(நாகேந்திரம் கருணாநிதி)
சைவ சித்தாந்த சாத்திரங்கள் - 10. போற்றிப் பஃறொடை
போற்றிப் பஃறொடை. உமாபதி சிவாச்சாரியார் அவர்களால் அருளப்பட்ட சித்தாந்த அட்டகங்களில் ஒன்றாகும். இந்நூல் பா (பஃறொடை வெண்பா) அமைப்பில் பெயர்பெற்ற நூலாகும். தொடை என்பது இரண்டு அடிகளைக் கொண்டது. இந்நூலில் வரும் பாடல்கள் இரண்டு அடிகளைக் கொண்டதால் பஃறொடை எனவும் ஆசிரியர் தனது குருவைச் சிவப்பரம் பொருளாக எண்ணிப் போற்றிப் பாடியதால் போற்றிப் பஃறொடை எனப் பெயர் வழங்கப் பட்டுள்ளது. இந்நூலில் உள்ள பாடல் ஒரே பாடலாக அமைந்திருந்தாலும் 14 இடங்களில் போற்றி என்ற சொல் வருவதால் 14 தலைப்பின் கீழ் இதன் உரை அமைந்துள்ளது. இதன் பாடலைப் பார்ப்போம்