(சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி)
செல்வம் நிலையற்றது
“அருளும் அரசனும் ஆனையும் தேரும்
பொருளும் பிறர்கொள்ளப் போவதன் முன்னம்
தெருளும் உயிரொடும் செல்வனைச் சேரின்
மருளும் பினையவன் மாதவம் அன்றே” பாடல் 168
அருளுடைய அரச பதவியும், யானைப் படையும், தேர்ப்படையும், திரண்ட பெரும் செல்வமும் எல்லாம் பிறர் கொண்டு செல்வதற்கு முன்பாகத் தெளிந்த உள்ளத்தோடு உயிர்ச் செல்வனாகிய இறைவன் அருளை அடையப் பெற்று விட்டால் பிறகு அவன் பெரிய தவத்திலே கூட மயங்கமாட்டான்.