பேய்கள் வருகின்றன ஊருக்குள்
*** *** *** *** *** ***
அந்தி சாயும் வேளை காற்றில்வந்த செய்தி கேட்டு
முதலில் முற்றத்து பலா ஒப்பாரி வைத்தது.
கிணற்று துலாக்கொடி துவண்டு போனது.
வாசல் கதவு வாய்பிளந்து நின்றது.
முற்றத்தில் முருங்கை மூர்ச்சை ஆனது.
வேலியில் பூவரசு பேச்சிழந்து போனது.
அத்தி மரமும் அழுதது ,
அனாதையாய் போனதாய்.
தோட்டத்தில் வாழை வாயடைத்து நின்றது.
*** *** *** *** *** ***
அந்தி சாயும் வேளை காற்றில்வந்த செய்தி கேட்டு
முதலில் முற்றத்து பலா ஒப்பாரி வைத்தது.
கிணற்று துலாக்கொடி துவண்டு போனது.
வாசல் கதவு வாய்பிளந்து நின்றது.
முற்றத்தில் முருங்கை மூர்ச்சை ஆனது.
வேலியில் பூவரசு பேச்சிழந்து போனது.
அத்தி மரமும் அழுதது ,
அனாதையாய் போனதாய்.
தோட்டத்தில் வாழை வாயடைத்து நின்றது.