அவரவர் வாழ்வினில் ஆயிரம் ஆயிரம் அர்த்தங்கள் அன்றைய அழகிய காலம் மறக்கமுடியாத தீர்த்ததிருவிழா. சூரிய உதயத்திற்கு முன்பே எழும்பி உறவுகளும் நட்புகளும் ஒன்றாக கூடி எமது பிள்ளையாரை தீரத்கடற்கரைக்கு கொண்டுசெல்லும் அழகே அழகு. அங்கு தேவி மாமி வீட்டில் உறவுகள் கூடி நின்று தீர்த்தகடற்கரைக்காக செய்யும் சாப்பாடுகளும் கட்டும்பூக்களும் அங்கு பிள்ளையாருக்கு மாவிலைகளும் தோரணங்களும் தொங்கும் பந்தலும் இன்று நினைத்தாலும் முடியாத அந்த உறவுகளின் ஒற்றுமை.
அனல்பறக்கும் அக்கினி வெயிலும் அமர்களப்பட்ட தீர்த்தகடற்கரையும் ........................
அவரவர் வாழ்வினில் ஆயிரம் ஆயிரம் அர்த்தங்கள் அன்றைய அழகிய காலம் மறக்கமுடியாத தீர்த்ததிருவிழா. சூரிய உதயத்திற்கு முன்பே எழும்பி உறவுகளும் நட்புகளும் ஒன்றாக கூடி எமது பிள்ளையாரை தீரத்கடற்கரைக்கு கொண்டுசெல்லும் அழகே அழகு. அங்கு தேவி மாமி வீட்டில் உறவுகள் கூடி நின்று தீர்த்தகடற்கரைக்காக செய்யும் சாப்பாடுகளும் கட்டும்பூக்களும் அங்கு பிள்ளையாருக்கு மாவிலைகளும் தோரணங்களும் தொங்கும் பந்தலும் இன்று நினைத்தாலும் முடியாத அந்த உறவுகளின் ஒற்றுமை.
0 Comments
என் நிஜங்கள் எல்லாம் பொய்யானவை
நான் நினைத்த நிஜங்கள் எல்லாம் பொய்மையானவை நான் உணர்ந்த உணர்வுகள் எல்லாம் உணர்வுக்கு அடிமையானவை என் உணர்வுகளுக்கும் மரியாதை கொடுக்கும் உயிராய் இருப்பவள் தான், என் தாய்.
ஐம்பதாவது அகவையை அன்புடன் தழுவி நிற்கும் அன்பான மயிலை மகள் அஞ்சலி வசீகரன் அவர்களுக்கு மயிலிட்டி மக்கள் சார்பாக இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்!
அமரர் கந்தசாமி தம்பி
(மாவீரர்) வீரச்சாவு : 21 நவம்பர் 1990 அத்தை தந்த அத்தானே ஆண்டுகள் 25 ஓடியும் -உன் அன்பில் ஆடாமல் நிற்கிறோம். பிரிந்து போன உன்னை விட பிரியாத உன் நினைவுகள் தான் நிரந்தரம். மயிலை மண்ணில் ராசத்தி அக்காவின் ரியூசனை மறந்தவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். அந்த உடைந்து முறிந்து போன கிடுகு வேலிக்குள்ளே ஒரு அன்னை திரேசா போலே இருந்து எங்களை உருவாக்கிய பெருமை ராசாத்தி அக்காவும் ராசு அக்காவுக்கும் தான் உண்டு. இன்று நாங்கள் எத்தனையோபேர் புலம் பெயர்நாட்டில் பட்டதாரிகளாகவும் பண்பட்டவர்களாகவும் வாழ வழிகாட்டயவர்கள். அங்கும் ராசாத்தி அக்கா என்றால் செல்லம் கொஞ்சலாம். ராசு அக்கா கொஞ்சம் கண்டிப்பு. ஆனால் வருடத்தில் ஒருமுறை வரும் பேபி அக்காவை பார்க்க காத்திருப்போம். ஆனால் அவாவுக்கு எல்லோரும் பயம். ராசாத்தி அக்கா கிறிஸ்தவராக இருந்த போதும் ஒவ்வொரு வருடமும் எங்கள் சரஸ்வதி பூசையை திருவிழா போல மிகவும் சிறப்பாக கொண்டாடுவோம்.
என் பெயர் அஞ்சலி. எனக்கு கருவறையை கடனாக தந்தவளோ வீரமாணிக்கதேவனின் பேத்தி. நான் கருவறையை விட்டு வந்ததோ பெரியமாணிக்கதேவனின் மண்ணில் இடையில் என் உறவுகளோ நரசிம்மனின் மண்ணில் ஆனாலும் மூன்று உறவுகளும் முட்டி மோதாத பெருமை பெற்ற என் உறவுகளுக்கு முதல் வணக்கம் . மாதாகோயில் மணியோசையில நான் என் மலரும் நினைவுகளை ஆரம்பிக்கிறேன் காரணம் என் ஆரம்பக் கல்விக்கூடமும் mother roseம் அங்கே தான் ஆரம்பம் . |
என்னைப்பற்றிஅஞ்சலி வசீகரன் பதிவுகள்
November 2017
முழுப்பதிவுகள் |