண் ஒளியும் போல உயிர்க்கு உயிராதல் தன்மையால் உடனாகியும், நிற்கின்றதைப் போன்று பிரித்தற்கு இயலாத அத்துவிதமாகும் சிறப்பினை உடையதாயும் உள்ள வேதாந்தத்தைத் தெளித்து உரைப்பது சைவ சித்தாந்தமாகும். அதன் உண்மையை இந்நூலில் விளங்கச் சொல்லுவோம்.
பாடல் எண் 13.
பலகலையா கமவேதம் யாவையினும் கருத்துப்
     பதிபசுபா சம்தெரித்தல் பதிபரமே யதுதான்
நிலவும்அரு உருவின்றி குணம்குறிகள் இன்றி
     நின்மலமாய் ஏகமாய் நித்தம் ஆகி
அலகிலுயிர்க்கு உணர்வாகி அசலம் ஆகி
     அகண்டிதமாய் ஆனந்த உருவாய் அன்றிச்
செலவரிதாய்ச் செல்கதியாய்ச் சிறிதாகிப் பெரிதாய்த்
     திகழ்வதுதற் சிவம்என்பர் தெளிந்து ளோரே.”
இறைவனின் சொரூப இலக்கணத்தைக் கூறும் இப்பாடலின் பொருள், வேதம் ஆகமம் அவற்றின் வழிநூல் சார்புநூல் ஆகிய எல்லா நூல்களின் கருத்து பதி, பசு, பாசம் என்னும் முப்பொருளின் இயல்பைத் தெரிவித்தல் ஆகும். அவற்றுள் பதி என்னும் இறைவன் ஏனைய இரண்டிற்கும் மேலானதாகும். இறைவன் அருவமும் உருவமும் அல்லாதாய், குணமும் குறிகளும் இல்லாததாய், மலத்தில் பொருந்தாததாய் ஏகமாய், அழிவில்லாததாய், அளவற்ற உயிர்களின் அறிவுக்கு அறிவாய், சலனம் அற்றதாய், கண்டிக்கப்படாததாய், ஆனந்தமே வடிவாய், சென்றடைய அரிதாய், வழிபட்டவர்கள் சென்றடையும் முத்தியாய், அணுவிற்கு அணுவாய், எல்லாவற்றிற்கும் பெரிதாய் விளங்குவதாம். அவ்விறைவனை அறிவால் தெளிந்தோர் சிவம் என்று சொல்வர்.
பாடல் எண் 14.
“நீடுபரா சக்திநிகழ் இச்சா ஞானம்
     நிறைகிரியை தரஅதனை நிமலன் மேவி
நாடறிய கருணைத்திரு உருவ மாகி
     நவின்றுபல கலைநாத விந்து ஆதி
கூடும்ஒளி வளர்குடிலை மாயை மேவிக்
     கொடுவினைகொள் தநுகரண புவன போகம்
பீடுபெற நிறுவிஅவை ஒடுக்கும் மேனி
     பிறங்கியநிட் களசகளப் பெற்றி யாமே.”
இறைவனின் தடத்த இலக்கணத்தைக் கூறும் இப்பாடலின் பொருள், நிலைபெற்ற சிவசக்தி ஆனவள் இச்சாசக்தி, ஞானாசக்தி, கிரியாசக்திகளைத் தர, அந்தச் சக்திகளை மலமற்றவனாகிய சிவன் பொருந்தி – அச்சக்தியாகிய திருவருளே திருமேனியாகக் கொண்டு, நாதம், விந்து, தத்துவங்கள் கூடுகின்ற ஒளி பொருந்திய சுத்த மாயையைப் பொருந்தி – வேதம், ஆகமம் முதலிய பல கலைகளையும் அருளிச் செய்து, அசுத்தமாயை, பிரகிருதி மாயைகளில் கொடிய வினைகளைக் கொண்டிருக்கின்ற தனு, கரண, புவன, போகங்களைப் படைத்து, காத்து, அவற்றைத் தோன்றிய முறையிலேயே ஒடுக்கி, நிட்களம், நிட்கள சகளம், சகளம் என்னும் தன்மைகளை உடையதாய் விளங்குவான் இறைவன்.
பாடல் எண் 92.
“ஆசுறு திரோத மேவாது அகலுமா சிவமுன் னாக
ஓசைகொள் அதனில் நம்மேல் ஒழித்தருள் ஓங்கும் மீள
வாசியை அருளும் மாயா மற்றது பற்றா உற்றங்கு
ஈசனில் ஏக மாகும் இதுதிரு எழுத்தின் ஈடே.”
திரு ஐந்தெழுத்தின் மகிமையைக் கூறும் இப்பாடலின் பொருள், ஆணவ மலமும் திரோதாயியும் பொருந்தாமல் நீங்கும்படி சிவாயநம என்னும் சூட்சும ஐந்தெழுத்தை உச்சரிக்க வேண்டும். அவ்வாறு உச்சரித்தால் ந கரமாகிய திரோதான சத்தியும், ம காரமாகிய மலமும் ஒழிந்து அருட்சக்தியாய் விளங்கும். பின்பு ம கரமாகிய அந்த அருட்சக்தியே சி கரமாகிய சிவத்தைத் தரும். மேலும் அந்த அருளைப் பற்றுக்கோடாகக் கொண்டு ஆன்மா அருளிலே அடங்கி சிவத்திலே ஒன்றுபடும். இதுவே ஐந்தெழுத்தின் பெருமையாகும்.
சூட்சும பஞ்சாட்சரத்தை ஒலித்தால் ஆணவமலம் பரிபாகம் எய்தும். திரோதான சத்தி அருட் சத்தியாய் ஆன்மாவில்ப் பதியும். இதுவே சத்திநிபாதம். பின் சிவத்தோடு ஆன்மா ஒன்றிவிடும்.
இந்தப் பக்கம் Hit Counter by Digits தடவை பார்வையிடப்பட்டுள்ளது.
0 Comments



Leave a Reply.

    Photo

    என்னைப்பற்றி

    நாகேந்திரம் கருணாநிதி
    மயிலிட்டி

    பதிவுகள்

    August 2017
    July 2017
    May 2017
    April 2017
    March 2017
    January 2017
    December 2016
    November 2016
    October 2016
    September 2016
    August 2016
    July 2016
    June 2016
    May 2016
    April 2016
    February 2016
    January 2016
    November 2015
    October 2015
    September 2015
    August 2015
    July 2015
    June 2015
    May 2015
    April 2015
    March 2015
    February 2015
    January 2015

    முழுப்பதிவுகள்

    All

      தொடர்புகளுக்கு:

    Submit
நன்றி மீண்டும் வருக!

நன்றி மீண்டும் வருக!

நன்றி மீண்டும் வருக!
Hit Counter by Digits
© 2011-22 myliddy.fr