வினாவெண்பா உமாபதி சிவாச்சாரியார் அவர்களால் அருளப்பட்ட சித்தாந்த அட்டகங்களில் ஒன்றாகும். நூலாசிரியர் தனது குருவிடம் சைவசித்தாந்த மெய்ப்பொருளியலில் தனக்கு ஏற்பட்ட ஐயங்களைத் தெளிந்து கொள்ள எழுப்பப்பட்ட வினாக்களாகப் பாடல்களை அமைத்துள்ளார். இவற்றிற்கான விடை இப்புத்தகத்தில் இல்லை. ஆனால் சித்தாந்தப் பயிற்சி உடையோர், அல்லது ஆசிரியரின் மற்ற புத்தகங்களான சிவப்பிரகாசம், திருவருட்பயன் ஆகியவற்றைப் பயின்று இதற்கான விடைகளை உணரமுடியும். இந்நூலில் வெண்பா அமைப்பில் 12 பாடல்கள் வினாக்களாகவும், 13 ஆவது பாடல் நூற்பயனாகவும் அமைக்கப்பட்டுள்ளது. இந்நூலின் முதல் மூன்று வினாக்கள் ஆணவமலத்தைப் பற்றியதாக அமைந்துள்ளன. தொடர்ந்து வரும் வினாக்கள் உயிர் எத்தகைய அறிவுகளைப் பெறுகின்றது, 36 தத்துவங்கள், உயிர் வினைப் பயனை நுகர்தல், சீவான்மா, பரமாத்மா, முத்திநிலை அடைதல் போன்ற விடையங்கள் பற்றிக் கேட்கப்படுகின்றன. இந்நூலில் வரும் சில பாடல்களைப் பார்ப்போம்.
சைவ சித்தாந்த சாத்திரங்கள் - 9. வினாவெண்பா
வினாவெண்பா உமாபதி சிவாச்சாரியார் அவர்களால் அருளப்பட்ட சித்தாந்த அட்டகங்களில் ஒன்றாகும். நூலாசிரியர் தனது குருவிடம் சைவசித்தாந்த மெய்ப்பொருளியலில் தனக்கு ஏற்பட்ட ஐயங்களைத் தெளிந்து கொள்ள எழுப்பப்பட்ட வினாக்களாகப் பாடல்களை அமைத்துள்ளார். இவற்றிற்கான விடை இப்புத்தகத்தில் இல்லை. ஆனால் சித்தாந்தப் பயிற்சி உடையோர், அல்லது ஆசிரியரின் மற்ற புத்தகங்களான சிவப்பிரகாசம், திருவருட்பயன் ஆகியவற்றைப் பயின்று இதற்கான விடைகளை உணரமுடியும். இந்நூலில் வெண்பா அமைப்பில் 12 பாடல்கள் வினாக்களாகவும், 13 ஆவது பாடல் நூற்பயனாகவும் அமைக்கப்பட்டுள்ளது. இந்நூலின் முதல் மூன்று வினாக்கள் ஆணவமலத்தைப் பற்றியதாக அமைந்துள்ளன. தொடர்ந்து வரும் வினாக்கள் உயிர் எத்தகைய அறிவுகளைப் பெறுகின்றது, 36 தத்துவங்கள், உயிர் வினைப் பயனை நுகர்தல், சீவான்மா, பரமாத்மா, முத்திநிலை அடைதல் போன்ற விடையங்கள் பற்றிக் கேட்கப்படுகின்றன. இந்நூலில் வரும் சில பாடல்களைப் பார்ப்போம்.
0 Comments
அபிராமிப்பட்டர் விழா
(சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி) பக்தர்களுக்காக தெய்வம் செயல்ப்படும் செயல்களை நிரூபித்த நிகழ்ச்சிகளில் ஒன்றே அபிராமிப்பட்டர் வாழ்வில் நடந்த இந்த நிகழ்வாகும். அதாவது அம்பிகையானவள் பதினெட்டு, பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த அபிராமிப்பட்டரின் வேண்டுகோளை ஏற்று செயற்பட்ட வரலாற்றை உலகிற்கு எடுத்துக்காட்டுவதற்காக இவ்விழா தை அமாவாசை அன்று சைவ ஆலயங்களில் முக்கியமாக அம்மன் ஆலயங்களில் கொண்டாடப்படுகின்றது. அபிராமி அந்தாதி பராசக்தியை வழிபட்ட அந்தணரான அபிராமிப்பட்டரால் பாடப்பட்டது. அந்தாதி (அந்தம் முடிவு, ஆதி துவக்கம்) என்பது ஒரு பாடல் முடியும் சொல்லிலிருந்து மறு பாடல் தொடங்குவதாகும்.
தைப்பொங்கல் (சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி)
“தை பிறந்தால் வழி பிறக்கும்” என்பது பழமொழி. தைப்பொங்கல் தமிழர்களால் சமயங்கள் கடந்து தமிழர்கள் வாழும் எல்லா நாடுகளிலும் கொண்டாடப்படும் ஒரு விழாவாகும். தைமாதம் சூரியன் மகரராசிக்குள் (மகரசங்கிராந்தி) பிரவேசிக்கும் நாள் தைப்பொங்கலாகும். அதாவது தட்சணாயன காலத்தில் விலகிச் சென்ற சூரியன் உத்தராயன காலத்தின் தொடக்கமாக மகரத்தில் பிரவேசிக்கும் நாள். இது முழுக்க ழுழுக்க உழவர் சம்பந்தப்பட்ட விழாவாக இருந்தாலும் எல்லோராலும் கொண்டாடப்படும் ஒரு விழாவாகும். சங்ககாலத்தில் இருந்தே இவ்விழா நடப்பதற்கான ஆதாரங்கள் உள்ளன. உழைக்கும் மக்கள் நாட்டில் மழைபெய்து பூமி நல்ல விளைச்சலைக் கொடுத்ததற்காச் சூரியனுக்கும் (இயற்கைக்கும்), பூமியை உழுவதற்குப் பயன்படுத்திய மாட்டிற்கும் (மற்ற உயிரினத்திற்கும்) நன்றி தெரிவிக்கும் முகமாக அறுவடைக்கு முன்பாக சிறிது நெல்லை அறுவடை செய்து அரிசியாக்கி சர்க்கரைப் பொங்கல் பொங்கிப், படைத்து வழிபட்ட விழாவே பொங்கல் திருநாளாகக் கொண்டாடப்படுகின்றது,
திருவெம்பாவை
(சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி) இந்துக்களால் மார்கழி மாத திருவாதிரையை இறுதி நாளாகக் கொண்டு பத்துத் தினங்கள் திருவெம்பாவை விரதம் கடைப்பிடிக்கப்படுகின்றது. முற்காலத்தில் இவ்விரதத்தை கன்னிப் பெண்களே கூடுதலாகக் கடைப் பிடிப்பர் இந்த நாட்களில் கன்னிப் பெண்கள் அதிகாலையில் எழுந்து தம் தோழியரையும் அழைத்துக் கொண்டு நீர் நிலைகளுக்குச் சென்று நீராடி அருகில் உள்ள சிவன் கோயிலுக்கு சென்று இறைவனைத் துதித்து வழிபடுவர். இந்நிகழ்ச்சியை வைத்தே மாணிக்கவாசகப் பெருமான் திருவெம்பாவைப் பாடல்களைப் பாடினார். இன்றைய நாட்களில் பொதுவாக எல்லாச் சைவ ஆலயங்களிலும் அதிகாலையில் திருவெம்பாவைப் பூசைகள் நடத்தப்பட்டு கீழே உள்ள திருவெம்பாவைப் பாடல்கள் பாடப்படுகின்றது. பத்தாம்நாள் திருவாதிரை அன்று சிவன் ஆலயங்களில் “ஆருத்திரா தரிசனம்” இடம்பெறும். இந்தப் பத்து நாட்களும் இலங்கையில் சைவசமயத்தவர்கள் வாழும் ஊர்களில் சிவ தொண்டர்கள் அதிகாலை எழுந்து வீதி வீதியாகச் சென்று சங்கு ஊதி, சேமக்கலம் அடித்து திருவெம்பாவைப் பாடல், திருப்பள்ளி எழுற்சிப் பாடல் மற்றும் திருமுறைப் பாடல்களைப் பாடி ஊர் மக்களை நித்திரையால் எழுப்பி ஆலயத்திற்கு அதிகாலைப் பூசைக்கு போவதற்கு ஊக்கப்படுத்துவார்கள். |
என்னைப்பற்றிநாகேந்திரம் கருணாநிதி பதிவுகள்
August 2023
முழுப்பதிவுகள் |