
கிளிநொச்சியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் 49 பேருக்கு புலம்பெயர் உறவுகள் நிதியுதவி
[ புதன்கிழமை, 22 மே 2013, 04:10.04 PM GMT ]
மாற்றுத் திறனாளிகளிற்கான உதவு தொகை வழங்கும் நிகழ்வு தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட அலுவலகமான அறிவகத்தில் கடந்த 19ம் திகதி இடம்பெற்றுள்ளது.
புலம் பெயர் உறவான சிங்கவாகனம் ராசசுந்தரம் அவர்களது முயற்சியினால் காரைநகர் மற்றும் மயிலிட்டி பிரதேசங்களிலிருந்து புலம் பெயர்ந்து சென்று லண்டன் மற்றும் சுவிற்சர்லாந்து ஆகிய நாடுகளில் வசித்து வரும் 16 புலம் பெயர் உறவுகளினது ஒருங்கிணைந்த பங்களிப்பினால் கிளிநொச்சி மாவட்டத்தினைச் சேர்ந்த மாற்றுத் திறனாளிகள் 49 பேருக்கு தலா 8000/- வீதம் உதவு தொகையானது தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட அலுவலகமான அறிவகத்தில் வைத்து வழங்கப்பட்டது.
[ புதன்கிழமை, 22 மே 2013, 04:10.04 PM GMT ]
மாற்றுத் திறனாளிகளிற்கான உதவு தொகை வழங்கும் நிகழ்வு தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட அலுவலகமான அறிவகத்தில் கடந்த 19ம் திகதி இடம்பெற்றுள்ளது.
புலம் பெயர் உறவான சிங்கவாகனம் ராசசுந்தரம் அவர்களது முயற்சியினால் காரைநகர் மற்றும் மயிலிட்டி பிரதேசங்களிலிருந்து புலம் பெயர்ந்து சென்று லண்டன் மற்றும் சுவிற்சர்லாந்து ஆகிய நாடுகளில் வசித்து வரும் 16 புலம் பெயர் உறவுகளினது ஒருங்கிணைந்த பங்களிப்பினால் கிளிநொச்சி மாவட்டத்தினைச் சேர்ந்த மாற்றுத் திறனாளிகள் 49 பேருக்கு தலா 8000/- வீதம் உதவு தொகையானது தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட அலுவலகமான அறிவகத்தில் வைத்து வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் அவர்களுடன் நிதிப் பங்களிப்பு செய்த புலம் பெயர் உறவுகளின் சார்பில் வீ.செல்லக்கதிரமலை, பெ.ரஜனிகாந்த், சு.ரவேந்திரன் குடும்பத்தினர் ஆகியோரும், கிளிநொச்சி வர்த்தக சங்கத்தலைவர் தி.சிவமாரன், கரைச்சிப் பிரதேசசபை உப தவிசாளர் வ.நகுலேஸ்வரன், இளைஞரணித் தலைவர் சு.சுரேன், அக்கராயன் பிரதேச அமைப்பாளர் கு.சர்வானந்தா, மாற்றுத் வரோட் நிறுவனப் பணியாளர் திருமதி அ. விக்னேஸ்வரி மற்றும் அவருடனான சக பணியாளர்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் எனப் பலர் கலந்து கொண்டனர்.
“மாற்றுத் திறனாளிகளும் சமூகத்தின் ஓர் அங்கமே. சமூகத்தின் ஏனைய அங்கத்தவர்களைப் போன்று செயலாற்றும் திறன் அவர்களிற்கும் உண்டு. எனவே அவர்கள் தமது இயலும் தன்மையினைக் கொண்டு சாதிக்க முயல வேண்டும்” என்று நிகழ்விற்குத் தலைமை வகித்த வர்த்தக சங்கத் தலைவர் தி.சிவமாறன் தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தனது உரையில், மாற்று வலுவுள்ளோர்கள் தமது வலுவினைக் குறைத்து மதிப்பிடக்கூடாது எனவும், அவர்களுக்குக் கிடைக்கப் பெறும் உதவிகளினைப் பயன்மிக்க வகையில் பயன்படுத்த வேண்டும் எனவும் அதன்மூலம் இத்தகைய மனிதாபிமானப் பணிகள் வெற்றி பெறுவதனூடாக அனைத்து மாற்றுத் திறனாளிகளும் பயன்பெறும் வகையில் செயற்படுவதற்கு உதவ வேண்டும் என தெரிவித்தார்.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட கரைச்சிப் பிரதேசசபை உப தவிசாளர் திரு. வ.நகுலேஸ்வரன் அவர்களும் தமது கருத்தினை வழங்கியிருந்தார்.
இவ் உதவு தொகைக் கொடுப்பனவிற்கான நிதிப் பங்களிப்புச் செய்தோர் விபரம்:
1. செல்வி. ஆஷா இராசசுந்தரம்- லண்டன் (500 பவுண்டுகள்)
2. செல்வி. அனுஷா இராசசுந்தரம்- லண்டன் (50 பவுண்டுகள்)
3. செல்வி. இனிதா லோகேந்திரன்- லண்டன் (200 பவுண்டுகள்)
4. செல்வி. யோதிகா லோகேந்திரன்- லண்டன் (100 பவுண்டுகள்)
5. திரு. வெள்ளிமயில் ஜெகன்- லண்டன் (100 பவுண்டுகள்)
6. திரு. பாலசிங்கம் இதயம்- லண்டன் (100 பவுண்டுகள்)
7. திரு. செல்லமயில் மோகன்- லண்டன் (100 பவுண்டுகள்)
8. திரு. தவராசா லவன்- லண்டன் (100 பவுண்டுகள்)
9. திரு. தவராசா ரதன்- லண்டன் (100 பவுண்டுகள்)
10. திரு. இராசதுரை மதியழகன்- லண்டன் (100 பவுண்டுகள்)
11. திரு. தம்பிராசா தவக்குமரன்- லண்டன் (100 பவுண்டுகள்)
12. திரு. சுப்பிரமணியம் குவேந்திரம்- லண்டன் (100 பவுண்டுகள்)
13. செல்வி. சித்திரா யோகரட்ணம்- சுவிற்சர்லாந்து (50 பவுண்டுகள்)
14. திரு. பூபாலபிள்ளை சர்வானந்தா- லண்டன் (200 பவுண்டுகள்)
15. செல்வி. சர்மிளா இளமுருகன்- லண்டன் (150 பவுண்டுகள்)
16. செல்வி. விஜிதா நித்தியபாலன்- லண்டன் (100 பவுண்டுகள்)
நன்றி: http://www.tamilwin.com/
“மாற்றுத் திறனாளிகளும் சமூகத்தின் ஓர் அங்கமே. சமூகத்தின் ஏனைய அங்கத்தவர்களைப் போன்று செயலாற்றும் திறன் அவர்களிற்கும் உண்டு. எனவே அவர்கள் தமது இயலும் தன்மையினைக் கொண்டு சாதிக்க முயல வேண்டும்” என்று நிகழ்விற்குத் தலைமை வகித்த வர்த்தக சங்கத் தலைவர் தி.சிவமாறன் தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தனது உரையில், மாற்று வலுவுள்ளோர்கள் தமது வலுவினைக் குறைத்து மதிப்பிடக்கூடாது எனவும், அவர்களுக்குக் கிடைக்கப் பெறும் உதவிகளினைப் பயன்மிக்க வகையில் பயன்படுத்த வேண்டும் எனவும் அதன்மூலம் இத்தகைய மனிதாபிமானப் பணிகள் வெற்றி பெறுவதனூடாக அனைத்து மாற்றுத் திறனாளிகளும் பயன்பெறும் வகையில் செயற்படுவதற்கு உதவ வேண்டும் என தெரிவித்தார்.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட கரைச்சிப் பிரதேசசபை உப தவிசாளர் திரு. வ.நகுலேஸ்வரன் அவர்களும் தமது கருத்தினை வழங்கியிருந்தார்.
இவ் உதவு தொகைக் கொடுப்பனவிற்கான நிதிப் பங்களிப்புச் செய்தோர் விபரம்:
1. செல்வி. ஆஷா இராசசுந்தரம்- லண்டன் (500 பவுண்டுகள்)
2. செல்வி. அனுஷா இராசசுந்தரம்- லண்டன் (50 பவுண்டுகள்)
3. செல்வி. இனிதா லோகேந்திரன்- லண்டன் (200 பவுண்டுகள்)
4. செல்வி. யோதிகா லோகேந்திரன்- லண்டன் (100 பவுண்டுகள்)
5. திரு. வெள்ளிமயில் ஜெகன்- லண்டன் (100 பவுண்டுகள்)
6. திரு. பாலசிங்கம் இதயம்- லண்டன் (100 பவுண்டுகள்)
7. திரு. செல்லமயில் மோகன்- லண்டன் (100 பவுண்டுகள்)
8. திரு. தவராசா லவன்- லண்டன் (100 பவுண்டுகள்)
9. திரு. தவராசா ரதன்- லண்டன் (100 பவுண்டுகள்)
10. திரு. இராசதுரை மதியழகன்- லண்டன் (100 பவுண்டுகள்)
11. திரு. தம்பிராசா தவக்குமரன்- லண்டன் (100 பவுண்டுகள்)
12. திரு. சுப்பிரமணியம் குவேந்திரம்- லண்டன் (100 பவுண்டுகள்)
13. செல்வி. சித்திரா யோகரட்ணம்- சுவிற்சர்லாந்து (50 பவுண்டுகள்)
14. திரு. பூபாலபிள்ளை சர்வானந்தா- லண்டன் (200 பவுண்டுகள்)
15. செல்வி. சர்மிளா இளமுருகன்- லண்டன் (150 பவுண்டுகள்)
16. செல்வி. விஜிதா நித்தியபாலன்- லண்டன் (100 பவுண்டுகள்)
நன்றி: http://www.tamilwin.com/
உறவுகளே திரு. இராசசுந்தரம் (சிங்கவாகனம் - மயிலிட்டி) அவர்கள் ஏற்கனவே கடந்த மாதம் மாற்று வலுவுள்ளோர்களுக்கு நிதிப்பங்களிப்பை வழங்கியிருந்தார் என்பது அனைவரும் அறிந்ததே. அத்துடன் நிறுத்திக்கொள்ளாமல், இம்மாதம் தனது பிள்ளைகள், உறவினர்கள், நண்பர் ஆகியோரை ஊக்குவித்து அவர்களால் முடியுமான பங்களிப்பைப் பெற்று மீண்டும் அதேபோன்ற உதவியை வழங்கியிருக்கின்றார்.
"சிறுதுளி பெருவெள்ளம்" போன்று அவர் முயற்சி செய்து வெற்றியும் பெற்றுள்ளார். இவரைப்போல் நாமும் ஏன் முயற்சி செய்யக்கூடாது? சகோதரங்கள், உறவினர், நண்பர்கள் என இணைந்தால் எங்களாலும் முடியும். உறவுகளே நீங்கள் உதவி செய்ய விரும்பினால் நேரடியாகவே அங்குள்ளவர்களுடன் தொடர்பினை ஏற்படுத்திச் செய்யலாம். நல்ல சேவைகளை ஆற்றுவதற்கு முயற்சி மேற்கொள்ளுவோம். நன்றி திரு. இராசசுந்தரம் அவர்களுக்கு!