திரு. கிருஸ்ணபிள்ளை ஐயா அவர்களுடைய இந்தக் கார் தற்பொழுது தொண்டைமானாறு செல்வச் சந்நிதி கோவிலின் ஐயர் ஒருவரால் வாங்கப்பட்டு மீள்வேலைகள் செய்யப்படுகின்றது. எனது தந்தையார் திரு. அ. குணபாலசிங்கம் அவர்கள் ஒருமுறை ஐயரின் வீட்டுக்குச் சென்றபோது இந்தக் காரைக் கண்டிருக்கின்றார், ஆச்சரியத்துடன் அவருடன் வினவி பின்பு அங்கு போகும்போதெல்லாம் காரைப் பார்க்காமல் வரமாட்டார். நான் ஊருக்குச் சென்றிருந்தபோது செல்வச்சந்நிதி ஆலயத் தரிசனத்தின் பின் என்னை அழைத்துச் சென்று இந்தக் காரை நேரில் காட்டினார். எல்லையற்ற மகிழ்ச்சியுடன் “மயிலிட்டிச் சந்தியில் நின்று அனைவரையும் வரவேற்ற, அனைவராலும் விரும்பப்பட்ட இந்த வாகனத்தை எமது மக்களுடன் இணையம் மூலம் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதற்காக தோசை சுட்ட சொந்தக் காரரின் இந்தக் காரை கமெராவை எடுத்து ஆசைதீரச் சுட்டுக்கொண்டு வந்தேன். மேலும் படங்கள் இணைக்கப் பட்டுள்ளன!
அன்புடன்
அருண்குமார்.