வினாவெண்பா உமாபதி சிவாச்சாரியார் அவர்களால் அருளப்பட்ட சித்தாந்த அட்டகங்களில் ஒன்றாகும். நூலாசிரியர் தனது குருவிடம் சைவசித்தாந்த மெய்ப்பொருளியலில் தனக்கு ஏற்பட்ட ஐயங்களைத் தெளிந்து கொள்ள எழுப்பப்பட்ட வினாக்களாகப் பாடல்களை அமைத்துள்ளார். இவற்றிற்கான விடை இப்புத்தகத்தில் இல்லை. ஆனால் சித்தாந்தப் பயிற்சி உடையோர், அல்லது ஆசிரியரின் மற்ற புத்தகங்களான சிவப்பிரகாசம், திருவருட்பயன் ஆகியவற்றைப் பயின்று இதற்கான விடைகளை உணரமுடியும். இந்நூலில் வெண்பா அமைப்பில் 12 பாடல்கள் வினாக்களாகவும், 13 ஆவது பாடல் நூற்பயனாகவும் அமைக்கப்பட்டுள்ளது. இந்நூலின் முதல் மூன்று வினாக்கள் ஆணவமலத்தைப் பற்றியதாக அமைந்துள்ளன. தொடர்ந்து வரும் வினாக்கள் உயிர் எத்தகைய அறிவுகளைப் பெறுகின்றது, 36 தத்துவங்கள், உயிர் வினைப் பயனை நுகர்தல், சீவான்மா, பரமாத்மா, முத்திநிலை அடைதல் போன்ற விடையங்கள் பற்றிக் கேட்கப்படுகின்றன. இந்நூலில் வரும் சில பாடல்களைப் பார்ப்போம்.
சைவ சித்தாந்த சாத்திரங்கள் - 9. வினாவெண்பா
வினாவெண்பா உமாபதி சிவாச்சாரியார் அவர்களால் அருளப்பட்ட சித்தாந்த அட்டகங்களில் ஒன்றாகும். நூலாசிரியர் தனது குருவிடம் சைவசித்தாந்த மெய்ப்பொருளியலில் தனக்கு ஏற்பட்ட ஐயங்களைத் தெளிந்து கொள்ள எழுப்பப்பட்ட வினாக்களாகப் பாடல்களை அமைத்துள்ளார். இவற்றிற்கான விடை இப்புத்தகத்தில் இல்லை. ஆனால் சித்தாந்தப் பயிற்சி உடையோர், அல்லது ஆசிரியரின் மற்ற புத்தகங்களான சிவப்பிரகாசம், திருவருட்பயன் ஆகியவற்றைப் பயின்று இதற்கான விடைகளை உணரமுடியும். இந்நூலில் வெண்பா அமைப்பில் 12 பாடல்கள் வினாக்களாகவும், 13 ஆவது பாடல் நூற்பயனாகவும் அமைக்கப்பட்டுள்ளது. இந்நூலின் முதல் மூன்று வினாக்கள் ஆணவமலத்தைப் பற்றியதாக அமைந்துள்ளன. தொடர்ந்து வரும் வினாக்கள் உயிர் எத்தகைய அறிவுகளைப் பெறுகின்றது, 36 தத்துவங்கள், உயிர் வினைப் பயனை நுகர்தல், சீவான்மா, பரமாத்மா, முத்திநிலை அடைதல் போன்ற விடையங்கள் பற்றிக் கேட்கப்படுகின்றன. இந்நூலில் வரும் சில பாடல்களைப் பார்ப்போம்.
0 Comments
அபிராமிப்பட்டர் விழா
(சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி) பக்தர்களுக்காக தெய்வம் செயல்ப்படும் செயல்களை நிரூபித்த நிகழ்ச்சிகளில் ஒன்றே அபிராமிப்பட்டர் வாழ்வில் நடந்த இந்த நிகழ்வாகும். அதாவது அம்பிகையானவள் பதினெட்டு, பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த அபிராமிப்பட்டரின் வேண்டுகோளை ஏற்று செயற்பட்ட வரலாற்றை உலகிற்கு எடுத்துக்காட்டுவதற்காக இவ்விழா தை அமாவாசை அன்று சைவ ஆலயங்களில் முக்கியமாக அம்மன் ஆலயங்களில் கொண்டாடப்படுகின்றது. அபிராமி அந்தாதி பராசக்தியை வழிபட்ட அந்தணரான அபிராமிப்பட்டரால் பாடப்பட்டது. அந்தாதி (அந்தம் முடிவு, ஆதி துவக்கம்) என்பது ஒரு பாடல் முடியும் சொல்லிலிருந்து மறு பாடல் தொடங்குவதாகும்.
தைப்பொங்கல் (சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி)
“தை பிறந்தால் வழி பிறக்கும்” என்பது பழமொழி. தைப்பொங்கல் தமிழர்களால் சமயங்கள் கடந்து தமிழர்கள் வாழும் எல்லா நாடுகளிலும் கொண்டாடப்படும் ஒரு விழாவாகும். தைமாதம் சூரியன் மகரராசிக்குள் (மகரசங்கிராந்தி) பிரவேசிக்கும் நாள் தைப்பொங்கலாகும். அதாவது தட்சணாயன காலத்தில் விலகிச் சென்ற சூரியன் உத்தராயன காலத்தின் தொடக்கமாக மகரத்தில் பிரவேசிக்கும் நாள். இது முழுக்க ழுழுக்க உழவர் சம்பந்தப்பட்ட விழாவாக இருந்தாலும் எல்லோராலும் கொண்டாடப்படும் ஒரு விழாவாகும். சங்ககாலத்தில் இருந்தே இவ்விழா நடப்பதற்கான ஆதாரங்கள் உள்ளன. உழைக்கும் மக்கள் நாட்டில் மழைபெய்து பூமி நல்ல விளைச்சலைக் கொடுத்ததற்காச் சூரியனுக்கும் (இயற்கைக்கும்), பூமியை உழுவதற்குப் பயன்படுத்திய மாட்டிற்கும் (மற்ற உயிரினத்திற்கும்) நன்றி தெரிவிக்கும் முகமாக அறுவடைக்கு முன்பாக சிறிது நெல்லை அறுவடை செய்து அரிசியாக்கி சர்க்கரைப் பொங்கல் பொங்கிப், படைத்து வழிபட்ட விழாவே பொங்கல் திருநாளாகக் கொண்டாடப்படுகின்றது,
திருவெம்பாவை
(சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி) இந்துக்களால் மார்கழி மாத திருவாதிரையை இறுதி நாளாகக் கொண்டு பத்துத் தினங்கள் திருவெம்பாவை விரதம் கடைப்பிடிக்கப்படுகின்றது. முற்காலத்தில் இவ்விரதத்தை கன்னிப் பெண்களே கூடுதலாகக் கடைப் பிடிப்பர் இந்த நாட்களில் கன்னிப் பெண்கள் அதிகாலையில் எழுந்து தம் தோழியரையும் அழைத்துக் கொண்டு நீர் நிலைகளுக்குச் சென்று நீராடி அருகில் உள்ள சிவன் கோயிலுக்கு சென்று இறைவனைத் துதித்து வழிபடுவர். இந்நிகழ்ச்சியை வைத்தே மாணிக்கவாசகப் பெருமான் திருவெம்பாவைப் பாடல்களைப் பாடினார். இன்றைய நாட்களில் பொதுவாக எல்லாச் சைவ ஆலயங்களிலும் அதிகாலையில் திருவெம்பாவைப் பூசைகள் நடத்தப்பட்டு கீழே உள்ள திருவெம்பாவைப் பாடல்கள் பாடப்படுகின்றது. பத்தாம்நாள் திருவாதிரை அன்று சிவன் ஆலயங்களில் “ஆருத்திரா தரிசனம்” இடம்பெறும். இந்தப் பத்து நாட்களும் இலங்கையில் சைவசமயத்தவர்கள் வாழும் ஊர்களில் சிவ தொண்டர்கள் அதிகாலை எழுந்து வீதி வீதியாகச் சென்று சங்கு ஊதி, சேமக்கலம் அடித்து திருவெம்பாவைப் பாடல், திருப்பள்ளி எழுற்சிப் பாடல் மற்றும் திருமுறைப் பாடல்களைப் பாடி ஊர் மக்களை நித்திரையால் எழுப்பி ஆலயத்திற்கு அதிகாலைப் பூசைக்கு போவதற்கு ஊக்கப்படுத்துவார்கள்.
பிள்ளையார் பெருங்கதை
(சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி) பிள்ளையார் பெருங்கதை சைவசமய மக்களால் கார்த்திகை மாத தேய்பிறைப் பிரதமை முதல் மார்கழி மாத வளர்பிறைச் சஸ்டித் திதிவரையுள்ள இருபத்தொரு நாட்கள் அனுஸ்டிக்கப்படும் விரதமாகும். இது விநாயக சஸ்டி விரதம், பிள்ளையார்கதை விரதம் எனவும் அழைக்கப்படும். இலங்கையில் உள்ள சைவ ஆலயங்களில் முக்கியமாக பிள்ளையார் ஆலயங்களில் இந்த இருபத்தொருநாட்களும் வரதபண்டிதரின் பிள்ளையார் கதை படிக்கப்படும் வழக்கம் பலகாலமாக பேணப்பட்டு வருகின்றது.
சைவ சித்தாந்தம் – ( பகுதி – 33 )
(நாகேந்திரம் கருணாநிதி) சைவ சித்தாந்த சாத்திரங்கள் - 8. திருவருட்பயன். திருவருட்பயன். உமாபதி சிவாச்சாரியார் அவர்களால் அருளப்பட்ட சித்தாந்த அட்டகங்களில் ஒன்றாகும். திருவருட்பயன் என்பது திருவருளின் பயனை விளக்கும் நூல் என விரியும். இந்நூல் குறள் வெண்பா அமைப்பில் 10 அதிகாரங்களைக் கொண்டது. ஒவ்வொரு அதிகாரமும் 10 குறட்பாக்களைக் கொண்டது. முதல் 5 அதிகாரங்களும் திருவருளை கொடுக்கும் பதியின் தன்மையையும், திருவருளைப் பெறும் உயிரின் தன்மையையும், திருவருளால் நீக்கப்படும் மலத்தின் தன்மையையும், திருவருளின் தன்மையையும், குருவின் பெருமையையும் விளக்கும். மற்றய 5 அதிகாரங்களும் ஆன்மா அறிவைப் பெறும் முறைமையினையும், மலம் நீங்கும் முறைமையினையும், அதனால் கிடைக்கும் பேரானந்தத்தையும், ஐந்தெழுத்தின் பெருமையினையும், சீவன்முத்தரின் தன்மையையும் கூறுவனவாகும். இந்நூலில் வரும் சில பாடல்களைப் பார்ப்போம்
சைவ சித்தாந்தம் – ( பகுதி – 32 )
(நாகேந்திரம் கருணாநிதி) சைவ சித்தாந்த சாத்திரங்கள் - 7. சிவப்பிரகாசம் சிவப்பிரகாசம். கி.பி.14 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தில்லை வாழ் அந்தணர்களின் பரம்பரையில் (தில்லை நடராஜருக்குப் பூசை செய்பவர்) வந்தவரும், புறச்சந்தான குரவரில் (4 நான்காவது) ஒருவரும், சித்தாந்த சாத்திரங்கள் 14 இல் சித்தாந்த அட்டகம் என்று போற்றப்படும் 8 நூல்களை அருளியவரும், புறச்சந்தான குரவரில் ஒருவரான (3 ஆவது) மறை ஞான சம்பந்தரின் மாணவருமான கொற்றவன் குடி உமாபதி தேவ நாயனார் (உமாபதி சிவாச்சாரியார்) அவர்களால் அருளப்பட்ட சித்தாந்த அட்டகங்களில் ஒன்றாகும். தில்லை மூவாயிரவருள் இவர் ஒருவரே சித்தாந்த ஞானத்தை உலகோர்க்கு விளக்கியவர் ஆவார். இந்நூல் சிவஞானபோதத்தின் சார்பு நூலாகவும், சிவஞானசித்தியாரின் வழி நூலாகவும் காணப்படுகின்றது. இந்நூல் முதல் 50 உம் பொது அதிகாரமாகவும், பின் 50 உம் உண்மையதிகாரமாகவும் கொண்ட 100 விருத்தப்பாடல்களைக் கொண்டு முப்பொருளைப் பற்றிச் சுருக்கமாக விளக்குகிறது. பொது அதிகாரத்தில் பாயிரப் பாடல்கள், பதி இலக்கணம், பசு இலக்கணம், பாச இலக்கணம், அவத்தை இலக்கணம் பற்றியும், உண்மை அதிகாரத்தில் ஆன்ம இலக்கணம், ஐந்து அவத்தை இலக்கணம், ஆன்மா உணரும் தன்மை, ஞான வாய்மை, ஞானத்தால் வரும் பயன், புனிதன் நாமம், அணைந்தோர் தன்மை பற்றியும் கூறப்பட்டுள்ளது. இந்நூலில் வரும் சில பாடல்களைப் பார்ப்போம்.
கந்த சஷ்டி
(சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி) கந்த சஷ்டி அஞ்ஞான இருளை அகற்றி மெய்ஞானமாகிய பரம்பொருளை அடைவதற்காக சைவ சமயத்தவர்களால் அனுஷ்டிக்கப்படும் முருகனுக்குரிய முக்கிய விரதங்களில் ஒன்றாகும். ஐப்பசி மாத அமாவாசையின் பின் வளர்பிறை பிரதமை முதல் ஆரம்பித்து சஷ்டி திதி வரையான ஆறு தினங்களுக்கு இவ் விரதம் அனுஸ்டிக்கப்படுகின்றது. ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலங்களை மட்டுமின்றி காமம், கோபம், பேராசை, செருக்கு, மயக்கம் தற்பெருமை ஆகியவைகளை அழித்து நற்குணங்களை நிலைநாட்டுவதால் “ஒப்பரும் விரதம்” என கந்தபுராணத்தில் கூறப்பட்டுள்ளது. உண்ணாநோன்பு உடலுக்கு மட்டுமன்றி ஆன்மாவுக்கும் நல்லது. இதனாலேயே எல்லாச் சமயங்களிலும் உண்ணாநோன்பு கடைப்பிடிக்கப் படுகின்றது.
தீபாவளி
(சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி) தீபாவளி இந்துசமயத்தவரால் கொண்டாடப்படும் பட்டிகைகளில் ஒன்றாகும். தீபம் என்றால் விளக்கு, ஆவளி என்றால் வரிசை. வீடுகளில் உள்ள இருளை அகற்ற வரிசையாக விளக்கேற்றுதல் என்பது பொருளாகும். எமது மனதில் உள்ள இருளாகிய அக்கங்காரம், கோபம், பொறாமை போன்ற தீய எண்ணங்களை எரித்துவிட்டு அன்பு, கனிவு, நல்ல சிந்தனை போன்ற நல்ல எண்ணங்களாகிய ஒளியை ஏற்றுதல் என்பது இதன் பொருளாகும். தீபாவளியன்று ஏற்றும் தீபம் “யமனை விரட்டும் யமதீபம்” என்று வாமண புராணம் கூறுகிறது.
கேதாரகௌரி விரதம் என்பது சிவபெருமானுக்குரிய விரதங்களுள் ஒன்றாகும். புரட்டாதி மாதம் சுக்கில பட்ச தசமியில் இவ்விரதம் அனுஸ்டிக்கப்படுகின்றது. இவ்விரதம் இருபத்தி ஒருநாள் அனுஸ்டிக்கப்படுகிறது. கேதாரம் என்பது இமயமலைசாரலில் உள்ள வயல் பகுதியான ஒரு சிவ ஸ்தலமாகும். இங்கு சுயம்பு லிங்கமாக தோன்றிய சிவனை (கேதாரேஸ்வரரை) பார்வதி தேவி (கௌரி அம்பாள்) இருபத்தி ஒருநாள் விரதமிருந்து வழிபட்டு அர்த்தநாரியாகவும், அர்த்தநாரீசுவராகவும் இருவரும் ஒன்றுபட்ட தினமே கேதாரகௌரி விரத இறுதி நாளாகும். இவ்விரதம் கேதாரேஸ்வரி விரதம் எனவும் அழைக்கப்படுகின்றது. பொதுவாக கன்னிப் பெண்கள் நல்ல கணவரை வேண்டியும், சுமங்கலிகள் கணவருடன் இணைபிரியாது இருக்கவும் இவ்விரதத்தை அனுஸ்டிப்பர். ஆண்களும் இவ்விரதத்தை அனுஸ்டிக்கலாம். பார்வதி தேவியே இவ்விரதத்தை அனுஸ்டித்து சிவனின் இடப்பாகத்தைப் பெற்றபடியால் சிவ விரதங்களில் இது முதன்மை பெறுகின்றது. இவ்விரதம் பற்றி புராணத்தில் பின்வரும் கதை கூறப்பட்டுள்ளது
சகலகலாவல்லி மாலை
Sakala Kalā valli Mālai Saint Kumaraguruparar was born in 1625 AD. As a child he didn’t start talking until the age of five. Worried parents took him to the Murugan Temple inThiruchchenthUr. He was graced by Lord Muruga there and immediately started singing in praise of Him. This very first song is called Kanthar Kali VeNpa. There after he travelled to many places and embraced Saiva ascetic order - sanyAsa. Finally he came to Benares (KAsi) which was already destroyed by the Muslim rulers. He wanted to re-establish the temple in KEtar-gutt, KAsi and to establish a Mutt for the cosmic truth of Saiva Siddhanta there . Here Saint Kumara Guru Parar addressed to Saraswathi, the goddess of learning and composed a great prayer called Sakala-kala-valli-maalai in praise of her. He became fluent in Hindi language to converse with the then Muslim Prince and persuaded him to grant the land and permission for his mission. TheKEtarnath Temple re-established by him and the KAsi Mutt established by him still remain to speak his glories. The Head office of KAsi Mutt was transferred to ThirupananthaaL in Tamil Nadu later on under the Guru lineage from him is running these establishments today.
சைவ சித்தாந்தம் – ( பகுதி – 31 )
(நாகேந்திரம் கருணாநிதி) சைவ சித்தாந்த சாத்திரங்கள் - 6. உண்மை விளக்கம் உண்மை விளக்கம். கி.பி.13 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மெய்கண்ட தேவநாயனாரின் மாணவரான திருவதிகை மனவாசகம் கடந்தார் அவர்களால் அருளப்பட்டது. இந்நூல் சைவசித்தாந்த சாத்திர நூல்களில் அரிச்சுவடியாகப் பேணப்படுகின்றது. இந்நூலுக்கு சைவசித்தாந்த சக்கிரகம், மெய்கண்ட சந்தான அனுபவத் திரட்டு என்ற பெயர்களும் உண்டு. இந்நூல் சைவசமயத்தவர் அறிய வேண்டிய உண்மைப் பொருட்களை இரத்தினச் சுருக்கமாக எடுத்துக் கூறுகிறது. இதனால் இந்நூலுக்கு உண்மை விளக்கம் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்நூலில் பாடல்கள் வினா விடை அமைப்பில் உள்ளன. இந்நூல் 54 பாடல்களைக் கொண்டது.
சைவ சித்தாந்தம் – ( பகுதி – 30)
(நாகேந்திரம் கருணாநிதி) சைவ சித்தாந்த சாத்திரங்கள் - 5. இருபா இருபஃது இருபா இருபஃது கி.பி.14 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த திருக்கயிலாய பரம்பரையில் வந்த புறச்சந்தான குரவரில் (2 ஆவது) ஒருவரும், சகலாகம பண்டிதரும், மெய்கண்ட தேவநாயனாரின் மாணவருமான திருத்துறையூர் அருணந்தி சிவாச்சாரியார் அவர்களால் அருளப்பட்டது. அருணந்தி சிவாச்சாரியார் மெய்கண்ட தேவநாயனாரால் சிவஞானம் கைவரப்பெற்று அவரால் அருணந்தி சிவாச்சாரியார் என்ற திருநாமம் பெற்றவர். அருணந்தி சிவாச்சாரியாரால் எழுதப்பட்ட “சிவஞான சித்தியார்” இற்கு முன் அவரால் இந்நூல் பாடப் பெற்றதாகக் கூறப்படுகின்றது. நூலாசிரியர் தமக்கு ஏற்பட்ட ஐயங்களைத் தன் ஞானாசிரியராகிய மெய்கண்ட தேவரிடம் வினாவாகக் கேட்டு அறிவதுபோல் பாடல்கள் அமைந்துள்ளன. பாடல்களிலுள்ள வினாக்களுக்கு நேரடியான விடை கூறாமல் குறிப்பாகக் கூறப்பட்டுள்ளது. சில பாடல்கள் நீண்ட பாடல்களாகவும் அமைந்துள்ளன. இந்நூல் 10 வெண்பாக்களையும், 10 ஆசிரியப்பாக்களையும் கொண்டது. இந்நூலில் உள்ள சில பாடல்களைப் பார்ப்போம்.
சைவ சித்தாந்தம் – ( பகுதி – 29 )
(நாகேந்திரம் கருணாநிதி) சைவ சித்தாந்த சாத்திரங்கள் - 4. சிவஞான சித்தியார் சிவஞான சித்தியார் கி.பி.14 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த திருக்கயிலாய பரம்பரையில் வந்த புறச்சந்தான குரவரில் (2 ஆவது) ஒருவரும், சகலாகம பண்டிதரும், மெய்கண்ட தேவநாயனாரின் மாணவருமான திருத்துறையூர் அருணந்தி சிவாச்சாரியார் அவர்களால் அருளப்பட்டது. அருணந்தி சிவாச்சாரியார் மெய்கண்ட தேவநாயனாரால் சிவஞானம் கைவரப்பெற்று அவரால் அருணந்தி சிவாச்சாரியார் என்ற திருநாமம் பெற்றவர். சைவசித்தாந்த சாத்திரங்கள் பதினான்கில் விரிவானதும், சிவஞான போதத்திற்கு அடுத்துப் போற்றப் பெறுவதும் சிவஞான சித்தியார் ஆகும். இந்நூல் சிவஞான போதத்திற்கு உரை நூல் (வழி நூல்) ஆகும். இந்நூல் முதற் பாகம் பரபக்கம் எனவும் இரண்டாவது பாகம் சுபக்கம் எனவும் இரு பகுதிகளைக் கொண்டுள்ளது. பரபக்கம் 301 பாடல்களைக் கொண்டது. இப்பகுதியில் இந்தியச் சமயங்களைச் சுட்டிக்காட்டி அவற்றின் பொருந்தாத கொள்கைகளை எடுத்துரைத்துச் சைவசித்தாந்தக் கொள்கையை நிலை நாட்டுகிறது. சுபக்கம் 328 பாடல்களைக் கொண்டுள்ளது. இப்பகுதி சிவஞான போதத்தின் பன்னிரண்டு சூத்திரத்திற்கு விரிவுரையாக அமைந்துள்ளது. இந்நூல் பிற சாத்திரநூல்களில் இல்லாத அளவை இலக்கணத்தை வரையறுத்துக் காட்டுவதுடன் தீட்சை முறைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றது. இந்நூலின் சுபக்கப் பகுதியில்ச் சில பாடல்களைப் பார்ப்போம்
சைவ சித்தாந்தம் – ( பகுதி – 28 )
(நாகேந்திரம் கருணாநிதி) சைவ சித்தாந்த சாத்திரங்கள் 3. சிவஞான போதம் சிவஞான போதம். கி.பி.13 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த திருக்கயிலாய பரம்பரையில் வந்த புறச்சந்தான குரவர் நால்வரில் (1 முதலாவது) ஒருவரான பெண்ணாகடம் மெய்கண்ட தேவநாயனார் (மெய்கண்ட தேவர்) அவர்களால் அருளப்பட்டது. இவர் பரஞ்சோதி முனிவரால் ஞான உபதேசம் பெற்று, அவரால் மெய்கண்ட தேவர் என்ற திருநாமமும் இடப்பெற்று குழந்தைப் பருவத்திலேயே இறையருள் ஞானம் பெற்றவராவார். இந்நூல் சைவ சித்தாந்த சாத்திரங்களில் மணி முடியாய் அதாவது முதல் நிலையில் விளங்கும் நூலாகும். இந்நூலுக்குப் பின் வந்த பல நூல்களுக்கு இந்நூல் அடிப்படைக் கருவூலமாக அமைந்தது. இந்நூல் தட்சணாமூர்த்தியின் திருக்கரத்தில் இருக்கும் பாக்கியம் பெற்ற நூலாகும். இந்நூல் பன்னிரெண்டு சூத்திரங்களைக் கொண்டது. ஒவ்வொரு சூத்திரத்துடனும் அச்சூத்திரத்தில்க் கூறப்பட்ட விடையத்தை விரிவாகக் கூறுவதற்காக அதிகரணங்கள் கூறப்பட்டு, அதற்கு உதாரணங்களும் கூறப்பட்டுள்ளன.
சைவ சித்தாந்தம் – ( பகுதி – 27 )
(நாகேந்திரம் கருணாநிதி) சைவ சித்தாந்த சாத்திரங்கள் - 2. திருக்களிற்றுப் படியார் சைவ சித்தாந்த சாத்திரத்தில் இரண்டாவது நூல் திருக்களிற்றுப் படியார். இந்நூல் கி.பி.12 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த திருக்கடவூர் உய்யவந்த தேவநாயனார் அவர்களால் அருளப்பட்டது. இவர் திருவியலூர் உய்யவந்த தேவநாயநாரின் மாணவராவார். இந்நூல் திருவுந்தியாருக்கு விளக்க நூலாக விளங்குகிறது. இந்நூல் 100 வெண்பாக்களைக் கொண்டது. இந்நூல் திருவுந்தியார் எழுதப்பட்டு 50 ஆண்டுகளின் பின் எழுதப்பட்டது. இன் நூலின் அரங்கேற்றத்தின் போது நூலைத் தில்லை நடராசப்பெருமானின் பொன்னம்பலத்தின் முன்னிருக்கும் பஞ்சாச்சரப் படிக்கட்டில் (ஐந்துபடிகள்) வைத்தனர். அப்போது படிகளின் இருபுறமும் கல்லால் வடிக்கப்பெற்றிருந்த யானைகளில் ஒன்று உயிர்பெற்று நூலேடுகளை எடுத்து நடராசப்பெருமானின் திருவடிகளில் வைத்தது. இதனால் இந்நூலுக்குத் திருக்களிற்றுப் படியார் எனப் பெயரிடப்பட்டது. திருவுந்தியாரையும் திருக்களிற்றுப் படியாரையும் இரட்டைச் சாத்திரங்கள் எனக் கூறுவதுண்டு. இந்நூலில் உள்ள சில பாடல்களைப் பார்ப்போம்.
சைவ சித்தாந்தம் – ( பகுதி – 26 )
(நாகேந்திரம் கருணாநிதி) சைவ சித்தாந்த சாத்திரங்கள் - 1. திருவுந்தியார் சைவ சித்தாந்த சாத்திரங்கள் பதினான்கையும் தனித்தனியாகப் பார்ப்போமானால் முதலாவதாக திருவுந்தியார். இந்நூல் கி.பி.12 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த திருவியலூர் உய்யவந்த தேவநாயனார் அவர்களால் அருளப்பட்ட முதலாவது சைவ சித்தாந்த சாத்திர நூலாகும். ஆசிரியர் இந்நூலை தம்மிடம் உபதேசம் பெற்ற ஆளுடைய தேவர் என்பவருக்குச் சைவசித்தாந்தக் கருத்துக்களை விளக்க எழுதியதாகக் கூறுவர். இந்நூல் திருவாசகத்தில் இடம்பெற்ற திருவுந்தியாரைப் போலவே பாடப்பட்டுள்ளது. அதாவது பெண்கள் விளையாட்டு அமைப்பில் கடவுள் கொள்கையை வரையறுத்துக் கூறுகின்றது. இந்நூல் நாற்பத்தைந்து பாடல்களைக் கொண்டது. இந்நூல் ஆன்மாக்களை உலகப் பற்றிலிருந்து கடைத்தேற்றும் திருவருள் நூலாகும். அதாவது வீட்டு நெறியின் சிறப்பினையும், அதனை அடைந்தோர் தன்மையினையும் சிறப்புறக் கூறுகின்றது. உரை ஆசிரியர் இந்நூலை ஞானவெற்றியைத் தரும் நூல் எனக் கூறியுள்ளார். பாடல்கள் இல.1 முதல் 6 வரை உபதேசமாகவும், 7 முதல் 11 வரை சாதனம் பற்றியும்,12 முதல் 16 வரை மீதானம் என்பதன் விளக்கத்தையும் கூறுகின்றது. இந்நூலிலுள்ள சில பாடல்களைப் பார்ப்போம்.
இலண்டனில் கடந்த காலங்களில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் தவறுகளை அடுத்தவருடமும் தொடராமல் இருப்பதற்காக இக்கட்டுரையை சமர்ப்பிக்கின்றேன்.
எமது முன்னோர்களால் எம்மிடம் தரப்பட்ட எமது சைவசமயக் கொள்கைகளையும், வழிபாட்டு முறைகளையும் வரும்காலத்தில் எவ்வித ஐயப்பாடுமின்றி இன்றைய இளம் சந்ததியினர் கொண்டு செல்வதற்கான வழிமுறைகளை நாம் ஏற்படுத்திக் கொடுப்பது எமது முக்கி கடமையாகும். இவ்விடையத்தில் அண்மைக்காலத்தில் எமது சமய விழாக்கள், கொண்டாட்டங்கள் இரு வேறு வேறு நாட்களில் நடப்பது எமது கடமையை நாம் சரிவரச் செய்கிறோமா என்ற கேள்வியை ஏற்படுத்தியுள்ளது.
சைவ சித்தாந்தம் – ( பகுதி – 25 )
(நாகேந்திரம் கருணாநிதி) 3. பாசம் (மலம், தளை) கன்மம் கன்மம் இரு வகைப்படும். 1. மூல கன்மம். இது ஆன்மா உடல் எடுப்பதற்கு முன்பு ஆன்மாவுடன் இருப்பது. இதை சஞ்சித வினை (தொல் வினை) எனக் கூறப்படும். ஆன்மா உடல் எடுக்கும் போது இறைவனால் இதில் ஒரு பகுதியை இன்ப துன்பங்களை அனுபவிப்பதற்காக வழங்கும் போது பிராரத்த வினை (ஊழ் வினை) எனக் கூறப்படும். இதையே நாம் விதி என்கிறோம்.
ஒற்றுமை
(சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி) “ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு , ஒற்றுமை நீங்கில் அனைவருக்கும் தாழ்வு”, ஒற்றுமை இல்லை எனில் வீடும், நாடும் சீரழிந்துவிடும். இதை இன்று நாம் எமது அன்றாட வாழ்வில் பார்த்துக்கொண்டிருக்கின்றோம். இன்று மனிதர்கள் மதத்தால், மொழியால், இனத்தால், நிறத்தால், அரசியலால், பிளவுபட்டுத் தங்களுக்குள் மனம் குறுகி ஒருவரை ஒருவர் பகைத்தும், சண்டையிட்டும் கொள்கின்றனர். இவ்விடையம் கணவன், மனைவி உட்பட குடும்ப உறவுகளுக்குள்ளும், ஊருக்குள்ளும், ஊர்களுக்கிடையிலும், நாட்டுக்குள்ளும், நாடுகளுக்கிடையிலும் சர்வ சாதாரணமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இதைத் தவிர்க்குமாறுதான் எமது முன்னோர்கள் மேற்படி பழமொழியை மட்டுமல்லாமல் “கூடி வாழ்ந்தால் கோடி நன்மை”, “ஒருகை தட்டினால் ஓசை வராது” , “இரண்டுகை தட்டினால்த்தான் ஓசை வரும்”, “தனிமரம் தோப்பாகாது”, “நீரடித்து நீர் விலகுமா” போன்ற பழமொழிகளையும் எங்களுக்குச் சொல்லிச் சென்றுள்ளனர்.
சைவ சித்தாந்தம் – ( பகுதி – 24 )
(நாகேந்திரம் கருணாநிதி) 3. பாசம் (மலம், தளை) ஆணவ மலம் உயிர்களுக்கு அறியாமையைச் செய்யும், யராலும் படைக்கப்படாத ஒரு பொருள் ஆணவ மலம் எனச் சைவசித்தாந்தம் கூறுகிறது. இவ்வுண்மையை இருபா இருபஹது பாடல் எண் 4 (25) இல் “ . . . . . . . . .எம்மைவந்து அணையத் தானோ மாட்டாது யானோ செய்கிலன் நீயோ செய்யாய் நின்மலன் ஆயிட்டு” எனக் கூறுகிறது. உண்மை விளக்கம் பாடல் எண் 22 இல் ஆறாறு தத்துவமும் சொன்னோம் அடைவாக மாறா மலமிரண்டும் வாசொல்லக் - கூறில் அறியாமை ஆணவம்நீ யானசுக துக்கம் குறியா வினையென்று கொள்.”
சைவ சித்தாந்தம் – ( பகுதி – 23 )
(நாகேந்திரம் கருணாநிதி) 3. பாசம் (மலம், தளை) பாசம் காரியரூபமாய் நிற்றல் பொதுஇயல்பாகவும், காரணரூபமாய் நிற்றல் சிறப்பியல்பாகவும் காணப்படுகின்றது. பாசம் ஆணவம், கன்மம், மாயை என மூன்றாகப் பிரிக்கப்பட்டுள்ளது. திருஞானசம்பந்தப் பெருமான் “விளையாததோர் பரிசில் வரு பசு பாச வேதனை ஒண் தளையாயின தவிரவ்வருள் தலைவனது சார்பாம்” எனவும் மாணிக்கவாசகப் பெருமான் திருவாசகத்தில் “பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கும் ஆரியனே” எனவும் பாசம் உயிரைப் பொருந்தி நிற்கும் பற்று எனக் கூறுகின்றனர்.
சைவ சித்தாந்தம் – ( பகுதி – 22 )
(நாகேந்திரம் கருணாநிதி) 2. பசு ( உயிர், ஆன்மா ) ஆன்மா கருவிகரணங்களோடு நிற்றல் பொது இயல்பாகும். கருவிகரணங்களிலிருந்து நீங்கி உடனாய் நிற்கும் சிவமாக நிற்றல்சிறப்பியல்பாகும். உயிர்கள் அநாதி, என்றும் உள்ளவை. இறைவனால் உண்டாக்கப்படாதவை எனச் சைவசித்தாந்தம் கூறுகிறது. கிறீஸ்துவ, ஸ்லாம் தவிர்ந்த இந்தியாவிலுள்ள மற்ற எல்லா மதங்களும் இதை ஏற்றுக்கொள்கின்றன. உயிர் ஒரு தனிப்பொருள் என சைவசித்தாந்தம் பின் வரும் காரணங்களைக் காட்டி விளக்குகிறது. |
என்னைப்பற்றிநாகேந்திரம் கருணாநிதி பதிவுகள்
April 2024
முழுப்பதிவுகள் |