“ கோயிலில்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் “
“ ஆலயம் தொழுவது சாலவும் நன்று ”
கி.பி. 10 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த, முருகப்பெருமானை நேரில் தரிசித்த, கலைவாணிக்கு நிகரானவர் எனப் போற்றப்படும் மூதாட்டி ஔவையார் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
ஆலயம் என்பது ஆன்மா இறைவனில் லயிக்கின்ற இடம். ஆன்மாவின் ஆணவ மலம் அடங்குவதற்குரிய இடம் எனவும் கூறலாம்.