(நாகேந்திரம் கருணாநிதி)
சுத்தாத்துவிதம்
இறைவன் உயிர்களின் பொருட்டு ஐந்தொழில் ஆற்றுவதும், உயிர்கள் வழிபட்டு உய்யும் பொருட்டு உருவம் கொள்வதும் இறைவனின் பொது இயல்பாகும். பாலும் தண்ணீரும் போல உயிரும் உடலும் எவ்வாறு தனித் தனியானவையோ அவ்வாறே இறைவன் உயிர்களோடு ஒன்றாய் நின்றாலும் இறைவன் உயிராகவோ அல்லது உயிர் இறைவனாகவோ இருக்கமாட்டாது. இவ்வாறு இறைவன் உயிரோடு ஒன்றாய், வேறாய், உடனாய் நிற்பதைச் சைவ சித்தாந்தம் “சுத்தாத்துவிதம்” எனக் கூறுகிறது. இறைவன் உயிர்களொடு மட்டுமின்றி மற்ற அறிவற்ற பொருட்களுடனும் அத்துவிதமாய் நிற்கின்றான்.