எனக்கு சின்ன வயதில இருந்தே செத்த வீடு எண்டால் சரியான பயம். எங்கட வீட்டில இருந்து இடது பக்கமா ஒரு எழுநூறு மீற்றர் தூரத்தில ஒரு சுடுகாடு இருந்தது. வலது பக்கமா ஒரு எழுநூறு மீற்றர் தூரத்தில எங்கட ஊருக்குச் சொந்தமான(?) சேமக்காலை ( எங்கட ஊரில 'சவக்காலை' எண்டு சொல்லுவினம்) இருந்தது. அதக் கடந்துதான் நாங்கள் அடிக்கடி பயணம் செய்ய வேண்டி இருக்கும். நடந்து போகேக்குள்ள நெஞ்சு "பக்குப்பக்கு" எண்டு அடிக்கும்.
|
என்னைப் பற்றி
எனக்கு உயிர் கொடுத்து என்னை ஆளாக்கிய மண் காங்கேசன்துறையை அண்டியுள்ள ஊறணி எனும் கடலலை தாலாட்டும் சிற்றூர். மூழ்கி எழுந்த கடலும் மணல் பரப்பும் வானம் கொள்ளா தாரகைகளும் என்னை வாவென்று அழைக்கின்றன. பதிவுகள்
March 2017
"பாட்டன் வழி |