(நாகேந்திரம் கருணாநிதி)
சைவ சித்தாந்த சாத்திரங்கள் - 12. நெஞ்சுவிடு தூது
நெஞ்சுவிடு தூது. உமாபதி சிவாச்சாரியார் அவர்களால் அருளப்பட்ட சித்தாந்த அட்டகங்களில் ஒன்றாகும். இந்நூல் உமாபதி சிவம் அவர்கள் தனது ஆசிரியரான மறைஞானசம்பந்தரிடம் தனது நெஞ்சைத் தூது விடுத்து அவரிடமிருந்து கொன்றை மாலையை வாங்கிவருமாறு கூறுவதாக அமைந்துள்ளது. இதனால் இந்நூல் நெஞ்சுவிடு தூது எனப்படுகின்றது. இந்நூல் மறைஞானசம்பந்தரைப் போற்றுமாற்போல் அமைந்தாலும் உண்மையில் மானிடச் சட்டை தாங்கிக் குருவாக எழுந்தருளி அடியார்க்கு அருளும் சிவபெருமானையே போற்றுகின்றது. இந்நூல் சைவசித்தாந்த சாத்திரங்களில் இலக்கிய வடிவில் அமைந்த ஒரே நூலாகும். சிற்றிலக்கியங்கள் 96 இல் தூது என்னும் வடிவத்தில் சித்தாந்தக் கருத்துக்களை இந்நூல் விளக்குகிறது. இலக்கிய மரபுப்படி சிவனுக்குத் தசாங்கம் என்று பத்து உறுப்புக்களை உரைக்கின்றது. இதில் கலிவெண்பா யாப்பில் 129 கண்ணிகள் 21 பகுதியாக உரைக்கப்பட்டுள்ளன. இந்நூலில் உள்ள சில பாடல்களைப் பார்ப்போம்.