மயிலிட்டி மக்கள் ஒன்றியம் பிரான்ஸ்
  • நல்வரவு 2025
    • நல்வரவு 2024
    • நல்வரவு 2023
    • நல்வரவு 2022
    • நல்வரவு 2021
    • நல்வரவு 2020
    • நல்வரவு 2019
    • நல்வரவு 2018
    • நல்வரவு 2017
    • நல்வரவு 2016
    • நல்வரவு 2015
    • நல்வரவு 2014
    • நல்வரவு! 2013, 12, 11
  • ஆலயங்கள்
    • மருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் >
      • ஆலய வரலாறு
      • பரிபாலன சபையினர்
    • காணிக்கை மாதா தேவாலயம்
    • காணிக்கை மாதா தேவாலயம்
    • ஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்
    • முனையன் வளவு முருகையன் ஆலயம்
  • மயிலிட்டி செய்திகள்
    • மயிலிட்டி கோவில் பாடல்
  • கவிதைகள் / ஆக்கங்கள்
    • சண் கஜா (மயிலைக் கவி) படைப்புக்கள் >
      • சண் கஜா (மயிலைக் கவி) படைப்புக்கள் >
        • கிளாலி பயணம்
        • முறிகண்டி பிள்ளையார்
        • "காலங்கடந்த ஞானமிது"
        • "கோரத் தாண்டவம்"
        • "காலப் பெருவெளியில்"
    • நாகேந்திரம் கருணாநிதி
    • அருண்குமார் குணபாலசிங்கம்
    • அஞ்சலி வசீகரன்
    • மகிபாலன் மதீஸ்
    • மயிலையூர் தனு
    • அகஸ்ரின் இரவீந்திரன்
    • Image Gautham
    • தயாநிதி தம்பையா
    • மயிலை துரை
    • ஐங்கரன் படைப்புக்கள்
    • "மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்"
    • சுதா நவம் படைப்புக்கள்
    • வசந்த் சகாதேவன் படைப்புக்கள்
    • ஜெயராணி படைப்புக்கள் >
      • தொலைந்த ஏக்கங்கள்
      • வாழ்வின் பயம்
      • நானும் என் தேவதையும்
    • Dr. ஜேர்மன் பக்கம் >
      • "உலக மங்கையர் தினம்!"
      • சிந்தனை வரிகள் Dr. Jerman
    • அன்ரன் றாஜ் படைப்புக்கள்
    • சாந்தன் படைப்புக்கள் >
      • "சாந்தன் படைப்புக்கள்"
      • "சிந்தனை வரிகள் நமக்கு"
      • "ரோஜா மலரே"
      • "பெண்"
      • "பணம்"
      • "ரிசானா"
      • "புத்தாண்டே வருக! 2013"
      • "சுனாமி"
      • "உறவுகள்"
      • "கடல் அன்னை"
      • "சிந்தனை உலகம்"
      • "மயிலையின் பெருமை"
      • "மனம் கவர்ந்தவளே"
      • "சொர்க்கபூமி"
      • "கருவில் சுமந்தவளே"
      • "போராட்டம்!"
      • "சிந்தனை வரிகள்"
      • "என் கவிதை"
      • "சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே!"
      • "பசுமை மலரும் நிச்சயம்"
      • "தென்றல்"
      • "காதலியே"
      • "அப்பா"
      • "ஏக்கம்"
      • "இறைவனின் சாபம்!"
      • "புத்தாண்டே வருக! 2012"
      • "அம்மா!"
      • "தவிப்பு"
      • "ஆசை"
      • "மயிலை மண்ணே"
      • "அழகு"
      • "நிம்மதி"
    • அருண்குமார் படைப்புக்கள் >
      • இருண்டுபோன நாளின் நினைவுகள்!
      • "சமர்ப்பணம்"
      • "மீண்டும் வாழ வழி செய்வோம்"
      • "நினைவுகள் 2" "மடம்"
      • "நினைவுகள் 1" "மண்சோறு"
      • "நான் பிறந்த மண்ணே !"
    • அல்விற் வின்சன் படைப்புக்கள் >
      • "சிவராத்திரியும் கத்தோலிக்கமும்"
      • "முதல்பிரிவு"
      • "பாட்டன் வழி நிலம் வேண்டும்"
      • "வசந்தம்"
      • "உலக பெண்கள் தினம்!"
      • "தனித்திருப்பாய்!"
      • "என் தாய்"
      • வாழ்த்து Myliddy.fr
      • "ஊறணி" மண்ணின் நினைவு
    • ஜீவா உதயன் படைப்புக்கள் >
      • "அம்மா"
      • "தேடல்"
      • "அழகிய நாட்கள்"
      • "கவிஞர்களே"
      • "தாயே என்றும் எனக்கு நீயே!"
    • ஜீவா உதயன் படைப்புக்கள்
    • கௌதமன் படைப்புக்கள்
    • சங்கீதா தேன்கிளி படைப்புக்கள் >
      • சங்கீதா தேன்கிளி
      • "புலம்பெயர்ந்தோர் கவனத்திற்கு.."
      • "எங்கள் மயிலை மண்"
      • "பனங்கள்ளு"
      • "மின்னல்களால் இழைக்கப்பட்ட பூமி"
    • குமரேஸ்வரன் படைப்புக்கள் >
      • "என்ன வாழ்க்கை இது"
      • "தாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்"
      • "பனங்கள்ளு"
      • "தேன் கூடு"
      • "வீச்சுவலை"
    • கவின்மொழி படைப்புக்கள் >
      • "கட்டுமரம்"
      • யுகமாய் போன கணங்கள்!
    • கௌசிகனின் படைப்புக்கள்! >
      • "பூமிக்கு வந்த புது மலரே"
      • "மயிலை மண்ணில்"
      • "இயற்கைக் காவலன்"
      • "வீச்சுவலை"
      • "தேன்கூடே.... தேன்கூடே...."
      • "என் இனிய கருமரமே..."
      • "எங்கள் மயிலை மண்"
    • படம் என்ன சொல்கின்றது... >
      • "பனங்கள்ளு"
      • "வீச்சுவலை"
      • "தேன் கூடு"
      • "பனைமரம்"
      • "கட்டுமரம்"
  • துயர் பகிர்வுகள்
    • மரண அறிவித்தல்கள் 2025
    • மரண அறிவித்தல்கள் 2024
    • மரண அறிவித்தல்கள் 2023
  • வாழ்த்துக்கள்
    • திருமணம் >
      • திருமண நாள் வாழ்த்து
      • வசந்தன் றஞ்சனா
    • பூப்புனித நீராட்டுவிழா
    • பிறந்தநாள் >
      • பிறந்தநாள்
      • "செல்லப்பா சண்முகநாதன்"
      • தேவி குணபாலசிங்கம்
      • திரு. வரதராஜா
      • சாரா சதானந்தம்
    • பொங்கல்
    • பொங்கல்
    • HAPPY NEW YEAR >
      • New year
    • Christmas
  • கலைமகள் மகா வித்தியாலயம்
  • மயிலிட்டி தளங்கள்:
    • நோர்வே >
      • நோர்வே மயிலிட்டி மக்கள் ஒன்றியம்
    • பிரித்தானியா >
      • MYLIDDY MAKKAL ONRIYAM UK
      • MYLIDDY SPORTS CLUB UK
    • கனடா >
      • கனடா மயிலிட்டி மக்கள் ஒன்றியம்
    • ourmyliddy.com
  • புகைப்படங்கள்
    • அருண்குமார்
  • பாடசாலைகள்
    • மயிலிட்டி இலவச முன்பள்ளி
    • றோமன் கத்தோலிக்க வித்தியாலயம் >
      • பாடசாலை நிகழ்வுகள்
      • "ஜெயராணி நிர்மலதாசன்"
      • பிரகாசிக்கட்டும் வாழ்வு
      • ஒளி விழா 2012
  • ஒன்றுகூடல்
    • ஒன்றுகூடல் 2014
    • ஒன்றுகூடல் 2012
    • ஒன்றுகூடல் 2011
  • எம்மைப்பற்றி:
    • தொடர்புகளுக்கு:
  • மயிலை மண்ணில்
  • ஒளியும் ஒலியும்
    • ஒளியும் ஒலியும் >
      • "அண்ணை றைற்"
  • மரண அறிவித்தல் 2017
    • மரண அறிவித்தல் 2016
    • மரண அறிவித்தல் 2015
    • மரண அறிவித்தல் 2014
    • 2013 டிசம்பர் வரை
    • 2012 டிசம்பர் வரை
    • 2011 டிசம்பர் வரை
  • நினைவஞ்சலி
    • நினைவஞ்சலி
    • உருக்குமணி தர்மலிங்கம்
  • ஆறாவது அகவை
    • ஐந்தாவது அகவை
    • நான்காவது அகவை
    • மூன்றாவது அகவை
    • இரண்டாவது அகவை
    • முதலாவது அகவை >
      • DR. JERMAN MYLIDDY
      • KOWSIKAN KARUNANITHI
      • SATHANANTHAN SADACHARALINGAM
      • SANGEETHA THENKILI
      • SELVIE MANO
      • JUSTIN THEVATHASAN
      • KUMARESWARAN TAMILAN
      • ANTON GNAPRAGASHAM
      • SHAN GAJA
      • ALVIT VINCENT
      • NAVARATNARANI CHIVALINGAM
  • தந்தை தேவராஜன்
  • சாதனை
  • சிறப்புத் தினங்கள்
    • Womens day 2015
    • மகளிர் தினம் 2014 >
      • மகளிர் தினம் 2013 >
        • "பெண்"
        • "உலக மங்கையர் தினம்!"
        • "உலக பெண்கள் தினம்!"
      • மகளிர் தினம் 2012
    • NELSON MANDELA
    • தந்தையர் தினம்
    • அன்னையர் தினம் >
      • அன்னையர் தினம்
    • மே தினம்
    • சுனாமி 2013 >
      • சுனாமி 2012
  • .

ஆலய வரலாறு

9/2/2014

0 Comments

 
Photo
மயிலிட்டி வீரமாணிக்க தேவன்துறை கண்ணகி அம்பாள் ஆலயத்தின் தொன்மையும் தோற்றமும்

இந்து சமுத்திரத்தின் எழில் முத்தென விளங்கும் ஈழமணித்திருநாடு இயற்கை அன்னையின் இனிய கொடையாக வளம் பல கொழித்துச் சிறப்புற்று விளங்குகின்றது. ஆர்த்தெழும் அலைகடல் சூழ்ந்து தரும் கடல் வளமும் விண்ணளாவி நிமிர்ந்து நிற்கும் மலைவளமும் பூமித்தாய் மனம் களித்துதவும் நிலவளமும் கொழித்து விளங்கி சிறப்பு பெற்று விளங்குகின்றது. இராவணணேஸ்வரனின் நவகோடி சிவலிங்கப்பிரதிஷ்டையால் சிவபூமியென சிறப்புப்பெற்று விளங்கும் ஈழமணித்திருநாட்டின் வடபால் சைவமும் தமிழும் செழித்து செந்தமிழின் நாடாகவும் சைவத்தின் இருப்பிடமாகவும் விளங்குவது யாழ்ப்பாணம்.

Photo
மயிலிட்டி கிராமம்:

மயிலிட்டி என்னும் கிராமம் இயற்கை எழில் நிறைந்த சிற்றூர். கிழக்கே பலாலி வடக்கே அலைகடல் மேற்கே தையிட்டி தெற்கே கட்டுவன் என்பதாக அதன் எல்லைகள் அமைந்திருந்தன. உபதபாலகம் வைத்தியசாலை என்பவற்றோடு கலைமகள் மகா வித்தியாலயம் றோ.க.பாடசாலை ஆகிய இரண்டு பாடசாலைகளும் அமையப்பெற்று நிறைவு பெற்ற கிராமமாக விளங்கியது மயிலிட்டி. கடல் தரும் வளமும் மண் வளமும் மிகுந்து விளங்கியமையால் அங்கு வாழ்ந்த மக்கள் குறைவின்றி திருப்திகரமான வாழ்வை வாழ்ந்தனர். ஆலயங்கள் பல நிறைந்து விளங்கின. மயிலிட்டி ஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம் , மயிலிட்டி முருகமூர்த்தி ஆலயம் , மருதடி விநாயகர் ஆலயம், தோப்புப்பிள்ளையார் ஆலயம், கொழுவியங்கலட்டி பிள்ளையார் ஆலயம் போன்ற பல ஆலயங்கள் ஆன்மீக வளர்ச்சிக்கு உதவின. ஆலய வழிபாட்டுடன் இந்தியத் திருத்தலங்களை வழிபடுவதிலும் கதிர்காம யாத்திரை சென்று கதிர்காமக்கந்தனை வழிபடுவதிலும் தொண்டமனாற்றங்கரையுறையும் செல்வச்சந்நிதி கந்தனை வழிபடுவதிலும் ஆர்வம் கொண்டவர்களாக காணப்பட்ட மயிலிட்டி வாழ் மக்கள் தம் குலதெய்வமாகிய கண்ணகி அம்பிகை மீது அளவிறந்த பக்தி கொண்டவர்கள். கண்ணகி அம்பாள் வழிபாடு இந்தியாவின் சேர நாட்டிலிருந்து  1ம் கஐபாகு மன்னனால் கி.பி 2ம் நூற்றாண்டு காலத்தில் கொண்டுவரப்பட்டது. கி.பி 1250 -1505 காலங்களில் அதாவது பொலநறுவை காலத்திற்கும் போர்த்துக்கேசரின் காலத்திற்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் கற்பிட்டியில் நாச்சியம்மன் கோயில் இநிக்கரவட்டிய கண்ணகை அம்மன் கோயில் , குண்டசாலை கண்ணகை அம்மன் கோயில் , குருநாகல் கண்ணகி அம்மன் கோயில் போன்றன காணப்பட்டமைக்கான சான்றுகள் சவுல் சந்தேசிய பிரபந்தங்களில் கூறப்பட்டுள்ளன.

 
6ம் புவனேகபாகுவின் (செண்பகப்பெருமாள்) கடற்படை வீரர்கள் மூவர்

ஈழமணி நாட்டின் நல்லைநகர் பண்டைத்தமிழரின் தலைநகராக விளங்கிய காலத்தில் நல்லைநகரில் இராசதானி அமைத்து அரசாண்ட மன்னன் 6ம் புவனேகபாகு என்கிற செண்பகப்பெருமாள். அவரது ஆட்சிக்காலத்தில் சைவசமயம் எழுச்சிபெற்றிருந்ததை எமது வரலாற்றுத் தரவுகள் மூலம் அறிய முடிகின்றது. அவரது ஆட்சிக்காலத்தில் கரையோரப்பிரதேசங்களின் பாதுகாப்பை பலப்படுத்தும் நோக்குடன் போரிற்சிறந்து விளங்கிய சகோதரர்கள் மூவரான வீரமாணிக்கதேவன் , பெரிய நாட்டுத்தேவன் , நரசிங்கதேவன் ஆகிய மூவரையும் தெரிவு செய்து அவர்களிடம் வடகடற்பிரதேசத்தின் பாதுகாப்புப் பொறுப்புக்களை கையளித்தார். இம்மூன்று சகோதரர்களும் தத்தமது குடும்பத்தாருடனும் தமக்கு கீழுள்ள படையினருடனும் குடியேறிய இடங்களேவீரமாணிக்கதேவன்துறை,  பெரியநாட்டுத்தேவன்துறை, நரசிங்கதேவன்துறை என்று அழைக்ககப்பட்ட பிரதேசங்களாகும். இம்மூன்று பிரதேசங்களும் ஒன்றாக மயிலிட்டி என அழைக்கப்பட்டது. இம்மூன்று வீரர்களும்; போரில் வல்லவர்களாக இருந்தது மட்டுமின்றி, மிகுந்த சைவப்பற்றுடையவர்களாகவும், கொடையாளிகளாகவும் வாழ்ந்ததுடன் குறு நில மன்னர்களாகவே கருதப்பட்டும் போற்றப்பட்டும் வந்தனர். அவர்களது பெயர்களில் மிகப்பெரிய பிரதேசமே வழங்கப்பட்டு ஆளுகைக்கு உட்பட்டிருந்தது. அம்மூவரும் குடியேறிய இடங்களில் ஆலயங்கள் , பாடசாலைகள் , வைத்திய நிலையங்கள் , விளையாட்டுமைதானங்கள் என்பவற்றை அமைத்து மைதானங்களில் (அக்காலத்தில்) போர்ப்பயிற்சிகளிலும் ஈடுபட்டுவந்தனர். வீரமாணிக்கதேவனால் அமைக்கப்பட்ட விநாயகர் ஆலயம் “மகா கணபதி ஆலயம் அல்லது தோப்புப் பிள்ளையார்ஆலயம்”எனவும் பெரியநாட்டுத்தேவனால்  அமைக்கப்பட்ட ஆலயம் (மருதமரத்தின் கீழ் அமைக்கப்பட்டதால்)“மருதடி விநாயகர் ஆலயம்” எனவும் நரசிம்மதேவனால்ஸ்தாபிக்கப்பட்ட ஆலயம் “கொழுவியங்கலட்டி பிள்ளையார் ஆலயம்” எனவும் அழைக்கப்பட்டு வந்தன.

தோப்புப்பிள்ளையார் ஆலயம்

இவ்வாறாக வீரமாணிக்கதேவனால் ஸ்தாபிக்கப்பட்ட தோப்புப்பிள்ளையார் ஆலயத்தினை  பரிபாலித்து வருவதற்கு தனது குழாத்தில் மிகவும் ஆசாரசீலரும் பக்திமானுமாகிய ஒருவரை நியமித்து பூஜைகள் ஒழுங்காகச்செய்யப்பட்டு வந்தன. இப்பூசாரி பரம்பரையினரே தொடர்ந்தும் இவ்வாலயத்தை பரிபாலித்து வந்தனர். இப் பரம்பரையினரின் பெயரிலேயே ஆலயத்தின் உறுதிகளும் பரம்பரை பரம்பரையாக மாற்றப்பட்டு வந்தது. ஓல்லாந்தர் காலத்தில்  “தோம்பு” என்றழைக்கப்பட்ட காணிப்பதிவுகளில் “வீரமாணிக்கதேவன்துறை” என்றே பதியப்பட்டிருந்தன. இன்னும் எமது ஆலய உறுதிகளில் “வீரமாணிக்கதேவன்துறை இறை” என்றே பதியப்பட்டுள்ளது.

Photo
பழைய ஆலயம் – தேவியார் கொல்லை ஆலயம்

நரசிங்கதேவன் புலத்தில் ஓர் கண்ணகை அம்பாள் ஆலயமும் அமைந்திருந்தது. இதன் தோற்றம் பற்றிய காலம் தெரியவில்லை. அவ்விடம் தேவியார் கொல்லை எனவும் அவ்வாலயத்தின் முன்பாக அமைக்கப்பட்ட திருக்குளம் “தேவிகுளம்” எனவும் வழங்கப்பட்டு வந்தது. இவ்வாலயத்திற்கும் இப்பூசாரியினரே மிகவும் பக்திசிரத்தையுடன் பூஜைகள் செய்துவந்தனர். இக்கோயிலின் சிதைவுகள் இன்றும் மயிலிட்டியில் காணப்படுகின்றன. இவ்வாறிருக்கையில் ஏற்பட்ட சச்சரவுகள் காரணமாக கண்ணகை அம்பாள் ஆலயக் கதவுகள் பூட்டப்பட்டு பூஜைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டன. இதனால் வீரமாணிக்கதேவன்துறை வாசிகள் கவலையுற்றவர்களாய் வாழ்ந்துவரும் வேளையில் அவர்களது தொழில்வளம் குன்றத்தொடங்கியதுடன் நோய்களும் பரவ ஆரம்பித்தன. இப்பூசாரி பரம்பரையைச்சேர்ந்தவர்கந்தர். இவரது மகன் காசிப்பிள்ளை. கந்தர் சிறிது காலத்தின் பின் இல்லற வாழ்வைத்துறந்து ஆலயத்திலே தங்கியிருந்து இறை தொண்டில் ஈடுபட்டார். பூஜைக்கு படைத்த உணவையே ஒருநேர உணவாக உட்கொண்டு வந்தார். கதிர்காமத்துக்கு செல்ல வேண்டும் என எல்லோருக்கும் கூறுவார். திடீரென ஒருவருக்கும் சொல்லிக்கொள்ளாது கதிர்காமத்திற்கு சென்றுவிட்டார். எல்லோரும் தேடிக் கைவிட்ட நிலையில் கதிர்காம உற்சவம் நடைபெறும் வேளையில் கந்தனை தரிசிக்க சென்ற ஊரவர்கள் அவரைக்கண்டு தங்களுடன் ஊருக்கு வருமாறு அழைத்தபோது  “இதுதான் எனது சொந்தஊர்” எனக்கூறி அங்கேயே தங்கி முருகபதம் அடைந்தார். இவ்வாறு சிறந்த பக்திமானாக விளங்கிய கந்தரின் பேரனாகிய வயிரவநாத ஐயர் பரம்பரையினர் கண்ணகை அம்பாளிடமும் பக்திகொண்டவர்கள்.

Photo
புதிய ஆலயத்தின் தோற்றம்

இக்காலத்தில் கந்தரின் மகன் காசிப்பிள்ளை ஓர் கனவு கண்டார்.  தாம் பூஜை செய்யும் தோப்புப்பிள்ளையார் ஆலயத்தின் வடகீழ்த்திசையில் கடற்கரையோரத்தை அடுத்த புன்னைமர நிழலின் கீழ் (தற்போது கண்ணகி அம்மன் ஆலயத்தின் தல விருட்சமாக உள்ள புன்னை மரம்) ஓர் அழகிய தெய்வீகப் பெண்மணி கையில் சிலம்புடன் நின்று “நான் இம்மரத்தடியில் தங்கப்போகிறேன்” என்று கூற திடுக்குற்று கண்விழித்தெழுந்த காசிப்பிள்ளை குறித்த புன்னை மரத்தடியை அணுகினார். என்னே அற்புதம்! அப்பெரிய புன்னைமரத்தின் நிழலில் ஓர் காலடிச்சுவடும் சிலம்பின் சுவடும்  ஆழப்பதிந்திருந்தது. காற்றுவீசும் கடற்கரையருகே வெண்மணற்பரப்பில் மிகவும் துல்லியமாகத் தெரிந்த காலடிச் சுவடுகளைக் கண்டு வியப்பும் ஆச்சரியமும் புளகாங்கிதமும் பக்திபரவசமும் அடைந்த அவர் அவ்வதிசயத்தை ஊர் மக்களுக்கு எடுத்தியம்பி புன்னைமர நிழலில் பொங்கல் பொங்கி அம்பாளை வழிபட்டு அவ்விடத்தில் கண்ணகி சிலையொன்றையும் பிரதிஷ்டை செய்து வழிபட்டுவரலானார்.  இச்சிலை முன்பு கதவடைக்கப்பட்ட தேவியார் கொல்லை தேவிகோவிலிலிருந்து எடுத்துவரப்பட்டதாக கூறப்படுகின்றது. இவ்வாறே எமது தற்போதுள்ள அருள்மிகு ஸ்ரீ கண்ணகாதேவி தேவஸ்தானத்தின் ஸ்தாபிதம் ஆரம்பமாகியது. பிள்ளையார் கோவில்  பூசகர் பரம்பரையினரே இவ்வாலய பூஜைப்பொறுப்பையும் ஏற்று பக்திசிரத்தையுடன் நடாத்திவந்தனர்.

இவ்வாறு மயிலை வீரமாணிக்கதேவன்துறையில் வீரமாணிக்கதேவன் பரம்பரையினரான கந்தன் மகன் காசிப்பிள்ளை அவரைத் தொடர்ந்து வைரவநாதர் (இப்பெயர் இவரது பேரன் வழியாக ஒவ்வொரு பேரனுக்கும் சூட்டப்பட்டு வந்துள்ளது. அவ்வழியில்  எமது தந்தையும் , பூஜையுரிமை பெற்றவரும் பிரதான பூசகராகவும் ஆலய உரிமையாளர்களில் ஒருவருமாக விளங்கிய காலஞ்சென்ற சிவஸ்ரீ இ.நவமணி ஐயா (அவர்களின் இயற்பெயரும் வைரவநாதர் ஆகும்) என்போர் பூஜைப்பொறுப்பேற்று சிறப்பாக செயற்பட்டனர். சிறுகொட்டிலாக ஆரம்பிக்கப்பட்ட அருள்மிகு ஸ்ரீ கண்ணகாதேவி தேவஸ்தானம் காலப்போக்கில் சுண்ணாம்புக் கட்டடமாக பரிணமித்தது. இன்றும் வீரமாணிக்கதேவனால் அமைக்கப்பட்ட தோப்புபிள்ளையார் ஆலயத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. கண்ணகை அம்மன் கோயிலின் முதல் வணக்கத்திற்குரிய பிள்ளையார் ஆலயமாக மகா கணபதி ஆலயம் (தோப்புப் பிள்ளையார்) விளங்குவதுடன் அம்பாளின் பரிவார மூர்த்தியாகவும் போற்றப்பட்டு வருகின்றது.

கண்ணகை அம்பாள் ஆலயம் மூலஸ்தானம், மகாமண்டபம், அர்த்தமண்டபம், தரிசனமண்டபம், மடைப்பள்ளி என்பவற்றுடன் ஆலயத்தின் தெற்கு வீதியில் தீர்த்தகேணி ஒன்றும் கொண்டதாக மூர்த்தி, தலம், தீர்த்தம் எனும் சிறப்புக்களைப் பெற்றுத் திகழ்ந்தது. அதுமட்டுமின்றி அம்பாளுடன் சிவன், விநாயகர், முருகன் போன்ற பரிவாரமூர்த்திகளுக்கும் தனித்தனி கட்டுத்தேர்கள் அமைக்கப்பட்டு பஞ்சரத பவனி இடம்பெற்று வந்தது. (இது நாளடைவில் பழுதடைந்து விட்டது) ஆனித்திங்களில் தீர்த்தோற்சவமும் அதற்கு முந்திய 10 நாட்களில் அலங்காரத்திருவிழாவும் இரதோற்சவமும் நடந்து வந்தது. வைகாசி விசாகத்தில் வருடப்பொங்கலும் குளிர்த்திவிழாவும் வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டன.

1958 ம் வருட காலங்களில்….  

காலங்கடந்து பல தலைமுறைகளைக் கண்ட எமது கண்ணகாதேவி ஆலயத்தின் தலவிருட்சமாக விளங்கி வந்த பாரிய புன்னைமரம் இக்காலத்தில் புயல்காற்றினால் வேரோடு சாய்க்கப்பட்டது. அத்துடன் ஆலயக் கட்டடங்களிலும் ஆங்காங்கே வெடிப்புக்கள் எற்படத் தொடங்கியிருந்தன. இக்கோவிலை புதிதாக நிர்மாணிக்க வேண்டிய பொறுப்பிலிருந்த பூசகர்களாக இருந்த சிவத்திரு நவமணி ஐயா (இயற்பெயர் வைரவநாதர்) அவர்களும் அவர்களது மைத்துனருமான ஆனந்தசிவம் ஐயா அவர்களும் கலந்தாலோசித்து அடியார்களின் ஒத்துழைப்புடன் 1958ம் ஆண்டு அடிக்கல் நாட்டுவதற்காக இந்தியாவின் தமிழ்நாட்டிலிருந்து குன்றக்குடி மஹாசந்நிதானத்தின் அடிகளார் தவத்திரு அருணாசல தேசிகரை அழைக்க அவரும் அன்புடனும் பக்தி சிரத்தையுடனும் வருகை தந்து அம்பிகைக்கு அடிக்கல் நாட்டினார்கள். அப்போது அவருக்கு மனக்கண்ணில் ஒரு காட்சி தென்பட்டாதாகக் கூறினார். அக்காட்சியாவது கன்னியாகுமரி தெய்வம் கடல் அலைகளில் நின்று தனக்கு ஆசி வழங்குவது ஆகும் என்று அவர் ஆசியுரை வழங்கும் போது கூறினார்;. அதைத் தொடர்ந்து ஆலயத்தின் மூலஸ்தானம்;, மகாமண்டபம், அர்த்தமண்டபம், சபாமண்டபம் என்பன கருங்கல்லாலும் மற்றும் தரிசனமண்டபம் (இது எமது தந்தையார் சிவஸ்ரீ இ.நவமணி ஐயா அவர்களின் தனிச்செலவில் நிர்மாணிக்கப்பட்டது. இது சீலிங் வேலையுடன் கண்கவர்  அலங்கார வடிவங்கள் தீட்டப்பட்டு அடியவர்கள் ஆனந்தமாக நின்று வழிபடக்கூடியவாறு அமைக்கப்பட்டது) வசந்தமண்டபம், வைரவர்மண்டபம், மணிக்கூட்டுக்கோபுரம், அன்னதானமண்டபம் என்பன சிமெந்து கற்களாலும் அமைக்கப்பட்டு உள்வீதி, மகாமண்டபம் என்பன சிற்பவேலைப்பாடுகள் கொண்ட தூண்களுடன் அலங்காரமாக கட்டப்பட்டது. தூபியை நிர்மாணிப்பதற்கென இந்தியாவிலிருந்து ஸ்தபதிகள் வரவழைக்கப்பட்டு  அழகிய சிற்பவேலைப்பாடுகளுடனும் கலையம்சத்துடனும் அழகாக அமைக்கப்பட்டு 1962 ம் ஆண்டு ஆனிமாதத்தில் வேதாகமவிதிப்படி சைவக்குருமார்களால் அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேகம் செய்யப்பட்டது.

1962 ம் வருடங்களில்….

அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேகத்தை தொடர்ந்து 40 தினங்கள் மண்டலாபிஷேகமும்நிகழ்த்தப்பட்டு பூர்த்தி தினத்தில் 1008 சங்குகளில் சங்காபிஷேகமும் வெகு சிறப்பாக நடைபெற்றன. விஷேடபூஜைகளுடன் மாலையில் அம்பிகை அழகிய பூந்தண்டிகையில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.    அம்பிகை மீது கொண்ட பக்திபெருக்கின் நிமிர்த்தம் திரு.துரைராசா குடும்பத்தினர் சங்காபிஷேகத்தைஇ நாம் 1990 ம் ஆண்டு இடம்பெயர்ந்து வரும்வரை மிகச்சிறப்பாக செய்து வந்தனர். தொடர்ந்தும் பல திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு , உள்வீதி சீமெந்து தரையாகவும், சுற்றுமதில், புதிய வசந்தமண்டபம், கே.வீ.துரைச்சாமிஎனும் தனி அடியவரால் கட்டப்பட்ட 3 தளங்களைக் கொண்ட இராஜகோபுரம் என்பனவும் அழகுற அமைக்கப்பட்டு அம்பிகையின் ஆலயம் ராஜகம்பீரத்துடன் மிளிர்ந்தது. அம்பிகையின் அருளாட்சியும் அவளது அருட்கடாட்சமும், அவளது புகழும் பெருகி ஊர்மக்கள் அனைவரும் மட்டுமன்றி யாழ் குடா நாட்டின் பல கிராம மக்களும் கூட வந்து அன்னையின் உற்சவங்களில் கலந்து அவளது அருளாசியைப் பெற்றுச் சென்றனர். இதன்பின்னர் ஊர்மக்கள் திருப்பணிச்சபை ஒன்றை நிறுவி திருப்பணிகளில் பக்தி சிரத்தையுடன் ஈடுபட்டனர். திரு. இலங்கைநாயகம் அவர்கள் திருப்பணிச்சபையின் ஆரம்ப கால தலைவராகவும் பின்வந்த காலங்களில் திரு.இராசாதலைவர் பதவியிலும் இருந்து பெருந்தொண்டுகள் செய்துவந்தனர். ஆலயத்தொண்டுகளில் மிகவும் ஈடுபட்டவரான சிவஸ்ரீ இ.நவமணி ஐயா தன்னைப்போன்று தனது வருங்கால சந்ததியினரான தனது புதல்வர், புதல்விகளையும் பக்திநெறி நிற்க வைத்து ஆசாரசீலர்களாக வாழவைத்தார். அவ்வாறே ஊர்மக்களும் பக்திநெறி நின்று அம்பிகைக்குத் தொண்டாற்ற வேண்டும் என்பதில் பிடிமானம் உள்ளரவாய் வாழ்ந்து வந்தார். நவமணி ஜயா அவரின் முழுமையான முயற்சியினால் அம்பிகையின் ஆலயம் தனிப்பொலிவுடன் மிளிர்ந்தது.

Photo
அம்பிகையின் இரத பவனி ஆரம்பம்..

அம்பாளுக்கு புதிய சித்திரத்தேர் ஒன்று அமைத்து அதில் அம்பாளை எழுந்தருளச்செய்து அவளது அருளாசியை பெற்றுவிடவேண்டுமென்பதில் எமது தந்தையாரும் அம்பிகை அடியவர்கள் பலரும் விரும்பினர். வினாசித்தம்பி என்பவரின் மூலமான அம்பிகையின் அருள்வாக்கிற்கு அமைய நவமணி ஐயாவின் வழிகாட்டலில் திரு.இரத்தினராசா,  திரு.வையாபுரி,   திரு.ஐயாத்துரை ,   போன்ற அம்பாள் மீது அளவு கடந்த பக்தியை உடையவர்களின் அயராத உழைப்பின் பலனாகவும் அம்பிகையின் அருட்கடாட்சத்தினாலும்  சித்திரத்தேர் அமைக்கும் பணி ஆரம்பமானது. இப்பணிதிரு.சு. வையாபுரி அவர்களின் பிரத்தியேக செலவிலும் முயற்சியிலும் ஆரம்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அங்கு ஏற்பட்ட அபிப்பிராய பேதங்கள் காரணமாகவும் ,நிதிப்பற்றாக்குறை காரணமாகவும் அப்பணி சற்று தாமதித்துச்செல்லவே திருப்பணிச்சபை ஒன்றை நிறுவி    அப்பணி அவ்வருடமே (1970ம் ஆண்டுகளில்) பூர்த்திசெய்யப்பட்டு சித்திரத்தேர் பவனி மிகவும் சிறப்பாகவும் பக்திபூர்வமாகவும் நிறைவேற்றப்பட்டது. சித்திரத் தேர் அமைக்கப்பட்டதன் பின் திருவிழாக்கள் 15 தினங்களாக அதிகரிக்கப்பட்டு பின் அடியவர்களின் வேண்டுகோளுக்கிணங்க 18 தினங்களாக அதிகரிக்கப்பட்டது.

இவ்வாறாக  வெகு சிறப்பாக 1990 ம் ஆண்டு வரை பூஜைகளும் திருவிழாக்களும் இடம்பெற்றன.

வருடாந்த அலங்காரத் திருவிழா உபயகாரர்கள்

1 ம் திருவிழா
வளலாய் பொதுமக்கள் (குமாரர் குடும்பம்)

2 ம் திருவிழா
திரு வைரமுத்து குடும்பம்

3 ம் திருவிழா
திரு முத்துலிங்கம் குடும்பம்

4 ம் திருவிழா 
திரு கே.வீ. துரைசாமி

5 ம் திருவிழா 
திரு சீராளபிள்ளை குடும்பம்

6 ம் திருவிழா 
திரு துரைஐயா குடும்பம்
திரு அருளானந்தம் குடும்பம்
திரு. சுந்தரம்பிள்ளை குடும்பம்

7 ம் திருவிழா
திரு. கிருஸ்ணபிள்ளை குடும்பம்

8 ம் திருவிழா 
திரு இராசா குடும்பம்

9 ம் திருவிழா 
திரு மார்க்கண்டு குடும்பம்

10 ம் திருவிழா 
திரு வைத்திலிங்கம் குடும்பம்

11 ம் திருவிழா 
திரு வையாபுரி குடும்பம்

12 ம் திருவிழா 
திரு கந்தசாமி குடும்பம்

13 ம் திருவிழா – சப்பறம்
திரு நாகேந்திரம் குடும்பம்
திரு. நாகமணி குடும்பம்
திரு சித்திவிநாயகம் குடும்பம்

14 ம் திருவிழா – இரதோற்சவம்
பொது உபயம்
இரவு திருவிழா – திரு தவரத்தினம் குடும்பம்

15 ம் திருவிழா – தீர்த்தோற்சவம்
காலை: திரு ஏரம்பமுர்த்தி குடும்பம்
மாலை: திரு வயிரவன் கிட்டிணன் குடும்பம்
இரவு: கே.வீ சோமசுந்தரம் குடும்பம்

16 ம் திருவிழா 
திரு செல்லச்சாமி குடும்பம்

17 ம் திருவிழா 
திரு விவேகானந்தன் குடும்பம்

18 ம் திருவிழா 
திரு ராசதுரை குடும்பம்

19 ம் திருவிழா – நிறைமணித் திருவிழா
திரு நவமணி ஐயர் குடும்பம்


ஏனைய வருடாந்த உற்சவங்களின் உபயகாரர்கள்

தைப்பூசம்
திரு நற்குணம் குடும்பம்

ஆடிப்பூரம் 
திரு செல்வரட்ணம் குடும்பம்

சிவராத்திரி
பொது உபயம்

மானம்பூத்திருவிழா
திரு கே.வீ. சோமசுந்தரம் குடும்பம்

திருவாதிரை 
திரு கே.வீ. சோமசுந்தரம் குடும்பம்

__________________________________________

நன்றி: www.mayilaikannaki.com
0 Comments



Leave a Reply.

    ஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்

    மயிலிட்டி

    பதிவுகள்

    November 2017
    March 2017
    October 2016
    July 2016
    July 2015
    February 2014
    June 2013

    முழுப்பதிவுகள்

    All

Powered by Create your own unique website with customizable templates.