
வலிகாமம் வடக்கில் மக்களை மீளக்குடியேற அனுமதிக்கக் கோரி இடம்பெயர்ந்த மக்களினால் ஆரம்பிக்கப்பட்ட ஐந்து நாள் உண்ணாவிரதப் போராட்டம் இன்று செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணியளவில் ஆரம்பமாகியது.
இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஈ. சரவணபவான், எஸ். சிறிதரன், வட மாகாண சபையின் தவிசாளர் சீ.வீ.க. சிவஞானம், கல்வி அமைச்சர் பி. குருகுலராசா மற்றும் உறுப்பினர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன், பா. கஜதீபன், திருமதி அனந்தி சசிதரன், க. பரஞ்சோதி மற்றும் பிரதேச சபைகளின் தலைவர்கள், உறுப்பினர்கள் இடம்பெயர்ந்த மக்கள் என ஐநூறுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டுள்ளார்கள்.
இதேவேளை காங்கேசன்துறை வீதி தெல்லிப்பளை துர்க்கையம்மன் ஆலயத்திற்கு அருகாமையில் இருந்து மாவிட்டபுரம் வரை பல இடங்களிலும் அதிகளவான பொலிஸார் கடமையில் ஈடுபட்டுள்ளார்கள்.
இதேபோன்று மாவிட்டபுரம் கீரிமலை வீதியிலும் பொலிஸார் வழமைக்கு மாறாக கடமையில் ஈடுபட்டுள்ளார்கள்.
ஆலய சுற்றாடலிலும் அதிக எண்ணிக்கையான பொலிஸார் கடமையில் ஈடுபட்டுள்ளார்கள்.
இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஈ. சரவணபவான், எஸ். சிறிதரன், வட மாகாண சபையின் தவிசாளர் சீ.வீ.க. சிவஞானம், கல்வி அமைச்சர் பி. குருகுலராசா மற்றும் உறுப்பினர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன், பா. கஜதீபன், திருமதி அனந்தி சசிதரன், க. பரஞ்சோதி மற்றும் பிரதேச சபைகளின் தலைவர்கள், உறுப்பினர்கள் இடம்பெயர்ந்த மக்கள் என ஐநூறுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டுள்ளார்கள்.
இதேவேளை காங்கேசன்துறை வீதி தெல்லிப்பளை துர்க்கையம்மன் ஆலயத்திற்கு அருகாமையில் இருந்து மாவிட்டபுரம் வரை பல இடங்களிலும் அதிகளவான பொலிஸார் கடமையில் ஈடுபட்டுள்ளார்கள்.
இதேபோன்று மாவிட்டபுரம் கீரிமலை வீதியிலும் பொலிஸார் வழமைக்கு மாறாக கடமையில் ஈடுபட்டுள்ளார்கள்.
ஆலய சுற்றாடலிலும் அதிக எண்ணிக்கையான பொலிஸார் கடமையில் ஈடுபட்டுள்ளார்கள்.
| காணொளி |
| வானொலி செய்தி |
| புகைப்படங்கள் |