அழுகை
அது பசிக்கு மட்டுமே !!
இதயத்தில் வெறும் துடிப்பு மட்டுமே ..
இதழ்களில் "அம்மா " என்ற வார்த்தை மட்டுமே ..!!
அழகான குழந்தை பருவம்
அப்படியே இருந்து விட கூடாதா !!!
மனதை இறுக்கும் வலிகளும் ,,
விழி நனைக்கும் ஏமாற்றங்களும் ..
உறவுகளால் சிக்கி கொண்ட முடிச்சுகளும்
இல்லாமலே ஓர் சொர்க்கம் !!!
ஜீவா உதயன்